<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249</id><updated>2011-11-26T18:34:03.228+05:30</updated><title type='text'>கடவுள் இல்லை</title><subtitle type='html'>கடவுள் இல்லை,
                      கடவுள் இல்லை;
                      கடவுள் இல்லவே
                      இல்லை;
                      கடவுளைக்
                      கற்பித்தவன்
                      முட்டாள்;
                      கடவுளை
                      பரப்பியவன்
                      அயோக்கியன்;
                      கடவுளை
                      வணங்குகிறவன்
                      காட்டுமிராண்டி.

                     -தந்தை பெரியார்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kadavulillai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>197</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5985376048618880642</id><published>2011-08-11T19:04:00.002+05:30</published><updated>2011-08-13T19:30:53.887+05:30</updated><title type='text'>உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...?</title><content type='html'>ராஜீவ் படுகொலைக்குப்  பின்னர் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? உள்நாட்டு, வெளி நாட்டு சதிகளின் முழுமையான தகவல்கள்தான் என்ன? திருச்சி வேலுச்சாமியின் சு.சாமி பங்களிப்பு குறித்து விசாரணைகள் இல்லையா? லிபியாவுக்கு ஓடிய நேட்டோ இலங்கைப்பக்கம் செல்லாததற்கு தனித்த காரணம் என்று ஒன்று உண்டா? இலங்கை அதிபரைப்பார்த்து அமெரிக்க அச்சப்படுவதற்கு தனித்த காரணம் உண்டா? அதேபோல் இந்தியா குறித்தும் ஏராளமான கேள்விக்கணைகள் உள்ளனவே? பதில் உண்டா? இந்தியாவுக்கு அதிக பயன் விளைவிக்காத உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறும் துணிவு உண்டா? குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்கு கொடுத்த நீதிதானே இப்போது மீதம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்? சரியோ, தவறோ யாருக்காவது எப்படியாவது தூக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று சடங்கு ஆக்குவதா? (சடங்கு என்றால் காரண காரியம் கேட்கப்படாது)&lt;br /&gt;சிங்களவனால் தமிழக மீனவர் (இந்தியா மீனவர்?) பாதிப்புக்குள்ளாவதை தடுக்க வேகமான முடிவுகள் எடுக்காத மத்திய அரசை ஏன் என்றாவது இதுநாள்வரை குறைந்தபட்சம் எழுத்து மூலமாகவாவது கண்டித்து, கேட்டிருப்பாரா இந்திய குடியரசுத்தலைவர்? அவர்தான் முப்படைகளுக்கும் தலைவர்?&lt;br /&gt;உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...? குற்றவாளி தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறப்படுவது எல்லாம் என்னவாயிற்று?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5985376048618880642?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5985376048618880642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5985376048618880642'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/08/blog-post.html' title='உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...?'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-242540323211442649</id><published>2011-03-18T20:06:00.001+05:30</published><updated>2011-03-18T20:07:56.455+05:30</updated><title type='text'>கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!</title><content type='html'>கழக உறவுகளின் ஒத்துழைப்போடு, அன்போடு&lt;br /&gt;உயிரினும் மேலான என் லட்சியப் பயணம் தொடரும்!&lt;br /&gt;&lt;br /&gt;கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப்பிறகு கழகப் பொறுப்பை ஏற்ற இந்த நாளில் (18.3.1978) தமது வெற்றிப் பயணத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;நம் அறிவு ஆசான் தலைவர்  தந்தை பெரியார்  அவர்களையும், அவர்கள் உருவாக்கிய அரியதோர் புரட்சி இயக்கமாம் நம் திராவிடர் கழகத்தையும் பாதுகாத்து கடமையாற்றிய தியாகத்தின் புடம்போட்ட தங்கம் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்த (16.3.1978) பிறகு, அய்யா, அம்மா ஆகியோரின் கட்டளைப்படியும், கழகப் பெருங் குடும்பமான பெரியார் தொண்டர்களாம் நம் இருபால் தோழர்களின் ஆணைப்படியும் நான் பொறுப்பேற்று, 32 ஆண்டுகள் முடிந்து, 33ஆம் ஆண்டுப் பணி தொடங்கும் நாள் இன்று (18.3.2011).&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தூக்கிச் சுமந்த தோள்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் நூற்றாண்டு தொடங்கியது அப்போது; அது முதற்கொண்டு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும், வம்புகள், வசவுகள், வல்லடி வழக்குகள், இவை ஒருபுறம் நம்மை நோக்கி!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருபுறம் நல்லெண்ணம் படைத்த சான்றோர்கள் பலரும் இந்த எளியவனுக்கு ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்து உயரத்தைக் காட்ட தத்தம் வாழ்த்துரை, பாராட்டுரை என்று அவர்தம் வலிமைமிக்க தோள்களில் என்னைத் தூக்கிக் காட்டி, பெரியார் இயக்கம் குன்றென உயர்ந்த இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் மான வாழ்வுக்கும், உரிமைப் போருக்கும் என உழைக்கும் ஒரே சமூக இயக்கம் என்பதால் இது தாழ்ந்துவிடவோ, வீழ்ந்து விடவோ கூடாது என்று, இனமானம் கருதி எமக்குப் பேராதரவு தரத் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கழகக் குடும்பங்களில் உள்ள நம்முடைய உறுப்பினர்கள், தாய் தந்தையர்களைப் போன்றும், உற்சாகம் குன்றா உடன்பிறவா சகோதரர்கள் போலவும் உள்ளனர். ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசத்தைக் கொட்டிடும் குடும்பங்களாக ஆதரவு நல்கி, கொள்கைப் பாதையிலிருந்து துளியும் நழுவாமல், வழுவாமல் உறுதியுடன் நடைபோட்டு, பயணங்களில் சூறாவளிகளும் சுனாமிகளும் சுழன்றடித்தாலும் சோர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பெருந் துணையாக நிற்கின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி வேறுபாடுகளைக்  கருதாமல், இன உணர்வோடு எமது பயணத்தை நடத்திட, என்றும் உரமூட்டும் நண்பர்கள் அனைத்துக் கட்சிகளிலும் ஏராளம் - உலகம் முழுவதும்!&lt;br /&gt;&lt;br /&gt;எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெருந்தொண்டினால் விளைந்த கதிர்மணி களைப் போன்றவை. எனவேதான் எத்தனை இடுக் கண்கள் வந்தாலும் எமது பயணம் எப்போதும் இலக்குத் தவறாத இனிய பயணமாகவே நடைபெற்றுக் கொண் டிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இளமைமுதல் இன்றுவரை யாமறிந்த கொள்கை, தலைமை, அது தந்த லட்சியப் பாதை - இவற்றைக் கட்டிக் காப்பதை கண்ணை இமை காக்கும் கடமைபோல் செய்து வரும் எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி; எவ்வளவு உற்சாகம்!&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பதவிகளை, புகழை நாடாத மான வாழ்விற்கு சுயமரியாதை சுகவாழ்வினைப் பெரியாரால் பெற்றோம். துயர் வரினும் துணிவுடன் எப்போதும் பயணிக்கும் ஆற்றலை அதனால் பெற்றோம் என்று எண்ணி மகிழ்வதே - இப்பணிக்கு யாம் பெறும் ஊதியம் ஆகும்!&lt;br /&gt;இடையில் உடல் நலம்கூட போதுமான ஒத்துழைப்பு தருவது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். மருத்துவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி பெறுவதற்கான கிரீடம் அல்ல எனக்கு அய்யா அம்மா தந்திட்ட பொறுப்பு. நேர்த்தியுடன், நேர்மையுடன் லட்சியங்களை செயல் களாக்கிக் காட்டிடும் செழுமிய பணியாற்றுவதற்கே என்று கருதி என்றும் உழைத்துக் கொண்டிருப்பவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது போனஸ் வாழ்வு!&lt;br /&gt;&lt;br /&gt;இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது, இப்பணிக்குக் கிடைத்த போனஸ் வாழ்வு - பொருளற்ற வாழ்வாகி விடக் கூடாது;  பொறுப்புகளை சரிவர நடத்தும் பொன்னான வாய்ப்புள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற உறுதியும், ஒவ்வொரு கழகக் குடும்பத் தவரும் காட்டும் பரிவும், பாசமும் என்னை உழைத்துக் கொண்டே இரு; ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து மறுபணிக்கு மாறுவதே என்ற உன்னதத் தத்துவத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இலக்கு நோக்கிய இந்த இயக்கப் பணிகளில் - பயணத்தில் - அடைந்த வற்றைவிட, அடைய வேண்டியவை ஏராளம்!&lt;br /&gt;&lt;br /&gt;எம் பணி தொடரும்!&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் கொள்கை, மானுடத்தின் மகத்தான விடியலை ஏற் படுத்தும் புது நெறி; புரட்சி வழி என்பதால் அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ய, சோர்வறியாது உழைக்க, மேலும் உறுதி எடுத்துக்கொண்டு, இப் பணிக்கு எம்மை உற்சாகப் படுத்தும் கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், சான்றோர்களுக்கும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அடக்கத்தோடு அரும்பணி தொடர அனைவரது ஒத்துழைப்பையும் யாசிக்கிறோம்; உயிர் மூச்சுள்ள வரை, உயிரைவிட மேலான லட்சிய மான பெரியாரின் தத்துவங்கள், உலக மக்கள் நெஞ்சில் விதைக்க எம்பணி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாணயம் தவறாத நல்வாழ்வு என்ற கொள்கை வாழ்வாக அமையட்டும் நம் வாழ்வு!&lt;br /&gt;உங்கள் தொண்டன், தோழன்,&lt;br /&gt;&lt;br /&gt;கி. வீரமணி&lt;br /&gt;தலைவர்,&lt;br /&gt;திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/component/content/article/40-current-news/5645--33-.html?sms_ss=blogger&amp;at_xt=4d836d8911ffcd66%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-242540323211442649?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/242540323211442649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/242540323211442649'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/33.html' title='கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6905658577227647775</id><published>2011-03-15T10:39:00.000+05:30</published><updated>2011-03-15T10:39:52.353+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-53</title><content type='html'>இவ்வாறு ராணியைச் செய்ய முடியாமல் போயிற்று. பல பாராக்கள் இருந்ததாலும், ராணியென்று நினைத்து வேறொருத்தி காலைப் பிடித்திழுத்ததாலும் அவர்கள் ஜீவித்துக் கரையேறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நன்குணர்ந்த தமிழ் மந்திரியானவர் ஒரு மாசம் காசி ராஜாவிடத்திலிருந்து தன் தொழிலை முறையாகப் பார்த்ததுடன், பார்ப்பனர்களுக்கும், காசி குண்டாக்க ளென்ற போக்கிரிக் கொலைகாரர்களுக்கும் பெரும் உதவிகள் செய்து, பெருந் தர்மாத்மா என்று பேர் வழங்கும்படிச் செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதம் போக, ஒரு தந்திரமாகத் தஞ்சாவூர் ராஜனிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவும், அக்கடிதத்தில் வரைந்துள்ள விஷயங்கள் தஞ்சாவூர் ராஜாவினுடைய முத்து வியாபாரக் கப்பல் சமுத்திரத்தின்கண் அமிழ்ந்து போனதாகவும், அக்கப்பல் எவ்வளவோ கோடி ரூபாய்க்கு இரத்தினங்கள் நிறைந்த தென்றும், அவைகளை மூழ்கி எடுப்பவர்கட்குத் தினம் ஒன்றுக்கு ரூ.10-ம், பக்கா போஜனமும் அளிப்பதாகவும் பிறகு, எடுத்த பொருளிலிருந்து தகுந்த பங்கு கொடுப்பதாகவும், அதற்கு எவ்வளவு ஜனங்கள் கிடைத்த போதிலும் வேலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளுகின்றே னென்றும், ஆனால், குறைந்த அளவு ஒரு மணி நேரத்திற்கு மேல் எவ்வளவு நேரம் அதிகம் மூழ்கிப் பழக்கப்பட்டவர்களானாலும், அவர்களுக்கு அதிக சம்பளமும், பக்கா போஜனமும் கொடுக்கப்படவேண்டு மென்றும், இதற்கு ஜனங்களைச் சேர்ப்பதற்குத் தனிச் சம்பளங்கொடுப்பதென்றும் பிரசித்திப்படுத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விளம்பரம் பண்ணவே, ஒரு மாதத்துக்குள் 370 ஜனங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையிலும் தண்ணீரில் மூழ்கிப்போக வல்லவர்களாய்ச் சேர்ந்தார்கள். பிற்பாடு மந்திரியானவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டதாவது: &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது அய்ந்நூறு பேராவது சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய வேலை கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு அவர்களில் தலைவனாகிய ஒருவன், இப்போது காசியிலுள்ள ஜனங்களில் நீரில் மூழ்கப் பழக்கமுள்ளவர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாய் இன்னும் வேண்டுமாயினும் கான்பூரிலும் கிடைப்பார்கள் என்று பதில் கூறினான். கான்பூரிலிருந்து ஜனங்களை அழைத்துவர நாளாகும். வேண்டுமானால் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, நாம் நாளைக்குப் புறப்பட வேண்டும். வீட்டில் இருக்கிற பெண் மக்களுக்கு மாதச் செலவுக்கு ராஜாங்கத்திலிருந்து மாதப் பணங்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டியதிருக்கிறது என்று சொல்லி, இந்த ஜனங்கள் அத்தனை பேர்களையும் வைக்கோலினால் செய்த ஒரு பெரிய கோட்டைக்குள் ராத்திரி படுக்கச் செய்து, நாளை காலையில் 3 மணிக்கு யாத்திரை செய்ய வேண்டுமென்று, அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நடுநிசியாக 12 மணி நேரத்திலே சிப்பாய்களை வரவழைத்து, நீரில் முழுகி, முழுகிப் பழக்கப்பெற்றோர் படுத்துக்கொண்டிருக்கும் கோட்டையை ஒரே சமயத்தில் பலவிடங்களிலும் நெருப்பு வைத்து எரியச் செய்தனர். உடனே ஜனங்கள் எழுந்திருந்து ஓடிப்போக முயன்றபோது, வழி கிடைக்காமல் நெருப்பில் வந்து விழுந்து வெந்து மாண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் தப்பி யோடிய சிலரைக் குண்டு போட்டுச் சுட்டுப் போட்டார்கள். அதற்குப் பிற்பாடு கங்காதேவி நகை போட்டவர்களை அழைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டாள். இப்பொழுதுங்கூட பூரணமாக நிற்கவில்லை. சில சமயங்களில் நகைகள் பெருக்க அணிந்துகொண்டு ஏமாந்து நீராடும் ஜனங்களைக் கங்காதேவி அழைப்பது வழக்கம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலங்களில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், யாத்திரையாக வந்த ஜனங்கள் பார்ப்பனர்கள் சொல்லக்கூடிய கருமங்களையெல்லாம் செய்து, போகுந்தருணத்தில் அவர்களுடைய விலாசம் முதலியவற்றை எழுதின பின்பு விருந்திடுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இரண்டு பேர் மூன்று பேரானால் இராத்திரிக்கே கங்கையில் போய்விடுவார்கள். அவர்கள் கொடுக்கும் சில சாமான்களில் யாதோ கலந்து கொடுப்பதென்பது உலகப் பிரசித்தம். &lt;br /&gt;&lt;br /&gt;பிணங்களை எடுத்துக் கங்கையில் போடு வதற்கும் ஒருவனைக் கொலை பண்ணுவதற்குங்கூட மூன்று ரூபாயிலிருந்து அய்ந்து ரூபாய் வரைக்கும் போதுமாம். இதைக் காசி யாத்திரை போகிறவர்கள் நன்றாய் விசாரித்துத் தெரிந்து வரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மேற்படி செய்கை செய்கிறவர்களில் கேதாரக் கட்டத்தில் கோவிந்தானந்தன் என்னும் பெயருள்ள ஒருவன் இன்னும் ஜீவித்திருக்கிறதாக ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்திகளை நன்றாய் வாசித்துக் கவனத்தில் வைத்து விசாரித்து நம்பினால் போதும். தீர்த்த, ஸ்தலங்களும் நமது ஆலயங்களும், விபசாரம், பொய், திருட்டு, கொலைகள் என்கிற பஞ்சமா பாதகங்கள் செய்யும்படிக் கற்றுக்கொடுக்கும் ஒரு பஜார் அல்லது பள்ளிக்கூடமாக முடிந்ததைப் பற்றி யார்தான் வருந்தாமலிருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;வேதசாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள் ரிஷிபுங்கவர்களின் பிறப்புத் தன்மை&lt;br /&gt;கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், கவுசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், வால்மீகி வேடனுக்கும், அகஸ்தியர் குடத்திலும், வியாசர் செம்படத் திக்கும், வசிஷ்டர் ஊர்வசிக்கும், நாரதர் வண்ணாத் திக்கும், காதனசல்லியர் விதவைக்கும், மதங்கர் சக்கிலிச்சிக்கும், மாண்டவியர் தவளைக்கும், சாங்கியர் பறைச்சிக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜம்புவந்தர் கரடிக்கும்,அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;(நிறைவு)&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/5410---53.html?sms_ss=blogger&amp;at_xt=4d7ef4666d2208af%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6905658577227647775?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6905658577227647775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6905658577227647775'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/53.html' title='ஞானசூரியன் தொடர்-53'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-4650770112206930790</id><published>2011-03-15T10:38:00.000+05:30</published><updated>2011-03-15T10:38:16.930+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-52</title><content type='html'>வயது முதிர்ந்த ராணியோ, இருக்கப்பட்ட விலையுயர்ந்த எல்லா நகைகளையும் அணிந்து பல தாதிகளுடனும், ராஜஸ்திரீகளோடும் தனது புத்திரனாகிய ராஜனோடும், நான் இன்றைக்குக் கங்கையோடு சமமாகக்கலந்து வாழப் போகிறேனென்று யாத்திரை சொல்லிக் கங்கை வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அக் கிழராணியைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லோரும் ஒவ்வொருவருடன் ஒவ்வொருவரும் பலமாகக் கோத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். கிழ ராணியின் முப்பக்கங் களிலுமிருக்கிற பெண்கள் அடிக்கடி மாற்றி நின்று கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருக்கப் பார்ப்பனப் புரோகிதர்கள் அங்குமிங்குந்திரிந்து ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டும் மார்பைத் தடவி நெடு மூச்சுவிட்டுத்   துக்கித்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தருணத்தில் வரிசையாய் நின்று கொண்டிருந்த தாதிகளில் ஒருத்தியைக் கங்காதேவி நீரிலிழுத்துவிட்டாள். அவர்களோ, முன்னமே ஒருவருக்கொருவர் சேலையை முடிபோட்டுக் கொண்டிருந்ததாலும், கைகளை ஒருவருக் கொருவர் பலமாகக் கோத்து உறுதியாகப் பிடித்துக் கொண்டதனாலும், நாலு, அய்ந்து தாதிகள் உடனே கங்கையில் விழுந்துவிட்டார்கள். எல்லோரும் ஒன்றுபோல ஒருவருக்கொருவர் பலமாய்க் கைகோத்து இழுபட்டு விழுந்தவர்களையும் கூட விழுந்தவர்களையும் வலித்து இழுத்து யாவரும் கரையேறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதம் கங்கையில் இழுபட்டு விழுந்த தாதியும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டாள். பிறகு, ராணியிடத்தில் மந்திரியும், ராஜாவும் கலந்துபேசி, இனிக் கங்கைதேவி தங்களை இன்றைக்கு அழைத்துப் போகமாட்டாள்; நாளைக்கு எவ்விதமான பூசை போட்டாவது கங்கையை வரவழைப்போம். பிராமணர் களிடத்தில் வேண்டிய விசாரணை செய்து நன்றாகத் தெரிந்துகொண்டு கங்கையோடு தங்களை அழைத்துப் போகாததனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித் தாயாராகிய ராணியை ஸ்நானம் பண்ண வைத்துத் தங்கள் வசிக்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். பிற்பாடு, மந்திரியும் ராஜாவும் கலந்து புரோகிதரையும் மற்றும் பல பார்ப்பனரையும் விசாரித்ததில், அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வருமாறு: கங்காதேவி பாவிகள்நிறைந்த இடத்திற்கு வரமாட்டாள். ஆதலால், ராணி தனியாகவே நீரில் இருக்கவேண்டும். கங்கையில் ஸ்நானத்திற்கு வரும் ஜனங்கள் சிப்பாய்களால் தடை செய்யப்படாமலிருக்க வேண்டும். பாக்கியுள்ள தாதிகளும், ராணியினுடைய சரீரத்தைத் தொடாமலிருக்க வேண்டும். மறைப்புக்குள் ராணி இருக்கக்கூடாது. சில பிராமணர்கள் அங்கிருந்து பூசை செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கங்கை வருவாள். இன்றைக்கு அங்கு வந்தவர்களில் யாரோ பாபிகளிருந்திருக்கலாம். ஆதலால், ராணியைக் கங்கா தேவி தொடாமற்போனதென்றாலும் மற்றொரு தாதியை இழுத்ததற்குக் காரணம், அவள் ஜென்மாந்திரத்தில் பெரிய புண்ணியம் செய்தவளாயிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவங்களில் யாதோ சிறிது சம்பந்தமிருக்கும். அதனால்தான் இவளை இச்சமயத்தில் அழைக்காமல் இருந்தது. இவ்வாறு விஷயங்களைச் சொல்லி முடித்த பின், அவர்கள் எல் லோரும் போய் விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு, மந்திரி யும், ராஜாவும் விலை யுயர்ந்த சாமான் களைச் சன்மானமாக எடுத்துக்கொண்டு போய்க் காசி ராஜாவைத் தரிசித்தபின், இந்தக் கங்காதேவி அழைப்பு விஷயத்தைப் பற்றிச் சிறிது சம்பாஷணை நடந்தது. அப்போது பல பிராமணர்கள் இருந்த காரணத்தால், காசி ராஜாவானவர், ராஜா கேட்ட விஷயத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து, இவ்விருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, காசி ராஜாவானவர் துக்கத்தோடு உள்ள விஷயத்தை உண்மையாய்ச் சொன்னார். அப்போதே இவர்களைத் தாக்கீது செய்து, நான் சொன்ன விஷயம் பிராமணர் களுக்குத் தெரிந்துவிட்டால், எவ்வாறாயினும் சூழ்ச்சி செய்து என்னைக் கொலை செய்துவிட எத்தனிப்பார்கள். அதனால் யான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தாங்களும் இவ்வூரைவிட்டு ராணியை அழைத்துக் கொண்டு தங்கள் சுயராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னார். அதற்கு இந்த ராஜாவினுடைய மந்திரியார், நான் இதற்குத் தகுதியான ஏற்பாடு செய்து, தாங்கள் சொன்ன விஷயத்தைச் சரியாகத் தடுத்துவிடுகிறேன். எனக்கு மூன்று மாத காலம் மந்திரி வேலை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குக் காசிராஜா இசைந்து, அந்த மந்திரியாருக்குக் காசிராஜாவின் மந்திரியின் உத்தியோகத்தை ஆறு மாத காலத்துக்குப் பார்க்கும்படியாகக் கொடுத்துவிட்டார். கங்கையோடு சேரப்போன ராணியும், மகாராஜாவும், ராஜாங்கமும், திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இந்தத் தமிழ் மந்திரி, காசிக் கங்கையில் எவ்வாறு ஜனங்கள் இழுக்கப்பட்டுப் போகிறார்கள் என்பதை விசாரணையில் விளங்கிக் கொண்டார். அது விபரமாவது: காசி நகரத்தில் கருவெட்டல் நிறுத்தப்பட்ட பிற்பாடு, அந்நாட்டிலிருக்கும் பார்ப்பனர்களும் புரோகிதர் களும் அந்நாட்டில் பிரசித்திபெற்றுள்ள தோணியோட்டி களும் வஸ்தாதுகளாகிய ஒருவிதக் கொலைகாரச் சோம்பேறி மடையர்களும் ஒற்றுமையுடன் கலந்து செய்யும் நிகழ்ச்சியாம். தோணியோட்டிகளும், சோம்பேறிகளும் தண்ணீரில் 3 அல்லது 4 மணிநேரம் மூழ்கிக் கிடக்கப் பழகி, ஜனங்கள் ஸ்நானம் பண்ண இறங்கும்பொழுது கூடவே அவர்களும் இறங்கிக் காலைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குக் கீழாகவே ஒரு மைல் தூரங்கொண்டு போய்க் கொலை செய்து, நகைகளைக் கொள்ளை கொள்ளுவதும் வழக்கமாம். இந்த நகையில் கொலை பண்ணுகிறவனுக்கும், புரோகிதனாகிய கங்கா புத்திரனுக்கும் சமமான பங்குள்ளதாம்.         -தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/5342---52.html?sms_ss=blogger&amp;at_xt=4d7ef406fd124525%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-4650770112206930790?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4650770112206930790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4650770112206930790'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/52.html' title='ஞானசூரியன் தொடர்-52'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-4298327133377145245</id><published>2011-03-11T18:03:00.001+05:30</published><updated>2011-03-11T18:04:28.049+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-51</title><content type='html'>தற்காலம் மாட்சிமை தங்கிய கனம் ஆங்கிலேய அரசாட்சியால் இக்கொடுஞ் செய்கைகள் தடுக்கப்பட்டிருக் கின்றன. இதுபோன்ற பல இந்துமதாச்சாரக் கொடுமை களும், காருண்ய கவர்ன்மெண்டாரால் தற்காலம் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சககமனம் (உடன் கட்டை யேறுதல்), காளிகோயில் நரபலி முதலியனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காசியின் இரண்டாவது மோசம் அதாவது, அரசாங்கத்தாரால் அக்கருவெட்டல் தடுக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு சூழ்ச்சியால், அவ்வன்கணாளர்களாகிய பார்ப்பனர்களோவென்றால், யாத்திரைவாசிகளைக் கொலை செய்து ஜீவனோபாயம் சிறிது காலம் செய்து ஜீவித்து வந்தார்கள். அந்தச் சூழ்ச்சி எவ்வாறெனின், சில காலத்திற்கு முன் படிப்பும், நாகரிகமும் முறையாக இக்காலத்திலுள்ளது போலில்லை என்று எவர்களும் அறிவார்களல்லவா! அக்காலங்களில் தனவான்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும் மிகுதியாயணிந்த தமது தனப்பெருக்கத்தைப் பிறருக்கு அளிப்பது வழக்கம். இப்போதும் அது முற்றும் குறைந்தபாடில்லை. சில அறிவீனர்கள் தங்கள் தங்களுடைய குழந்தை களுக்கு அதிகமாக ஆபரணங்கள் அணியச் செய்து அழகு பார்க்குங்காரணத்தால் குழந்தைகள், திருடர்கள் கையினால் கொலையுண்டு போவதை அடிக்கடி கேள்விப் படுகிறோமல்லவா? அவ்வாறே அக்காலத்தில் காசி யாத்திரை செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் மிகுதியான நகைகளணிந்து காசிக்கு வருவார்கள். இங்ஙனம் யாத்திரைவாசிகளுக்கு உடனிருந்து கருமஞ் செய்விக்கும் குருக்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர் களிடஞ் செல்லுவர். அப்புரோகிதர் நிலை யாதெனில், கொலை செய்யும் இரண்டு குண்டர்களையும் (தடிச் சோம்பேறிகள்) பல போக்கிரிகளையும் உடன் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்குண்டர்களோ 3,4,5 மணிநேரம் ஜலத்தினுள் மூழ்கியிருக்குந் தன்மையில் பயிற்சி பெற்றவர்கள். இப்புரோகிதன் தன்னையடைந்த யாத்திரைக்காரர் களைஅழைத்துக் கங்கையில் சங்கற்ப ஸ்நானம் செய்யப்போகும் தருணத்தில் குண்டர்களிலொருவனை உடன் அழைத்துச் செல்வான். கங்கையை அடைந்து மூழ்குந் தருணத்தில் இக் குண்டனானவன் இவர்களுடன் தானுமொருவனாய், மூழ்கியவர்களில் மிகுதியாக நகை அணிந்திருக்கும் ஆணையாவது, பெண்ணையாவது ஜலத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கப்பால் இழுத்துக் கொண்டு போய்விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சி நின்றோர் ஸ்நானம் முடிந்த பின்னர் உடனிருந்து காணாமற்போன தமது அருமை மகனெங்கே? மகளெங்கே? என்று தேடித் திகைக்குங்கால், அந்தக் கங்கைக்கரையிலுள்ள பார்ப்பனர்கள் இக்குருக்களுடன் கூடிக் கொண்டு, மணியடித்து அர்ச்சித்துக் கற்பூரமேந்தி பற்பல வடமொழிப் பாட்டுகளைப் பிதற்றிக் கங்கைக்குப் பூஜை செய்வார்கள். அத்தருணம் கங்கைக்கரையில் பெருங்கூச்சலாகவே இருக்கும். காணாமற் போனவர் களுடைய பெயரைக் கேட்டு, அவர்களைக் கங்கா தேவியே வந்து அழைத்துச் சென்றாளென்றும், அவர்கள் மிகுந்த பாக்கியவான்களென்றும், அப்புண்ணியவான்களின் பொருட்டல்லவா எங்களுக்கும், உங்க ளுக்கும் அக்கங்கா தேவியின் தெரிச னங்கிடைக்கப்பட்ட தென்றும், இதனால் உங்களுடைய குடும் பம் இனிமேல் மிக க்ஷேமமடையுமென் றும் சொல்லிக் கங்கையின் பேரிலும் விஸ்வநாதர் பேரிலும் பாக்கள் பாடி, அவர்களுடைய துக்கத்தை மாற்றுவார்கள். பறிகொடுத்த யாத்திரைவாசிகள் மனங்கொதித்துக் கண்ணீர் வடிய, மெய்சோர்ந்து, கன்றிழந்த பசுவைப் போலும் கதறிக் காசி யாத்திரை போதுமென்றும், சொல்லித் தம் நாட்டிற்குத் திரும்புவார்கள். அந்தோ! இவ்வாறு சிறிது காலம் நடந்தேறிய பின்னர், கங்காதேவி புனிதர்களை அழைத்து அழியாப்பதவியாகிய சுக வாழ்க்கையை நல்குகிறாளென்ற வசனம் எங்கும் பிரசித்தமாய்விட்டது. அவ்வாறிருக்க, நமது தென்னாட்டு அரசர்களில் ஓர் அரசனுடைய தாயாரிடத்தில் பார்ப்பனர்கள் சென்று காசி மகிமைகளைப் பற்றிப் பலவிதமாகச் சொல்லி, அதற்குச் செல்ல வேண்டுமென்னும் ஆசையை எழுப்பவே, அந்த வயது முதிர்ந்த இராணி கங்கா தேவியிடம் போய், அழியாப் பதவிகளாக வேண்டுமென்று எண்ணங் கொண்டாள். என்னையும், கங்காதேவியார் கருணை புரிந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவாளா? என்று கேட்டதற்கு, அந்தப் பிராமணர்களுடைய விடை யாதெனில், ஓ மகாராணியே! பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்கிறவர்களையும், ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கக் கூடிய புண்ணிய சீலர்களையும், மட்டுமேதான் அப்பதவிக்கு அழைப்பது வழக்கம என்று கூறினர். இவற்றைக் கேட்ட நாள் தொடங்கி அந்த இராணியானவள், அரண்மனை யிலுள்ள பொருள்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தும், நகைகளைப் புதிது புதிதாகச் செய்து அணிந்து கொண்டும் வந்தாள்! பிறகு தனது புத்திரனாகிய ராஜனோடும், ராஜ அங்கங்களோடும் புறப்பட்டுப் போய்க் காசியைச் சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது பார்ப்பனர்களும், ராஜபுரோகிதர்களும் கலந்து அநேக லக்ஷம் பெறுமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிற இராணியைக் கங்கையில் இழுத்துச் செல்வது எவ்விதமென்று யோசனை செய்து தீர் மானித்தனர். ஆனால், கங்கையோ ஸ்நானஞ் செய்யுமிடம் மிக ஆழமாயும், பல ராஜ ஸ்திரீகளும் அவரவர்களுடைய தாதிமார்களுஞ் சேர்ந்து ஸ்நானக் கட்டத்தில் நமது மகாராணியை இன்றைக்குக் கங்காதேவி அழைத்துக் கொண்டு போவாளென்று எதிர்பார்க்கிறதாயிருந்தாலும், ஸ்நானம் செய்யுமிடம் பெரிய கூடார, மறைவினால் முப்பக்கமும் மதில்போல் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மறைப்பைச் சுற்றிலும் பல சிப்பாய்களும், துப்பாக்கியுடன் பாராக் கொடுத்திருந்தனர். ஆதலால், இவர்களுடன் மற்ற ஜனங்களுமிறங்கி ஸ்நானஞ் செய்ய முடியாமற் போயிற்று. -தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/5184.html?sms_ss=blogger&amp;at_xt=4d7a13e77e9ac6c6%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-4298327133377145245?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4298327133377145245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4298327133377145245'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/51.html' title='ஞானசூரியன் தொடர்-51'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6890386585244767557</id><published>2011-03-10T20:10:00.000+05:30</published><updated>2011-03-10T20:10:45.958+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-50</title><content type='html'>இவ்வாறு பவுராணிக மதத்திலுள்ள முக்தி முறைகளை ஜனங்களுக்குப் போதித்துப் பலவிடங்களிலும் பலவிதமாகப் பார்ப்பனர்கள் மனிதர்களைக் கொலைபுரிந்து ஜீவித்து வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததில், உதாரணமாக ஒன்றை மட்டும் எடுத்து விவரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காசி க்ஷேத்திரமென்கிற நகரத்தில் இறக்க முக்தி யென்று ஜனங்களுக்கு ஓதியுணர்த்தினர். அக்காரணத்தால் காசிக்கருவெட்ட லென்றவோர் படுகொலை நிகழுமிடமும் ஏற்பட்டு ஆங்குப்படு கொலைகளும் நடந்துள்ளன. எவ்வா றெனின், பார்ப்பனர்கள் இப்போது நடப்பதுபோலவே அங்குமிங்குஞ் சென்று, காசியிலிறக்க, தரிசிக்க, நினைக்கப் புண்ணியமுண்டென்றும், மோட்சம் உண் டென்றும் ஜனங்களுக்குப் போதித்து வந்தார்கள். ஆதலால், மனிதர்கள் இக்காலத்தில் போகிறது போலவே, காசிக்கு யாத்திரை போய் வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப் பொழுது காசி நகரத்திலுள்ள பார்ப்பனர்கள் கோடீஸ்வரர் களாக இருந்ததாகவும், சொல்லுகிறார்கள். தெய்வ பக்தியும், குரு விசுவாசமும் முற்காலத்தில் அதிகமாக மக்களுக்கு மூடத்தன்மையாக இருந்ததென்று தெரியவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே தனப்பெருக்கும், ஞானமின்மையும் நிரம்பியி ருந்த காலம் அல்லவா? காசி யாத்திரையை எண்ணி யெண்ணி வயது முதிர்ந்தவர்களும், சிறுவயது உடைய வர்களும் குடும்பசகிதமாகக் காசி யாத்திரை செய்து புண்ணியம் சம்பாதித்து வருவோமென்றும், எண்ணிப் பணத்தை ஏராளமாய் எடுத்துக்கொண்டு குடும்ப சகித மாய்ப் போகும்பொழுது, வழியில் அக்காலத்திலுள்ள திருடர், வழிபறிப்போர் முதலாகிய பல ஈடையூறுகளையுங் கடந்து, காசி நகரத்தை அடைவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்தில் நிகழ்வதுபோலவே அக்காலத்தில் யாத்திரைக்காரர்களுக்கு உபகரிப்போராகிய பார்ப்பனர்களும், அவர்களுக்கு உடனிற்போரும் இவர்களை அழைத்து இனிமை கூறி, இட வசதி முதலானவைகளைச் செய்துவருவதும் வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பிறகு காசியிற் செய்யும் சடங்குகளாகிய ஸ்நானம், தரிசனம், சிரார்த்தம், யாத்திரை, சந்தர்ப்பணை, கோதானம், பூதானம் முதலிய கிரியைகளின் வழியாக இவர்களிடத்திலிருக்கிற தனத்தை, எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோலத் தந்திரமாய்க் கசக்கி எடுப்பது இவர்கள் நீண்டகால உத்தியோகமாம். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைச் செய்து முடித்த பின்னர், அவர்களிடம் பணங்களும் அழகுள்ள பெண்களும் இருக்கக் கண்டால், கீழ்வருமாறு உபதேசிக்க ஆரம்பிப்பார்கள். அஃதாவது பார்வதி சமேதாகப் பரமசிவனும் மற்றுமுள்ள தேவகணங் களும் ஒன்று சேர்ந்து வந்து மரணத் தருவாயில் காட்சி கொடுத்து முக்தி கொடுக்குமிடம் இவ்விடத்தில் ஒன்றி ருக்கிறது. அஃது பல இருடிகளும், இராஜாக்களும், பிராமணர்களும், தபசிகளும் தங்கள் சரீரத்தை இழந்து முக்தி பெற்ற இடமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடத்தை அடைந்து தரிசனஞ் செய்வது ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியமில்லாமற் கிட்டுவது அருமை. பெரிய தபசிகளும், ஞானிகளும் பிராமண விசுவாசிகளும் ஆகிய புண்ணிய புருடர்களுக் காகவே அவ்விடம் சிவபெருமானால் அமைக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் கூட்டங்கூட்ட மாகப் பல வட மொழிப் பாட்டுகளை பிரமாணமாகப் பிதற்றி, யாத்திரைக் காரர்களுக்குப் போதிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட யாத் திரைக்காரர்கள் விருப்புற்று, சுவாமிகளே! எங்களை அப்புண்ணிய இடத்தைத் தரிசிக்கச் செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்களாம். உங்கள் விருப்பின் படியே செய்து வைப்போம்; அதற்கு வேண்டிய பூஜோபகாரங்களைச் சேகரித்து, அங்குள்ளோர் உத்தரவு பெற்ற பின்னர் அழைத்துச் செல்லுவோம் என்பார்களாம். இது நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கருவெட்டலென்ற இடமானது சிறியதாயும், மதிலாற் சூழப்பட்டது மாயிருக்க அதனுள், ஒரு பக்கத்தில் ஆழமுள்ள கிணறுக் கொத்த ஒரு பள்ளமும், அதன் மத்தியில் சிவலிங்கமொன்றும் அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கிணற் றுக்கு மேல் சங்கிலியினால் உருட்டப்பட்ட ஒரு சக்கர முள்ளது. கிணறோவெனில், பாதி மூடியிருக்கும். அக் கிணற்றுக்குள் பல தீபங்களையும் ஏற்றி வைத்திருப் பார்கள். அக்கிணற்றைச் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து மந்திரோச்சாடனம் பண்ணிக் கொண்டு, வரும் யாத்திரைக்காரர்களுக்குத் தவசியைப் போல நடத்திக் காட்டுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு குருக்களைக் கெஞ்சிக்கேட்டுக் கொண்டே யாத்திரைக்காரர்கள், கொலைக்களமென்ற றியாத, அந்த மோச இடத்துக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள். சென்ற பின்னர் இளம்பெண்களையும், சொத்துகளையும் தலைவாசலில் நிறுத்தி, மற்றுமுள்ள வயது சென்ற புருடர்களையும், பெண்களையும் (முக்கதி கொடுக்கும் கருவெட்டலென்ற மோச இடத்துக்குள்) தரிசிக்க வாருங்களென்று அழைத்துப் போவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அங்குச் சென்ற பின்னர் பள்ளத்திலுள்ள சிவ லிங்கத்தைக் காட்டி, பார்வதி சமேத பரமேசுவரரும், மற்றுமுள்ள தேவகணங்களும், சப்த ரிஷிகளும் இப்போது வருவார்கள்; &lt;br /&gt;&lt;br /&gt;ஊன்றி நோக்குங்கள் என்று சொல்ல, ஒன்றுமறியாத இவ்வேழை யாத்திரைவாசிகள் அன்போடு அந்தப்பாவிப் பார்ப்பனனுடைய மோச உரையைக் கேட்டுக் கீழே தலைகுனிந்து பார்க்குந் தருணத்தே, மேல் தொங்கவிட்டிருக்கும் இரும்புச் சக்கரத்தை உருட்டி விடுவார்கள். அது கழுத்தைத் துண்டிக்க கிணற்றில் வீழ்ந்து இறந்துவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ! அவ்வேழை மக்கள் இறந்த பின்னர், தலைவாசலில் நிறுத்திவைக்கப்பட்ட அவ்வாலிபப் பெண்களையும், சொத்துகளையும் அப் பார்ப்பன மக்கள் உரிமையாக அடைந்துவருவதும் வழக்கம்.  இப்பார்ப்பன மாக்கள் காசியில் இறக்க முக்தி என்று சொல்லுகின்ற வாக்கியத்தை அடியாகக் கொண்டு உபதேசித்து, இத்தகைய கொடுஞ்செயல்களைக் காசி நகரத்தில் அநேக காலமாக நடத்திக் கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/5116.html?sms_ss=blogger&amp;at_xt=4d78e2a249dc3e90%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6890386585244767557?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6890386585244767557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6890386585244767557'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/50.html' title='ஞானசூரியன் தொடர்-50'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7265996396759138917</id><published>2011-03-06T11:43:00.000+05:30</published><updated>2011-03-06T11:43:17.876+05:30</updated><title type='text'>ஞானசூரியன் - தொடர்-49</title><content type='html'>என் சொல்லம்புதான் அவர்களை அடக்கின. ஆதலால், தாங்கள் பார்ப்பனராகிய எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யலாகாது. மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தங்கள் தாளிணையில் சமர்ப்பிக்கிறேன். என்று சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடம்பரமான கோயில், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, அழகிய சிம்ஹாசனம், கையிலகப்பட்டதைக் கவர்ந்து கொண்டு கம்பி நீட்டியவர்கள் போக எஞ்சியிருப்பவர்களும், ஆபிசார(சூனியன்) மந்திரம் ஜபித்துக் கொண்டிப்பவர் களுமான பார்ப்பனர்கள, எரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான அக்கினிக்குழிகள், அவைகளிற் சொரியும்படிக் கொட்டி வைக்கப்பட்ட விலையுயர்ந்த பண்டங்கள், அக்கிரமமே உருவெடுத்து வந்த அர்ச்சகக் குருவின் அலங்கார வேஷம் இவைகளில் கவனம் செலுத்தி யிருந்த கஜினி, காணிக்கையைப் பெற்றுக்கொண்டு, எங்களைவிட்டுவிட வேண்டு மென்ற சொல்லைக் கேட்டவுடன், சிங்கத்தைப் போற் சீறி எழுந்து, அட காபிர் பன்றியே! என்னைப் பிச்சைக்காரனென்றா நினைத்தாய்? கல்லைக் கடவுளாக வணங்கும் கயவரைக் கருவறுக் கவன்றோ இங்குப் போந்துள்ளேன் என்று கர்ஜிக்க, கல்நெஞ்சக் குருவானவன் கண்களும், கருத்தும் கலங்கக் கஜினியின் காலில் விழுந்து, அய்யனே! இதெல்லாம் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்குள்ள ஏற்பாடுகள்; எங்களைக் காக்க வந்த கடவுளே, உயிர்ப்பிச்சை தந்தருள்க என்று பலதரம் அழுது வேண்டிக் கொண்டான். உடனே கஜினி, இல்லை, இல்லை; உங்களுக்கு நான் இரக்கங்காட்டேன். பகுத்தறிவில்லாப் பாமரர்களை ஏய்த்துப் பணத்தையும், மானத்தையும் பறித்த, மக்களின் பசிப்பிணியைப் போக்கத்தக்க பற்பல அரிய பண்டங்களை, அநியாயமாக அக்கினியிலிட்டு அவைகளைச் சாம்பலாக்கு கிற-அத்தீயையும், கல்லையும் கடவுளாக வணங்கும் நீங்கள், கடவுளுக்குத் துரோகிகளாதலால், உங்களுக்கு இரங்குவது தருமமன்று என்று கூறி, அப்பொக்கிஷத்தைக் காட் டெனச் சொல்லச் சிலவற்றைக் காட்டி, இவ்வளவுதான் உள்ளது எனப் பகர்ந்தனன்.&lt;br /&gt;&lt;br /&gt;கஜினி இக்கோயிலைக் குறித்த விபரமனைத்தும் ஒற்றர்களின் எழுத்து மூலமாக முன்னரே தெரிந்திருந்தவ னாகையால், அவ்வெழுத்தைக் காண்பித்துக் குருவின் கைவிரலில் எண்ணெய்த் துணியைச் சுற்றித்தீ வைக்கச் சொல்ல, அவ்வாறே செய்யவே, அனைத்தையும் காட்டி விட்டான். கஜினியானவன், பொருள் எல்லாம் வாரி யெடுத்தவுடன், தன் படைகளை ஏவிக் கோயிலையும் இடிக்கச் செய்தான். ஆலயமானது அவனியோட வனியாய் அமர, அதுவரை அந்தரத்தில் நின்றிருந்த அற்புத லிங்க மூர்த்தியும் காந்தக்கல்லின் கவர்ச்சியினின்றும் விடுபட்டுத் தரையில் விழுந்து புரண்டது. இதைப் பார்த்த,  அக்கொடிய துலுக்கனுக்குப் பின்னும் கோபம் அதிகரித்துத் தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் அவ்விக் கிரகத்தை ஓங்கி அடிக்க, அது சின்னபின்னமாகச் சிதறி உடைந்து, இரத்தம் பீறிட்டு ஓடுவதையொப்ப முத்து முதலிய ரத்தினங்களையும் கொட்டிற்று. பார்த்தான் கஜினிமுகம்மது; அழைத்தான் பார்ப்பனக்குருவை; அறைந்தான் அடியிற்கண்ட வண்ணம். அட பதரே! கல்லை வணங்குவது கடவுளுக்குச் சம்மதம் இல்லையென்று சொன்னேன். அவ்வுண்மையைக் கண் கூடாகப்பார்; கல்லை  உடைத்தெறிந்த எனக்குக் களிப்பைத்தரும் நவ மணிகளையும், கல்லை வணங்கும் உங்களுக்குக் கடுந்துயரத்தையும் அளித்துவிட்டார்....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரன்ன இழி மொழிகள் பேசிய பின், எல்லாப் பொருளையும் ஒட்டைமீது ஏற்றச் செய்து, அத்தோடு ஆறாயிரம் பெண்களையும், அய்யாயிரம் ஆண்களையும் பிடித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான். இப்பதினோராயிரம் கைதிகளில் எண்ணூறு (800) பேர் மட்டுமே பார்ப்பனர்கள்; ஏனையோர் நம்மவர்கள். ஏன் அவர்களுக்கு இந்தக் கதி வந்தது? பார்ப்பனனைக் குருவாக நம்பினதால்! இவர்களில் ஆண்களுக்குக் குதிரைக்குப் புல் வெட்டுதல் முதலிய வேலையையும், பெண்களுக்குத் துலுக்கச் சிப்பாய்களின் வைப்பாட்டியா யிருத்தலையும் செய்யக் கட்டளையிட்டான். உணவும் முறையே குதிரை தின்று மிகுந்த கடலை, கொள்ளு முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்குத் துலுக்கர் களின் எச்சிலுமாம். இவ்விதமாகப் பாரதநாட்டின் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் சென்றவுடன், அங்குள்ள பெரிய மவுல்வி பார்த்து, அய்யோ அரசரே! இக்காபிர்களுக்கு ஏன் தீனி போட்டு வைத்திருக்கிறீர்கள்? இது நமது நபிநாயகத்தின் திருவாணைக்கு ஏற்ற தல்லவே. ஆதலால், கொன்று விடும் என்று சொல்லச் சூத்திரத்திற்கு அடிமையான அக்கொடிய துலுக்கத் தலைவன், ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டுப் பெண்களைப் பிடித்துக்  கொண்டு போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சரித்திரம் விரிவான புத்தக ரூபமாக உருதுமொழியிலும், குஜராத்தி மொழியிலும் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர், பாரத நாடு என்னும் நம் தாய் நாட்டிற்குச் செய்த தீங்குகள் பலவற்றுள் நம் தமிழ்ச் சகோதரர்களின் உணர்ச்சிக்காக ஒன்றை மட்டும் சுருக்கமாக உதா ஹரித்தேன். மற்றவையும், ஸ்தாலீபுலாக நியாயத்தால் (பதக்கு அரிசிக் சோற்றின் பதம் ஒரு சாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வது போல) தெரிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் குறிப்பைத் தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்தியார்த்தப் பிரகாரத்தில் பதினோராவது அத்தியாயத்தில் பார்க்க.&lt;br /&gt;&lt;br /&gt;காசிக் கருவெட்டல்&lt;br /&gt;&lt;br /&gt;தில்லையைக் காண, காசியிலிறக்க, ஆரூர்ப் பிறக்க, எல்லையிற் பெரிதாம் அருணையை நினைக்கவெய்தலால் முக்தி என்றுரைக்க,&lt;br /&gt;&lt;br /&gt;காஸீயாம்து மரணன் முக்திர்&lt;br /&gt;&lt;br /&gt;ஜனனாத் கமலாலயே&lt;br /&gt;&lt;br /&gt;தர்சனா தர்ப்ரஸரஸி&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்மரணா தருணாசலே&lt;br /&gt;&lt;br /&gt;என்பதை அருணாச்சல புராணத்திற் பார்க்க.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4797.html?sms_ss=blogger&amp;at_xt=4d7325da39c185d3%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7265996396759138917?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7265996396759138917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7265996396759138917'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/49.html' title='ஞானசூரியன் - தொடர்-49'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8653422212612945778</id><published>2011-03-04T17:48:00.000+05:30</published><updated>2011-03-04T17:48:26.851+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-48</title><content type='html'>பொன்னும், மணிகளும் மலை மலையாகக் குவிந்தன. இவ்விதமாக அறுநூறு ஆண்டுகளுக்கு அநியாயப் பார்ப்பனர்களின் அக்கிரமச் செலவுகள் அனைத்தும் போகப் பதினெட்டுக் கோடி ரூபாய்கள் பெரும்படியாக இரத்தினங் களும், இருபது கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள நகைகள், மற்ற பட்டாடைகள் முதலியனவும் மீதியாயின. &lt;br /&gt;&lt;br /&gt;பதினோ ராயிரம் பார்ப்பன மக்கள் அங்கேயே குடியிருந்து, விலாப் புடைக்கத் தின்று, பார்ப்பனரல்லா தார் என்றென்றும் தங்களுக்கு அடிமைகளாகவே இருக்கும்படியான சூழ்ச்சி களைச் செய்து, கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் நமது நாட்டில் இருந்த அரசர்கள் பலரும் இக்கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் தலைவனுக்குச் சிஷ்யர்களாக இருந்தார்க ளெனத் தெரிகிறது. கூர்ஜர அரசர்கள் அறுவரும் சிஷ்யர்கள் என்பதைக் கூறவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;துலுக்கரின் வருகையும், ஆலயத்தின் அழிவும்&lt;br /&gt;&lt;br /&gt;இத்தருணத்தில் இந்து மதத்தை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட துலுக்க அரசர்களின் முதல்வனான முகம்மது கஜினி என்பான், சோமநாத க்ஷேத்திரத்தைக் குறித்துக் கேள்விப்பட்டுக் கொள்ளையடிக்க எண்ணி, 25,000 (இருபத்து அய்ந்தாயிரம்) சைன்னியங்களோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வழியிலே குஜராத் அரசர்களின் ஒற்றர்கள் உண்மையை உணர்ந்து, தங்கள் அரசர்களுக்கு அறிவிக்கவும், அவர் களும் ஆசானாகிய அர்ச்சகப் பார்ப்பானை அணுகித் துலுக்கனின் வருகையைச் சொல்லி, எங்களிடம் நாலரை லக்ஷம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை நாட்டில் வரவிடாமல் வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள் என்று விண்ணப்பித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அக்குருவோ, கோழைப் பயல்களா! நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என்முன் தோன்றி, மிலேச்சன் வருகிறான்; அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாவண்ணம் காப்பாற்றுவோம். ஆனால், விசேஷமாக ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்ன தானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் முதலியனவும் நடைபெற வேண்டும் என்றும் சொல்லி மறைந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால், யுத்தத்திற்குப் போகவேண்டாம். புராணங் களிலும், பிரமாண வாக்கிலும் உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படு கின்றன. இன்று தொட்டாவது நம்பிக்கையோடு ஒழுகுங்கள்; யுத்தத்திற்குச் செலவழியும் பொருளைப் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;அரசர்களும் தாம் கொண்ட கருத்தைக் கைநழுவவிட்டு, அர்ச்சகர்கள் ஆணைப்படி 1,008 யாகசாலைகள் உண்டு பண்ணி, அநேகப் பார்ப்பனர்களை வைத்து ஹோமங்களும், வருண ஜபமும் நடத்திக் கொண்டு வந்தான். அன்றியும் ஜோதிடம் தெரிந்தவர்களென்று பல பார்ப்பனர்களைக் கொண்டு சுபாசுப பலன்களை அவ்வக்காலங்களில் அரசர்களுக்குத் தெரிவித்தும் வந்தான். முகம்மது கஜினியும், சைன்னியங்களும் எட்டு மைல்க ளுக்கப்பால் வந்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கஜினி முதலில் பயந்தானெனினும், தன்னை எதிர்க்க யாரும் வராததைக் கண்டு உண்மையை உணர்ந்துவர ஓர் ஒற்றனை அனுப்பி னான். துலுக்கர் களின் வருகையை உணர்ந்த பார்ப்ப னர்கள் ஏற்கெனவே இருக்கும் 11,000 (பதினோராயிரம்) பேர்வழிகளும் தற்போது வந்திருப்பவர்களும் கலந்து யோசித்து 800 (எண்ணூறு) பேர் தவிர, மற்றவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கஜினியின் வேவுக்காரன் துலுக்கனாகையால், அவன் நெருப்பெரிந்து கொண்டிருக்கும் தீக்குழிகளையும், நெய், கோதுமை முதலிய தின்பண்டங்களை அக்குழிகளில் பலர் சொரிந்து கொண்டிருப்பதையும், பலர் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு ஜபம் செய்வதையும் பார்த்து வியப்படந்தவனாய்த் தன் தலைவனை அணுகி, அரசே, பெரிய தீக்குழிகளில் பலர் கோதுமை முதலிய தானியங் களையும், நெய்யையும் சந்தனக் கட்டை முதலிய மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் போட்டு எரிக்கிறார்கள். அன்றியும் மனிதர்களின் தலைகள் பல தண்ணீரில் அசையாமல் மிதந்து கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஊரெல்லாம் புகையால் மூடிக் கொண்டிருக்கின்றன. வேறொன்றுங் காணேன் எனத் தெரிவித்தான். 1கஜினியும் அறிவிலிகளாகிய அவர்களை அடக்குவதில் அச்சமொழிந்த வனாய்ச் சைன்னியங்களோடு நேராகப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, குருவானவன் ஏனைய அரசர்களைப் போலத் துலுக்க அரசனையும் வசப்படுத்த எண்ணியவனாய்த் தான் ஊர்ந்து வருகிற முத்துப் பல்லக்கைச் சிங்காரித்துச் சீடர்களும், கோயில் தாசிகளும் புடைசூழ எதிர் கொண்டழைத்து வரும்படி அனுப்ப, கஜினியும் அப்பல்லக்கைத் தன் ஒட்டைமீது போடச் செய்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தான். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜினிக்காகப் பெரிய சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அவ்வாசனம் அய்ம்பது லக்ஷ ரூபாய்கள் மதிப்புள்ளதும், வியாசபீடம் எனப் பெயர் வாய்ந்ததுமாம். &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் மூர்த்தியானது விலையுயர்ந்த ஆடையாபரண அலங் காரங்களால் மிக அழகு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கஜினிக்கும், குருவுக்கும் சம்பாஷணை&lt;br /&gt;&lt;br /&gt;கஜினி ஆசனத்தில் உட்கார்ந்தபின், பேதை அரசர்களை ஏமாற்றும் பேய்ப் பார்ப்பனர்களின் முதல்வனான குருவானவன் கஜினியைப் பார்த்து, ஓ இராஜாதிராஜனே! &lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் நேர்மையான ஆட்சியன்றோ பிராமணர்களாகிய எங்களைக் காப்பாற்றுவது? நாவிஷ்ணு; ப்ருதிபீதி (விஷ்ணுவல்லாதவன் அரசனன்று) விஷ்ணுவின் அவதாரமாகிய தங்களைக் குறித்து இங்குள்ள போலி ராஜாக்கள் என்னென்னவோ உளறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1. அப்பொழுது அங்கிருந்த முகம்மது கஜினியினுடைய குருவாகிய மவுல்லி ஒருவர் இது காபரினுடைய ஜின்னு(பிசாசு)களின் வேலையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;குரான் வாசித்துப் போனால், பிசாசுகளெல்லாம் ஓடிவிடும். நாம் ஜெயமடையலாம் எனத் தைரிய வார்த்தைகள் கூறியனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4705.html?sms_ss=blogger&amp;at_xt=4d70d839d5dc6674%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8653422212612945778?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8653422212612945778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8653422212612945778'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/48.html' title='ஞானசூரியன் தொடர்-48'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8425332363500473450</id><published>2011-03-02T18:07:00.000+05:30</published><updated>2011-03-02T18:07:14.857+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-47</title><content type='html'>அன்பர்களே! இக்காரணங்களால் ஆகமங்கள் பிற் காலங்களில் எழுதப்பட்டனவென்று தெரிகிறது. அப்படி யிருந்தும் மாமிசத்தை விட்டுவிட அவைகளுக்குச் சம்மதமில்லை. ஆனால், யாவனொருவன் ஆகமம், வேதம், ஸ்மிருதி முதலிய நூற்களொடு நமது மற்ற நூற்களிலும் பல கெடுதிகள் உண்டென்று தெரிந்து, அவை யாவும் உள்ளதுதான், முறையே வேண்டியதுதானென்று நம்பி, மறுபடியும் அதுவே நமது நூல் என்று ஒத்துக்கொண்டு, தீரனாயிருப்பவன்தான் இந்து மதத்தை முறையாக நம்பினவன். ஆனால், அந்த நம்பிக்கைபோல் நடக்கவும், (பஞ்சமாபாதகங்கள் சரியென்று ஒப்புக்கொள்வதோடு, ஒரு பிராஹ்மணனையும், அய்யர், அய்யங்கார்களையும்) நிந்தனை செய்யாமல், தனது முன்னேற்றத்தையும் விரும்பாமல் இருக்கவேண்டும்; அவன் தீரன்.&lt;br /&gt;பார்ப்பன வழிபாட்டால் வந்த கேடு,&lt;br /&gt;&lt;br /&gt;சோமநாதபுரம் கோயில்&lt;br /&gt;ஸௌராகாவனே&lt;br /&gt;வாராணஸ்யாம் துவிஸ்வேசம்&lt;br /&gt;த்ரியம்பகம் ஷ்ட்ரே ஸோமநாத்ம்ச&lt;br /&gt;ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்;&lt;br /&gt;உஜ்ஜயின்யாம் மஹாகாளம்&lt;br /&gt;ஓங்காரமம லேஸ்வரே&lt;br /&gt;பரல்யாம் வைஜநாதம்ச&lt;br /&gt;டாகின்யாம் பீமசங்கரம்;&lt;br /&gt;ஸேதுபந்தேது ராமேசம்&lt;br /&gt;நாகேசம் தாருகௌதமீதடே&lt;br /&gt;ஹிமாலயேது கேதாரம்&lt;br /&gt;குஸ்ருணேசம் சிவாலயே&lt;br /&gt;சவுராஷ்ட்ர தேசத்தில்(குஜராத்தின் ஒரு பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;சோமநாதமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனமும், உஜ்ஜயினி யில் மஹாகாளமும் அமலேசுவரத்தில் ஓங்காரமும், பரலியில் வைஜநாதமும், டாகினியில் பீமசங்காரமும், சேதுபந்தத்தில் (இராமேச்சுரம்) ராமேசமும், தாருகா வனத்தில் நாகேசமும், காசியில் விஸ்வேசமும், கோதாவரிக் கரையில் திரியம்பகமும், ஹிமாலயத்தில் கேதாரமும், சிவாலயத்தில் குஸ்ருணேசமும் ஆகப் பன்னிரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவை முதலிய புராண வசனங்களால் இத்தலம் ஜோதிர்லிங் காலயங்கள் பன்னிரண்டினுள் முதன்மையான தாகக் கருதப்படுகின்றது. கல்வியறிவற்றவர்களும், கபடு சூதின்றியவர்களுமான பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பனர்களின் பொய்க்கூற்றை நம்பி, இத்தலத்தில் அநேக சித்திகள் நடக்கின்றனவென்று இங்குப் போந்து, இங்குள்ள பார்ப்பனர்களுக்கு விசேஷமான தட்சணைகளைக் கொடுத்து வந்தார்கள்.&lt;br /&gt;இத்தலத்தின் உற்பத்தி&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்கள் பிறரைக் கெடுத்துச் சுயநலத்தைப் பாதுகாக்க எழுதி வைத்துக் கொண்ட ஆபாசச் சுவடிக ளான வேதங் களும், ஸ்மிருதிகளும் முறையே கடவுளா லும், கடவுளின் அருள்பெற்ற பெரி யோர்களாலும், திருவாய் மலர்ந்தருளப்பட்டன என்ற பார்ப்பனப் பொய்க்கூற்றை நம்பி, அதன்படி பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய்த் தனமும், மானமுமிழந்து வந்த பார்ப்பன ரல்லாதாரை மீட்க அவதரித்த ஸ்ரீபுத்தபகவான், மகாவீர சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸத் தர்மமானது (உண்மை நெறி) மக்களை நல்வழியிற் செலுத்தி வந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் அந்நன்னெறியை ஒழிக்கச் செய்த சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. இது சத்தர்ம (புத்த சமயம்) சந்திரனுக்கு இராகுவாகிய சங்கராச்சாரியார் பிற குடிமக்களைக் கெடுக்க ஊரூராய்த் திரியும் (திக் விஜயம்) காலத்துக் குஜராத்திலுள்ள பார்ப்பனர்களும் தாமும், கலந்து பேசியதன் பயனாக ஓரிடத்தில் சிவலிங்கமொன்றைப் புதைத்துவைத்துக் கைலாச நாதராகிய பரமசிவன் புத்த, ஜைனர்களை ஒடுக்கவும், பார்ப்பனத் தொண்டர்களைப் பாதுகாக்கவும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி, கூர்ச்சர (குஜராத்) தேசத்தில் சிவலிங்க ரூபமாகப் பூமிக்குள் இருக்கிறார். அவரைப் பிரதிஷ்டித்துப் பூஜை பண்ணுங்கள்; பவுத்தர்கள் நாசமாவார்கள்; உலகம் க்ஷேமத்தை அடையும் என்று கணேசன், விஷ்ணு, துர்க்கை, பைரவன் முதலிய தேவதைகள் சொப்பனத்தில் வந்து தங்கள் தங்களிடம் சொல்லிச் சென்றதாகக் கதைகட்டி, அந்நாட்டு (குஜராத்தி) அரசர்களுக்கு ஒவ்வொருவனும் தனித்தனியாகச் சென்று அறிவிக்க, அரசர்களும் ஒரே விஷயத்தைப் பல தேவதைகள் வெவ்வேறு கிராமத்தவர்களான பார்ப்பனர்கள் வாயிலாக நமக்கு அறிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் இது முற்றிலும் உண்மையென்று நம்பி, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆலயங்கட்ட ஆணைதர, அங்ஙனமே ஆலயங்கட்டுங்கால் பார்ப்பனர்களும் சம்பக பாஷாணமென்னும் காந்தக் கல்லினாற் கர்ப்பக்கிரகத்தின் உட்புறத்தில் வேலை செய்து முடித்துச் சிவலிங்கமானது ஒரு புறத்திலும் சாராமல் அந்தரத்திலேயே நின்று கொண்டிருக்கும்படிச் செய்தார்கள். அக்காலத்தில் அந்நாடு ஆறு பேரரசர்களால் ஆளப்பட்டு வந்தது. உண்மையறிய ஆற்றலற்ற அவ்வரசர்கள், ஈதென்ன விந்தை! மூர்த்தி நிலம் தொட வில்லையே எனக்கேட்க, பார்ப்பனர்கள் சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டிக்கப்பட்ட லிங்கமானலன்றோ தரையில்படும்? கைலாசநாதர் தானாகவே லிங்க ரூபமாக எழுந்தருளிய தால், தரையில் படவில்லை என்று சொல்ல, அக்கூற்றை அங்ஙனமே நம்பி ஏமாந்து விட்டார்கள். அதிக விமரிசையாக ஆலயத்திற்கருகிலேயே அன்ன சத்திரங்கள், வேத பாட சாலைகள் முதலிய பார்ப்பனர்களுக்காகக் கட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4550.html?sms_ss=blogger&amp;at_xt=4d6e3987100b2ba9%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8425332363500473450?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8425332363500473450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8425332363500473450'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/47.html' title='ஞானசூரியன் தொடர்-47'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-2621360198311268545</id><published>2011-03-01T19:17:00.000+05:30</published><updated>2011-03-01T19:17:07.941+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-46</title><content type='html'>பசு, பூமி, தானியம், அடிமைகள் முதலியவற்றை இல்லத் திற்கு வேண்டுமளவாக அவருக்களித்திடுக வென்றும், பாலஸ்தாபன விதிப்படலத்தில் முன்னர் மொழிந்தவாறு வஸ்திரம் முதலியவற்றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து, அவ்வுத்தமம் முதலிய மூவகைத் தட்சணைகளையும், அவருக்குதவுகவென்றும்,&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து சாந்தி விதிப் படலத்தில் அவ்வாசிரிய தட்சணை அம்மூவகையுமென்றுங் கூறினமை யாலும்; இன்னும்; பலவேதுக்களாலும் கல்வி, அறிவு ஒழுக்கங் களோடு கூடினவரும் அவை கூடாதாருமாகிய பலரும் வைகியுள்ள இப்பூமியின்கண் ஒரு கூட்டத்தாரையே, ஒரு சிலரையே பெரிதும் உயர்த்தலும்,அவரைப்போல ஏனையோர் இனிது தாழ்ந்தவரென்றாலும், அதருமங்கொண்டு படலம் படலமாக அவ்வொரு சிலர் சீவனோபாயத்தோடு பல கருமங்களையும் விதிக்க வந்த புத்தகமே அவ்வாகம புராண பாகமெனவும்; &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மார்த்தர் பெரிதும் சுயநலங்கருதி எழுதியுள்ள ஸ்மிருதிகளை யொத்த இப்பாகப் படலம் யாவும் சிவபெருமான் கூறியருளினவென்பது, அருளவாம் எல்லோ ரும் இனிதுய்தி பெற வேண்டுமென்னுந் திருவுளப் பெருங் கருணைத் தடங்களாய்த் தரும தேவதை மீதெழுதரு தலைமைப் பொருளாய் வழங்கும். அவனது கடவுட்டிறத்தை யிழுக்கத்துட்படுத்துவதாமாகலின், அது சால்பிற்றன்றென வும் நடுவு நிலைமை யொம்புநர் பலரும் நவில்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நடுவு நிலையோம்பல் எமக்குங் கடமையே போந்த நியதிகளை யெவரெவ்வாறு கொள்ளினும் கொள்ளட்டும். இவை ஈசன் கட்டளையென்று கூறற்கே எமது நெஞ்சம் பெரிதுமஞ்சுகிறது. போந்த தந்த்ராவதார படலத்தில், இல்லறத்து ஆதிசைவரே எல்லாக் காரியங்களிலும் அதிகார முடையவர் என்றதும் பேராசைக்கு இடனா யிருத்தல் உய்த்துணரத் தக்கதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு பக்கங்களில் கூறிய வசனம் முருகக் கடவுளரது இரும்பெரும் பக்தராகிய பாம்பன் சுவாமிகள் கூறியுள்ள தாகும். இப்பெரியார் பார்த்தளவும், ஆகம நூலைப்பற்றி அதிஹிப்ருயம் சொல்லிவிட்டது. ஆனால், கர்மகாண்டம் பூர்வபாகம் என்றார். சித்தாந்த பாகம ஞானகாண்டமும் சூத்திரர்கள் அதன்கிட்டே போகலாகாது. இஃதிவ்வாறிருக்க, முன் நான்காவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் சுருக்கமாக அய்ந்தாவதத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்; கவனியுங்கள்! காமிகாகமம் அத்தியாயம் 19, வாஸ்து தேவ பலிபடலம்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கம் 454, சுலோகம் 4.&lt;br /&gt;&lt;br /&gt;1. கருத்து: எமன் பொருட்டுப் பாயசத்தைக் கொடுக்க வேண்டும். கந்தர்வரிடத்தில் கந்தம் கூறப்படுகிறது. ப்ருங்க ராஜருக்கு சமுத்திரத்தில் உற்பத்தியான மத்ஸ்யத்தையும் மிருகரிடத்தில் மத்ஸ்யத்தோடு கூடின அன்னத்தையும் நிருதியின் பொருட்டு பிண்ணாக்கு அன்னத்தையும், எண் ணெயையும் புத்திமானானவன் கொடுக்க வேண்டும். (இதைக் கொடுக்காதவன் புத்திகட்டை) இது சைவர் களுக்குச் சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பலி விஷயத் தில் அசுரர்க்குப் பன்றி மாமிசம் கொடுக்க வேண்டு மென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;3. சேஷருக்கு எள்ளரிசியும், ரோக ருக்கு உயர்ந்த மத்ஸ் யமும், வாயுவிற்கு மஞ்சள் நிற த்வஜமும் சமர்ப் பிக்க வென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ருத்திர மூர்த்தியின் பொருட்டு மாமிசான்னமும் ஆகும். ருத்திர புத்திரர் பொருட்டு நுரையும், ஆபருக்கு மத்ஸ்யத்தையும், ஆபவத்ஸரென்பவருக்கு மாமிசத்தையும் கொடுப்பிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சிவபக்தர்கள் சூலத்திலிருக்கிற சாகியின் பொருட்டு நெய்யையும், மாமிசத்தையும் கொடுக்கவேண்டும். புத்திமானால், விதாரிகையின் பொருட்டு மிகவும் லவணத்தையும் கொடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. பூதனையின் பொருட்டு விசேஷமாக எள்ளன் னத்தைக் கொடுக்கவேண்டும். பாராக்ஷஸியின் பொருட்டுக் காரமணியன்னத்தைக் கொடுக்கவேண்டும். வீடுகளில் மாமிசன்னமும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பாஹய தேவதைகளான எண்மருக்கும் மாமிசங் களின் அன்னம் பலியாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. தேவக்கிருஹத்தில் அவிசும், ராஜக்ருஹத்தில் மாமி சான்னமும் கொடுக்கத்தக்கது. சூத்திரக்கிருஹத் தில் கள் கூறப்பட்டது. மற்றவிடத்தில் தேன் சேர்க்க வேண்டும். (மச்சத்திற்குப் பதிலாக மாவு சேர்க்கவென்பது.)&lt;br /&gt;&lt;br /&gt;9. பூஜை அந்த விஷயத்தில் சிவத்விஜர்கள் கிடைக் காவிடில், அனுசைவர்களாவது ப்ராஹ்மணர்களாவது ஆகும். தேவாலயத்திலும், கிராம முதலான விடங்களிலும் சிவத்விஜர் விசேஷப்பட்டவராகவிருக்கிறார். தன் வீட்டில் அனுசைவர் அல்லது மஹாசைவர் அல்லது அவாந்தரச் சைவர்களாவது ஆசாரியர்களாக இருந்து வாஸ்துஹோமம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10.வாஸ்து பூஜை குறைவுபடின் ஒவ்வோரிடமும் கெடுதியடை கின்றது. ஆகையால், ஆசாரியார், கிராமம், வீடு, சாலை, தேவாலயாதிகளில் வருடாவருடம் வாஸ்து ஹோமம் செய்தல் வேண்டுமென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;11. காமிகம், தந்த்வதார படலம் பக்கம் 32, யாமனத்திலும், மாத்ரு தந்திரத்திலும், பாஞ்சராத்திரத்திலும், பவுத்தத்திலும் அருஹத் மதத்திலும் லாகுளத்திலும் வைதிக மதத்திலும் மற்றும் வேறாய வழிகளில் அந்தந்த சாஸ்திரங்களால் தங்க ளுக்குச் சொந்தமாகிய ஆகம சாஸ்திரப்படி ஆதிசைவர்கள் தீக்ஷை முதலிய அந்த லிங்க ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4511.html?sms_ss=blogger&amp;at_xt=4d6cf8a8590deab6%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-2621360198311268545?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2621360198311268545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2621360198311268545'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/03/46.html' title='ஞானசூரியன் தொடர்-46'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7585741029792514939</id><published>2011-02-28T15:59:00.000+05:30</published><updated>2011-02-28T15:59:18.883+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-45</title><content type='html'>ஆகையால், ஓ பண்டிதரே! இடையூறை விளைவித்து நஷ்டப்படுத்த வேண்டாம்! 1சுவாஹா.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு வேடிக்கைக் கதையாயினும் ஆகுக. வேதங் களின் கருத்து இப்படியேயாம். இவ்விதமாக உடல் வருத்த மின்றி வயிற்றை நிரப்பிவரும் ஒரு சிலர் வேதங்களும் புராணங்களும் எல்லாம் தங்களுடையனவென்றும், தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத்தான் சொர்க்கவாசலைத் திறந்துவிடுவோம்; மற்றவர்களை நரகத்திற்கு அனுப்புவோம் என்றிவ்வாறு சொல்லுகிறார்கள். நமக்கு அவர்களின் சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம். புராணங்களும், வேதங்களும் உணர்த்துகிற விஷயம் இதை ஊன்றிப்படித்தால் அறிந்து கொள்வீர்கள். ஆதலால், அவைகளும் நமக்கு வேண்டாம். அவர்கள் பூமி தேவர்களாகவே வாழ்ந்துகொள்ளட்டும். ஆனால், நாமும் ஏனைய (பிற நாட்டிலுள்ள) மனிதர்களைப் போலாவது வாழ வேண்டாமா? அதற்காக முன்னேற்ற வழியில் முயற்சிப் போமாக. இம்மைக்கு வேண்டிய கல்வி, தொழில் முதலியவை களில் அவரவர்களின் இயற்கைக் குணத்திற்கேற்றவாறு நமது சிறுவர்களைப் பழக்க வேண்டும். மோட்சத்துக்கு உலகப் பற்றையொழித்தவன்தான் அதிகாரி. அதற்குத் தத்துவசாஸ்திர ஆராய்ச்சியும், நல்லோர்களின் கூட்டுறவும் வேண்டும். அதற்கு வேண்டிய நூற்கள் பல நம் மூதாதை யர்கள் இயற்றியிருக்கின்றனர்.&lt;br /&gt;ஆதலால், இந்துக்கள் என்று நம்பியிருந்த மூட நம்பிக்கையை இதுமுதல் விட்டுவிட்டு, நம்மவர்கள் ஒவ்வொருவரும் விலகி விடுபட்டு, முன்னேற்றமடையும் வழியைக் கூறியுள்ளேன். இவ்வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, இதன்படி ஒழுகி, அதனால் நற்பயனையடையுமாறு சர்வேசுவரனாகிய ஞானகுரு அருள் புரிவானாக: (இத்தோடு மலையாள பாஷையில் முன்னமே இயற்றிய அப்ரஹ் மணோத் போதனம் முற்றிற்று)&lt;br /&gt;அய்ந்தாவது அத்தியாயம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆகமம் வேதஸ்மிருதியோடொத்தது&lt;br /&gt;முனீந்திரர் - முனித்தலைவர் - அத்திரி, விஸ்வாமித்திரர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், மரீசியென்னும் எழு வரையும் மொழிகின்றது. முனிவர் - ரிஷி (மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்; உண்டு பண்ணினவர்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர் - மனிதர், ஜனகர், சனந்தனர், சனக்குமாரர், கபிலர், பிருகு, பஞ்சசிகர், சிவன், உருத்திரன் பவானி, பிரமன், விஷ்ணு, அக்னி, வாயு, எமன், சூரியன், சந்திரனென்னும் பதினெண்மரும் சித் தர்களென்று ததே மன்ஷ்யாஸனக என்றெழுதிச் சொல் லுஞ் சுலோகங்களின் வாயிலாக மேலைப் படலமே விளம்புகின் றது. இப்படலத்தின் திருபுண்டரதாரண அங்குலம் - அந்தணருக்கு 6, அரச ருக்கு 4, வைசியருக்கு 2, சூத்திரர் களுக்கு பெண்களுக்கும் 1 என விதிக்கப்பட்டமையாலும், இந்நூல் வருணத்திற்கும் வேறாய ஜாதியாருக்கும் அவ்வொன்று மின்றென்றமை யானும் அந்தணர் உத்தரீயம் (மேல் வேஷ்டி) அணியலாம். சூத்திரர் அஃதணிய வொண்ணாதென்றமையானும், சாலா லட்சண விதிப்படலத்தில் அந்தணர் முதலிய மூவருணத்தார் வீடுகள் இரட்டைத்தூண் நிறுவியும் மற்றையோர் வீடு ஒன்றைத் தூண் நிறுவியும் கட்ட கட்டுப்பாடாம். அந்தண ருக்கு 11 அடுக்கும், அரசருக்கு 5 அல்லது 7 அடுக்கும், வைசியர், சூத்திரர்க்கு 3 அடுக்குள்ள வீடுகளுரியன வென்றமையானும், பூகர்ஷண விதி படலத்திற் பயிரிடற் குரிய உழவு முறை - அந்தணர்க்கும், அரசருக்கும் 32, வைசியருக்கு 15, சூத்திரருக்கு 7 என்றமையானும்; ஆலயங் களிலும், கிராமங்களிலும், சிவத்துவிசரே (ஆதிசை வரென்னும் பிராமணர்) சிறந்தவர். தட்சணை பெறற்குரி யோரென்றாமையானும்; தந்தராவதார படலத்தில் ஆதி சைவ விப்பிரர்களாகிய ஆசார்ய பரம்பரையில் இவ்வாக மங்களை ஓதலும், ஓதுவித்தலும் இவ்வுலகம் செய்யத் தக்கன. மற்றவரைக் கொண்டு அவை செய்யத்தக்கனவல்ல. சூத்திரர், சவருணர் முதலியோரும், சிற்பிகளும், சித்திரம் தீட்டுவோரும் சைவாகமங்கள் படிப்பது பாவமென்றமை யானும், பூபரிக்ரஹ விதிப்படலத்தில் அவ்வாதி சைவ ஆசாரியார் முதலியோரைப் பூசித்து, அவருக்குத் தட்சணை கொடுத்திடுகவென்றும், பூகர்ஷண விதிப்படலத்தில் நிலத்தையுழுபடை கொண்டுழும்போதும் அவ்வாசாரி யாருக்குத் தக்ஷிணையாக 5 (நிஷ்கம்) வராகனெடைப் பொன்னும் மோதிர உபகாராகப் பசு, எருது முதலியனவும் ஈந்திடுகவென்றும், கர்ப்பந்யாச விதிப்படலத்தில் வஸ்திர மும், பொன்னும் மோதிர முதலிய அணிகளுமாகிய இவற் றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து உத்தமமாகப் பதினைந்து வராகனும் மத்திமமாக 10 வராகனும் அதமமாக 5 வராகனும், அவருக்குத் தட்சணையாக கொடுத்திடுக&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4351.html?sms_ss=blogger&amp;at_xt=4d6b78cc85205ddb%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7585741029792514939?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7585741029792514939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7585741029792514939'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/45.html' title='ஞானசூரியன் தொடர்-45'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5085876488746002574</id><published>2011-02-24T16:51:00.000+05:30</published><updated>2011-02-24T16:51:51.021+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-44</title><content type='html'>இத்தகைய உணர்ச்சி எப்போது உயிர்களுக்கு உண்டா கின்றதோ, அப்போதே முக்தி, பரமாத்மாவுடன் ஒற்றுமை நிர்வாணம் கைகூடுகின்றது என்று உபனிஷத்துகள் கூறுகின்றன. ஆனால், இது சங்கராச்சாரியாரின் கொள்கையே ஆகும். நீலகண்டர், இராமாநுஜர், மத்வர் முதலிய பலரும் பல திறப்பட்ட கொள்கைகள் உடையவர்கள். இவர்கள் அனைவரும் உபனிஷத்துகளையே முதல் நூலாக ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு சொல்லிற்குப் பல பொருள்களையுணர்த்தும் வட மொழியானது மேற்கண்டவர் களின் மதியை மயக்கிப் பல துறைகளில் அலையச் செய்ததே இதற்குக் காரணம். ஆனால், சங்கராச்சாரியாரின் கொள்கைப்படி ஜீவனுக்கு இத்தகைய ஞானம் (பிரமம், சத்தியம், உலகம், மித்யை) வேண்டுமே ஒழிய, அவனுடைய செய்கை&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியேனுமிருக்கலாம்.&lt;br /&gt;அனுமேத ஸஹஸ்ராண் யப்யத:&lt;br /&gt;குருதே ப்ரஹ்ம காத லக்ஷாணி:&lt;br /&gt;பரமார்த்த விந்த புண்யைர் நச&lt;br /&gt;பானபர் லிப்யத க்வாபீ    (பரமார்த்தசாரம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஆட்டையறுத்து ஆயிரம் யாகங்கள் செய்யினும், லக்ஷம் பிரம்மஹத்தி(பார்ப்பனக் கொலை) செய்யினும், உண்மையை அறிந்தவன் புண்ணியத்தினாலும், பாவத்தினாலும் பற்றமாட்டான். இது பரமார்த்தசாரம் என்னும் நூலில் உள்ளது. (இந்தப் பிரமாணம் உணர்ந்ததனால்தான் ஆரியர்கள் குற்றமற்ற பவுத்தர்களைப் பல தடவைகளில் ஆயிரமாயிரக்கணக் காகக் கொல்வித்தார்கள் போலும்)&lt;br /&gt;கீதையிலும், ஜ்ஞானாக்நி: ஸர்வகர்மானி பஸ்மஸாத் குருதேர்ஜுன, ஞானத்தீ எல்லாக் கருமங்களையும், எரிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது. புத்த பகவான் நல்லொழுக்கத்தினாலும், புத்த தத்துவ சாக்ஷாத் காரத்தினாலும் மனத்தூய்மை அடைந்தவனே மோட்சத்துக்கு அதிகாரி என்று சொல்லியிருக்கிறார். சூன்னியவாதம் மித்திய மிக ஸுத்ரம், ராகத்வேஷ மோஹக்ஷ யாத்பரி நிர்வாணம் காமம், வெகுளி, மயக்கம் இவைகளின் நீக்கமே முக்தியைத் தரும் என்பது இதன் பொருள். புத்தபகவான் திருவாய் மலர்ந்தருளிய தத்துவ சாஸ்திரங்களை எல்லோரும் எளிதில் உணர்ந்து பயனையுமடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வைதிகர்களைக் குறித்த ஒரு கதை&lt;br /&gt;&lt;br /&gt;வைதிகர்களைக் குறித்த ஒரு கதை, இச்சமயம் நினைவிற்கு வந்ததையும் இங்குக் கூறிவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாட்டிலிருந்த ஒரு பிரபுவானவர் தம் குடும்பத்தில் அடிக்கடி மரணம் முதலிய கெடுதிகள் நேருவதைக் குறித்து வருந்திப் பண்டிதரான ஒரு பார்ப்பனனை வரவழைத்துத் தம் குடும்பத்தை க்ஷேமமடைவிக்கும் படிக்குப் பிரார்த்தித்தார். அவன் இவரது ஜாதகத்தைக் கொண்டு வரச் செய்து பார்வை யிட்டு, இத் தகைய துன்பங்கள் யமனது வாகன மாகிய எருமைக்கடாவின் கோபத்தால் உண்டாயினவென்றும், ஆதலால், அதன் தாயான பெண் எருமையை மகிழ்வித்தால், தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பிறகு பிள்ளையினால் தொந்தரவு உண்டாகமாட்டாதென்றும், அதற்கேற்ற யாகம் ஒன்று செய்யவும், அந்த யாக முடிவில் கொம்பு, குளம்பு இவைகளைத் தங்கத்தினால் பொதிந்த பெண் எருமைகளும் தன்னாலி யன்றவாறு பிற பொருட்களும் (சுவர்ணதானம், கோதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம் முதலியன) தட்சணையாக வழங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுவும் கட்டளையைச் சிரமேற்றாங்கி யாகமும் நடைபெற்றுக் கொண்டே வந்தது. சில நாள்கள் சென்றதும் வித்து வானாகிய மற்றொரு பார்ப்பனன் அவ்வூருக்கு வந்தவன், யாகம் நடைபெறுவதைக் கேள்வியுற்றுத் தனக்கு ஏதேனும் தட்சணை கிடைக்கு மென்றெண்ணி யாக சாலைக்கு வந்தான். வந்தவிடத்தில் எந்த நூலிலும் இல்லாத புது முறைப்படி யாகம் நடைபெற்று வரவே, சந்தேகத்துடன் ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்ததைப் பார்த்த பழைய புரோகிதன், வந்தவன் சொந்தக்காரனிடம் உண்மையைத் தெரிவித்து வரும்படியில் மண்ணைப் போட்டு விடுவானோயென்று பயந்தான். இரகசியமாக ஒன்றும் சொல்லவும் தக்க இடமில்லை. உடனே, சமயோஜிதமான ஒரு புத்தி ஏற்பட்டது. ஹோமத்திர வியங்களைக் கையில் எடுத்து இம்மந்திரத்தைச் சொல்லி நெருப்பில் போடும் பாவனையாக வந்தவனுக்குத் தன் கருத்தை வெளியிட்டுப் பிரபுவின் முகத்தில் கரி தடவி, இருவரும் சேர்ந்து தட்சணைப் பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மந்திரமாவது:&lt;br /&gt;மஹா மூர்க்கஸ்ய யாகோயம்&lt;br /&gt;&lt;br /&gt;மஹசீத தக்ஷிண:&lt;br /&gt;மமாப்யர்த்தம் தவாப்யர்த்தம் விக்நம்&lt;br /&gt;மாகுரு பண்டித ஸ்வாஹா&lt;br /&gt;பொருள்: இந்த யாகம் செய்வோன் அறிவிலிகளுக்குத் தலைவனாவான். இதற்கு அநேக எருமைகள் தானமாக வழங்கப்படும். அவைகளில் உமக்குப் பாதியும், எனக்குப் பாதியும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4129.html?sms_ss=blogger&amp;at_xt=4d663f18a82e9104%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5085876488746002574?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5085876488746002574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5085876488746002574'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/44.html' title='ஞானசூரியன் தொடர்-44'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-2628310837033427940</id><published>2011-02-23T20:08:00.000+05:30</published><updated>2011-02-23T20:08:38.936+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-43</title><content type='html'>வடமொழியின் ஆபாசம்&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழியானது புலவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு பொருள்களைக் கற்பிக்க இடமுள்ளதாயிருக்கிறது. உபநிஷத்துகளை எழுதியவர்கள் கனவில்கூட நினைத்திராப் பொருள்களைச் சங்கராச்சாரியார் எழுதி, அவைகளைத் தம் மதமாக்கி, வேதத்தின் முடிவில் உள்ளவைகள் என்று உறுதிப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போலவே காவியங்களிலும் மாறுபட்ட உரைகளைப் பார்க்கலாம். ஸ்புடபின்னார்த்த முதாஹாத்தச (மாகம்) என்று தொடங்கிய சுலோகங்களில் நிந்தையும், ஸ்துதியும் இருப்பதாக வியாக்கியானங்களால் தெரிகின்றது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற பழமொழிக்கொப்பாக ஆபாசக் களஞ்சிய மாகிய வேதத்தை அறிவாளிகள் வெறுத்துத் தள்ளுவதைப் பார்த்த பார்ப்பனர்கள், வேதம் குற்றமற்றது என்று ஸ்தாபிக்கவேண்டி, சமஸ்கிருத பாஷைக்கு எதிர்பாராத பல அர்த்தங்களையும் உண்டு பண்ணி நிகண்டுகள் எழுதி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகைக் காரணங்களால் வடமொழியானது தத்துவசாஸ்திரம் எழுதத்தக்க மொழியன்று. தத்துவ நூற்கள் பார்ப்பனரால் எழுதப்பட வில்லை. அவைகளின் உண்மைக் கருத்துகளை உணர்ந்து கையாளப்படவு மில்லை. தத்துவத்தை முதன் முதலாக மனிதர்களுக்குப் போதித்தது 1பகவான் புத்தனேயாம். பிறகு சமணர்களின் நூற்கள் குரங்கின் கையிலகப்பட்ட பூமாலையைப் போல பார்ப்பனர் களின் கையிலகப்பட்டு உபனிஷத்து ரூபமாகச் சிதைவுற்றுக் கிடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிகளுக்கு முரண்பட்ட பல பொருள்களைக் கற்பித்த தால் உண்டாகும் உயர்வும், தாழ்வும் அறிய விரும்புவோர், தஸாயன சாஸ்திரத்தில் சொற்களுக்கு முரண்பட்ட பொருட்களை உணர்த்துகிற பெயர்களை வைத்துப் பார்க்கட்டும். இவ்வைந்து வார்த்தைகளுக்கும் மார்ஜனில் காணுகிறபடிக்குள்ள பொருள்கள் இருந்தால், இந்த ரஸாயன சாஸ்திரம் என்ன பயனைத்தரும்? &lt;br /&gt;&lt;br /&gt;புத்த பகவானுடைய தத்துவ சாஸ்திரம் ரஸாயன சாஸ்திரத்தின் உருவைச் சிதைத்து, வேதத்தில் உள்ளது எங்களுக்குச் சொந்த மானது என்று பிராமணர்கள் எழுதி வைத்திருக்கின் றார்கள். இதனால் மனிதர்களுக்கு ஒருபயனும் இல்லை. வடமொழியைப் படித்தும் பேசியும் வந்த பழைய காலத்திய பார்ப்பனப் பண்டிதரின் வஞ்சகத் தன்மைக்கு ஒரு சொல்லிற்குப் பல பொருள்களைப் உணர்த்துகிற இம் மொழியே உதாரணம். முன்னுக்குப் பின் முரணாகவும் சமயத்திற் கேற்றபடி பொருள் மாற்றிக் கூறுவதும் நல்லோர்களின் செய்கையல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்துக்களின் பழைய சொத்து இதற்கு முன் கூறிய வாக்கியங் களைப் போன்ற பல வாக்கியங்கள் அடங்கிய வேதங் களும் ஸ்மிருதிக ளுமே. வேதத்தில் ஸோம(கள்ளு)த்தைக் குறித்துப் புகழ்ந்து பாடியுள்ள பல பாடல் களும், பசு யாகத்தின் மந்திரங்களும், இவை போன்ற பல விஷயங்களும், இதில் எடுத்துக்காட்டவில்லை. பௌண்ட ரீகம் என்னும் பெயரால் ஒரு யாகமுண்டு. அது விதவை யினுடையவும் பிரம்மச்சாரி யினுடையவும் சேர்க்கையால் நிறைவேறத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஆபாச வாக்கியக் களஞ்சியத்தை அறிவாளிகள் எங்ஙனம் பிரமாணமாக ஒப்புக்கொள்ள இயலும்?&lt;br /&gt;&lt;br /&gt;உபநிஷத்துகளில் பெரும் பகுதியும் புத்த பகவானுக்குப் பிறகு உண்டு பண்ணியவைகள் என்றும், அதற்குமுன் இரண்டொன்று உண்டாயிருந்தால், அவைகள் க்ஷத்திரியர் களின் சொத்தாக இருந்தனவென்றும் முன்னரே கூறியுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தியாயத்ம வித்தைக்கு இராஜ வித்தையென்றும், மற்றொரு பெயருண்டு. இதனால் இது க்ஷத்திரியர்களின் சொந்தமென்றும் நன்கு விளங்குகிறது. 1ராஜ வித்தியாராஜ குஹயம் பவித்திரமித முத்தமம் என்கிற கீதா வாக்கியத்தால், கிருஷ்ணன் இவ்வுண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றார். கரும காண்டத்தைத் தழுவி நடக்கிற 2மீமாம்ஸ கர்கள் உபனிஷத்துகளை வேதப் பிரமாணமாக அங்கீகரிக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக உபனிஷத்துகளை வேதத்தில் சேர்த்து ஒப்புக்கொள்ள வில்லை. பிறகு கருமகாண்டத்தில் மனிதர்களுக்கு நம்பிக்கை குறையவே பழைய குருட்டு நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் பொருட்டு உபனிஷத்துகளும் வேதங்களேயென்றும், ஆனால், முடிவில் இருப்பதால் கருமகாண்டப் படிக்குள்ள யாகம் முதலிய சடங்குகளை நிறைவேற்றி மனத்தூய்மை அடைந்தவன்தான் உபனிஷத் துகளை உணர்ந்து அவை களின்படி ஒழுக உரிமை உள்ளவன் என்றும் பொய்க்கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்காலத்தும் அழியாமலும் அனைத்திற்கும் காரணமாயும் இருக்கிற பரம்பொருள் ஒன்றே! என்றும், நிலைத்திருப்பது இவ்வுலகத் தோற்றம் மாத்திரமே. &lt;br /&gt;&lt;br /&gt;1. அரசர்களின் வித்தை - அரசர்களின் இரகசியப் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இவர்கள் சங்கர மதத்தைப் பிரசன்ன புத்தமதம் (வைதிகப் போர்வையுடைய பவுத்தர்கள்) என்று சொல்லுவார்கள். இதனால் பவுத்த சமயக் கூற்றுவனாயிருந்த சங்கரர், பவுத்தர்களின் தத்துவ நூற்களை வடமொழியில் எழுதி, உபனிஷத்துகள் என்ற பெயரைக் கொடுத்தார் என்று எண்ண இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/4072.html?sms_ss=blogger&amp;at_xt=4d651bb4297cb722%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-2628310837033427940?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2628310837033427940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2628310837033427940'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/43.html' title='ஞானசூரியன் தொடர்-43'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7199933669502258556</id><published>2011-02-22T19:17:00.001+05:30</published><updated>2011-02-22T19:18:10.725+05:30</updated><title type='text'>செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-mTpurhkjmXw/TWO-jwSlM6I/AAAAAAAAAOM/ey8HeVj9ViM/s1600/Newsphto.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 167px;" src="http://2.bp.blogspot.com/-mTpurhkjmXw/TWO-jwSlM6I/AAAAAAAAAOM/ey8HeVj9ViM/s320/Newsphto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576510285082342306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் 17.2.2011 மாலை செஞ்சி பேருந்து நிலை யம் அருகில் கெடார் சு.நடராசன் மூன்றாம் ஆண்டு நினைவு பகுத் தறிவுப் பிரச்சாரக்கூட் டம் எழுச்சியுடன் நடை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட் ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் செஞ்சி நகர தலைவர் சு. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பி னர்கள் நல்லாசிரியர் த.தண்டபாணி, புலவர் அ.எத்திராசன், சவுந்தரி நடராசன் முன்னிலை யில் கடலூர் மண்டல தலைவர் வ.சு. சம்பந்தம், கழக பேச்சாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீஸ் சிறப்புரை யாற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசுபதி வரவேற்றார். செக்கடிக்குப்பம் பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் பகுத் தறிவுப் பாடல்களைப் பாடினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், சென்னை சண்முகப்பிரியன், காணை ஒன்றிய செய லாளர் ரமேசு, கலையர சன், மலையரசன் குப்பம் சுப்பிரமணி, ஆறுமுகம், செஞ்சி நகர துணைச் செயலாளர் இரகுநாதன், மேல்மலையனூர் ஒன்றியத் தலைவர் மதியழகன், சிட்டிபாபு, மகளிரணி கலைச் செல்வி பசுபதி, பெரியார் பிஞ்சு கள் மதிவதனி, ஆற்ற லரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மாவட்ட வழக்கு ரைஞர் அணி செயலா ளர் ந.விவேகானந்தன் நன்றி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சி யில் பகுத்தறிவுப்பிரச் சாரக்கூட்டம் நடைபெற்ற போது பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு கேட்டதோடு, சிறப்பு ரையாற்றிய தமிழ் சாக்ரடீசுக்கு மாலை அணிவித்துப் பாராட் டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-4/4005.html?sms_ss=blogger&amp;at_xt=4d63be075829a2e0%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7199933669502258556?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7199933669502258556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7199933669502258556'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/blog-post.html' title='செஞ்சியில் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம்'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-mTpurhkjmXw/TWO-jwSlM6I/AAAAAAAAAOM/ey8HeVj9ViM/s72-c/Newsphto.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5444185346491355649</id><published>2011-02-21T11:58:00.000+05:30</published><updated>2011-02-21T11:58:05.157+05:30</updated><title type='text'>ஞானசூரியன் - தொடர்-42</title><content type='html'>இதன் விடை:&lt;br /&gt;ஊர்த்வ மேனமுச் ச்ரயதாத்&lt;br /&gt;கிரௌபாரம் ஹரன்னிவ&lt;br /&gt;அதாஸ்ய மத்ய மேஜது&lt;br /&gt;கீதே வாதே புனன்னிவ&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: முன்போலவே, இவள் என்ற இடத்தில் இவன் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோதாவென்பவன் மற்றொருத்தியை நோக்கிக் கூறுவது:&lt;br /&gt;யதஸ்யா அம்ஹுபேத்யா&lt;br /&gt;சூது ஸ்தூல முபாதஸத்&lt;br /&gt;முஷ்காவி தஸ்யா ஏஜதோ&lt;br /&gt;கோசபே சகுலாவிவ&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: எப்போது லிங்கம் யோனிக்குள் நுழை கின்றதோ, அப்போது நீர் நிறைந்திருக்கும் மாட்டுக் குளம்பில் இரண்டும், மீன்களிலிருந்து அசைவது போல் விதைக் கொட்டைகள் இரண்டும் வெளியில் அசைந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விடை:&lt;br /&gt;யத் தேவாஸோ லலாமகும்&lt;br /&gt;ப்ரவிஷ்டீ மின மாவிஷு;&lt;br /&gt;ஸக்த்னா தேதிச்யதே நாரீ&lt;br /&gt;சத்யஸ் யாக்ஷி புவோ யதா&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: எப்போது ருத்விக் முதலியோர் புணர்ச்சி செய்யவிரும்பி லிங்கத்தை யோனிக்குள் நுழைக் கின்றார்களோ, அப்போது பெண்ணின் அங்கங்கள் ஆணினால் மறைக்கப்பட்டிருக்கும். ஆயினும், தொடை யைப் பார்த்துப் பெண்ணை வேறு பிரித்து அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ஷத்தா என்பவன் வெறொருத்தியிடம் கூறுவது:&lt;br /&gt;யத்தரிணம் யவமத்திநபூஷ்டம் பசுமன்யதே&lt;br /&gt;சூத்ரா யதர்ய, ஜாரா நபோஷாய தனாயதி&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பயிரை மேயும் மானைப் பார்த்து பயிர்ச் சொந்தக்காரன் மான் சுகத்தையடையுமே யென்று எண்ணாமல், இம்மான் பயிரைத் தின்றுவிட்டதே யென்று வருத்தப்படுவதைப் போல் ஆரியர்களால் புணர்ச்சி செய்யப்பட்ட தன் மனைவியைப் பார்த்து சூத்திரன் துன்புறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விடை:&lt;br /&gt;யத்ஹரிணோ யவமத்தி&lt;br /&gt;நபுஷ்டம் பகுமன்யதே:&lt;br /&gt;சூத்ரோ யதர்யாயை ஜாரோ&lt;br /&gt;நபோஷ மனுமன்யதே&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: முற்கூறியவாறு ஆரிய ஸ்தீரியைப் புணர்ந்த சூத்திரனைப் பார்த்து, ஆரியர்களும் வெறுப்படைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய வாக்கியங்களால் ஆரியர்கள் 1வியபி சாரத்தை விளையாட்டாகவே நினைத்து வந்தார்கள் என்பதும், இவர்களுக்குப் புறம்பானவர்கள் தீய ஒழுக்கமென்று வெறுத்து வந்தார்கள் என்பதும் அறியக் கிடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதமாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா தவைகளும் ஆபாசங்களுமான வாக்கியங்கள் நிரம்பியிருக்கிற வேதங்களின் சொரூபத்தை நம்மவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு மேற்கூறிய உதா ரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. இவைகள்தாம் யாக மந்திரங்கள். இவைகளைச் சொல்லி யாகம் செய்தால், பிராமணன் சுவர்க்கத்தை அடைவான். இச்சொற்களைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயமும், மெழுகும் உருக்கிவிடுவது பார்ப்பனரின் வழக்கம். ஆனால், நல்லோர்களுக்கு இத்தகைய ஆபாச வார்த்தைகளைக் கேட்பதே ஈயம் உருக்கிவிடு வதைக் காட்டிலும் கஷ்டமாயிருக்குமென்பதில் அய்யமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரிய சமாஜத்திற்குத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி முற்கூறிய வாக்கியங்களுக்கு வேறு பொருள் கூறுகிறார். மஹீதராசாரியரைக் கண்டிக்கவும் செய்கிறார். அது, நம்மவர்களை ஏமாற்றி ஆரியமதத்தை நம்பச் செய்யவே ஆகும். ஆரிய சமாஜம் தோன்றி நாற்பது வருடங்களே ஆகின்றன. இக்காலத் தும் ஒரு சிலரே ஆரிய சமாஜத்தைத் தழுவுகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்னிருந்த பிராமணரனை வரும், இக்காலத்தவரின் பெரும் பகுதியினரும் மஹீதர பாஷ்யத்தை ஒத்துக் கொள்ளுகின்றனர். ஆதலால், இதில் மேற்கோள்களாகக் கூறப்பட்டிருக்கும் வாக்கியங்களின் உரை மஹீதரரின் பாஷ்ய மொழி பெயர்ப்பேயாகும். தயானந்த மதப் பிரகாரம் 196 கோடி ஆண்டுகளாக இப்படி நடந்ததென்று சொல்ல வேண்டும். இந்த வேதத்திற்கு மாறிப் பொருளுரைக்க வந்தவர் 40 ஆண்டு காலம்தான் ஆகிறது. புத்த, சமணக்காலத்தில் மஹீதர பாஷ்யமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3858.html?sms_ss=blogger&amp;at_xt=4d6205b83e2ee8db%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5444185346491355649?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5444185346491355649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5444185346491355649'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/42.html' title='ஞானசூரியன் - தொடர்-42'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7868339266412734289</id><published>2011-02-18T19:56:00.000+05:30</published><updated>2011-02-18T19:56:58.060+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-41</title><content type='html'>ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்&lt;br /&gt;பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித்தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.&lt;br /&gt;1ஸ்வர்க்கே லோகே ப்ரோணுவாதாம்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:&lt;br /&gt;(ஃ) வருஷா வாஜி ரேதோதாரேதோ ததாது&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக் கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.ஃ&lt;br /&gt;&lt;br /&gt;உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா&lt;br /&gt;வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2அத்வர்யு முதலிய அய்வரும் (அத்வர்யு பிரஹ்மா, ஹோதா, உத்காதா, க்ஷதா) குமாரிகளும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற வாக்கியங்கள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அத்வர்யு குமாரியை விளித்துத் தனது விரலால் அவளின் அல்குலைச் சுட்டிக்காட்டிப் பரிஹாசமாகச் சொல்லுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;3யகாஸகௌ சகுந்தகா ஹலகிதி வஞ்சதி;&lt;br /&gt;ஆஹந்தி கபே பஸோ நிகல்யா பீதி தாரகா&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பெண்கள் விரைந்து நடக்கும்போதும், புணர்ச்சிக் காலத்திலும் யோனிக்குள் ஹலஹலாவென்னும் ஒலியுண்டாகிறது. பிறகு வீரியம் வெளிப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் குமாரியானவள் அத்வர்யுவின் லிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு விடையளிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யகாஸகௌ சகுந்தகா&lt;br /&gt;ஹலகிதி வஞ் சதி;&lt;br /&gt;விவக்ஷத இவ தேமுக மத்வர்யோ&lt;br /&gt;மநாஸ்த்வ மபி பாஷதா&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: அத்வர்யுவின் லிங்கத்தை விரலால் சுட்டிக்காட்டிக் கொண்டு, நுனியில் துவாரத்தையுடைய இது உன் வாய்போலிருக்கிறது. ஓ அத்வர்யுவே! அதிமாகப் பேச வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஹ்மா மஹிஷியினிடம் சொல்வது:-&lt;br /&gt;மாதாசதே பிதாசதே அகரம் வ்ருக்ஷஸ்ய ரோஹத:&lt;br /&gt;ப்ரதிலா மீதிதே பிதா கபே முஷ்டி மதம் ஸயத்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மஹிஷியே! உன்தாயும், தந்தையும் கட்டிலின் மேல் ஏறிக்கொண்டு, உன் தாயின் பக்கத்தில்(யோனி) தந்தையார் முஷ்டியை (லிங்கம்) செலுத்தியதனால் நீ பிறந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மஹிஷியின் விடை:&lt;br /&gt;மாதாச பிதாச தேக்ரே வ்ருக்ஷஸ்ய க்ரீடத&lt;br /&gt;விவக்ஷத இவதே முகம் ப்ரஹ்மன்&lt;br /&gt;மாத்வம் வதோ பகு&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: உன் பிறவியும் இவ்வாறே, அதனால் அதிகமாகப் பேசாதே.&lt;br /&gt;உத்காதா, குமாரிகளில் ஒருத்தியை நோக்கிச் சொல்லுவது.&lt;br /&gt;ஊர்த்வமேனா முச்சராபய கிரௌ&lt;br /&gt;பாரம் ஹரன்னிவ;&lt;br /&gt;அதாஸ்யா மத்ய மேததாம் சீதே&lt;br /&gt;வாதே புனன்னிவ&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மலைக்குமேல் சுமையை ஏற்றுவது போலவும், குளிர்ந்த காற்று வீசுங்கால் தானியத்தின் பதர் தூற்றுவது போலவும் இவளை உயரத் தூக்கிப்பிடியுங்கள். இவளுடைய இடை அகலமாக ஆகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அதிவாஸேன ப்ரச்சாதயதி ஸ்வர்க்கே லோக இதி (காத்யாயன சிரவுத சூத்திரம்) ஸ்வர்க்கே லோக என்ற மந்திரத்தச் சொல்லி துணியைப் போட்டு மூடுகிறார்கள். ஏஷவை ஸ்வர்க்கோ யத்ரபசும் ஸம்ஜ்ஞபயந்தி எங்குப் பசு யாகம் செய்யப்படுகிறதோ அவ்விடம் சுவர்க்கமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஃ) அஸ்வசிச்ன முபஸ்தே குருதே வ்ருஷாவாஜீதி, (அஸ்வலிங்கம் ஹஸ்தேன த்ருத வாஸ்வ யோனித்வரா அர்ப்ப யதீத் யர்த்த) மஹிஷியானவள் குதிரையின் குறியைக் கையினால் பிடித்துத் தன் யோனித் துவாரத்தில் வைக்கிறாள் என்பது இதன் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;2அத்வர்யு ப்ரஹ்மோத் காத்ருக்ஷத்தார குமாரீபத்நீபி; ஸம்வதந்தே யகாஸகா விதி தசர்ச் சஸ்ய த்வாப்யாம் ஹயே ஹயே ஸாவித்யா மந்தர்ய. (காத்யாயன சிரவுத சூத்திரம்)&lt;br /&gt;&lt;br /&gt;3அத்வர்யு முதலியவர்கள் குமாரி பத்தினிகளுடன் பரிகாசமாகப் பேசுகிறார்கள். இம்மந்திரங்கள் 90 பாட்டுகள் அடங்கியது. யஜுர் வேதம் அத்தியாயம் 23-இல், 20-லிருந்து மஹீதர பாஷ்யத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3680.html?sms_ss=blogger&amp;at_xt=4d5e818aefb9516d%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7868339266412734289?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7868339266412734289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7868339266412734289'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/41.html' title='ஞானசூரியன் தொடர்-41'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-9136117951969843285</id><published>2011-02-18T16:30:00.002+05:30</published><updated>2011-02-18T16:47:41.351+05:30</updated><title type='text'>பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-L1ujyUmlb2Y/TV5SA9wbM7I/AAAAAAAAAOE/VX55_Pm1Lb0/s1600/1-11.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/-L1ujyUmlb2Y/TV5SA9wbM7I/AAAAAAAAAOE/VX55_Pm1Lb0/s320/1-11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574983565262402482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு தமிழர் தலைவர் வெளியிட, பொருளாளர் பெற்றுக்கொண்டார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை, பிப்.16- பகுத்தறிவு ஆசிரியரணி முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் விழுப்புரம் மாவட்டத் தலைவருமாகிய பெரி யார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் மறைவையொட்டி நினைவு நூலாக பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீட்டு விழா பெரி யார் திடலில் இன்று (16.2.2011) காலை நடை பெற்றது. தமிழர் தலை வர் கி.வீரமணி நூலை வெளியிட, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக் கொண்டார். தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ந.கதிரவன், விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ந.பசு பதி, ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். நூல் வெளி யீட்டு விழாவையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் நூறு  தமிழர் தலைவரிடம் வழங்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.viduthalai.in/new/home/archive/3566.html&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-9136117951969843285?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/9136117951969843285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/9136117951969843285'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/periyar-viduthalai-tamil-daily-news.html' title='பெரியார் பாதையில் கெடார் சு.நடராசன் நூல் வெளியீடு'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-L1ujyUmlb2Y/TV5SA9wbM7I/AAAAAAAAAOE/VX55_Pm1Lb0/s72-c/1-11.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-829477378738506378</id><published>2011-02-15T20:59:00.001+05:30</published><updated>2011-02-15T21:00:02.735+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-40</title><content type='html'>1அத்தகைய கொடுந்தொழில்கள் பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குப் பயந்து ஏடுகளிலும் வஞ்சகப் பார்ப்பனரின் உள்ளங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. இத் தகைய கொடுமைகளைக் காப்பாற்ற எண்ணியே ஹோம் ரூல் வேண்டுமென்கிறார்கள். எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்றவர்களைத் தேசத் துரோகிகள் என்று வசை மொழிகளால் அலங் கரிக்கின்றனர். பல மனிதர்களை மிருகங்களைக் காட்டிலும் தாழ்வாகச் சில மனிதர்கள் நினைத்து வருகிற காலம் வரையில் சகோதரர்களே, உங்களுக்கு ஹோம் ரூல் வேண்டாம். நீங்கள் விரும்பினாலும், ஆங்கிலேயர்கள் கொடுக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்தாலும் இந்துக்களாகிய நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். ஒற்றுமையுள்ள புறச் சமயத்தாரால் துன்புறுத்தப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். ஆதலால், சிலகாலம் மட்டும் (நமக்குள் ஒற்றுமை வருமளவும்) பொருத்திருந்து, வேத சாஸ்திரங்களை வாசித்து, அவை களின் உட்கருத்துகளை ஆராயுங்கள். அங்ஙனம் ஆராயுங் கால், அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத:  தமத்யா பதீதா. இவை முதலிய வாக்கியங்கள் உங்கள் கண்களுக்குப் புலனாகும். வேதத்தைப் படிக்கிற உங்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள், நாஸ்திகோவேத நிந்தக என்றும் மற்றும் பரிகாசம் பண்ணினாலும் எடுத்துக் கொண்ட முயற்சியி னின்றும் பின்வாங்காமல் சாதாரண சமஸ்கிருதத்தினின்றும் மாறுபட்ட இவ்வேத மொழியை மஹீதரன் முதலிய பழைய ஆச்சாரியார்களின் பாஷியத்தை வைத்துக்கொண்டு, நம்மவர்கள் எல்லோருக்கும் பயன்படும்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய நம் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளிப்படுத்தவும் உறுதி செய்துகொண்டு, அதற்கேற்ற முயற்சியை ஒவ்வொருவரும் விரைந்து செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இக்காரியமானது வடமொழி, தென்மொழிப் புலமை வாய்ந்த அறிவாளர்களும், பொருளாளர்களும் கலந்து உழைத்தாலன்றி இலகுவில் முடிவுறாது. பாஷை, வேஷம், 2விசாரம் தேசம் இவைகளால் மாறுபட்ட மேனாட்டார் இக்காரியத்தில் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியைக் கூர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;கவனிக்கிற எந்த மனிதனும் சந்தோஷிக்கத்தக்கது. நடையிலும் உடையிலும் அய்ரோப்பியர்களைப் பின்பற்றுகிற நம்மவர்களைப் பின்பற்றி உழைத்து வருவார்களானால், நாட்டிற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க, நம்மவர்களால் பரிசுத்தமென்று கருதப்பட்டு வருகிற வேதத்தினுடைய ஒரு பாகமாகிய மந்திரங்களிற் சிலவற்றை ஈண்டுக் கூறுவேன். விதி, மந்திரம், அர்த்த வாதம், நாமதேயம் என வேத வாக்கியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மந்திர மென்கிற சொல்லிற்கு நினைப்பூட்டுவது என்று பொருள். யாகத்தில் நிறைவேற்றுகிற ஒவ்வொரு சடங் கின் முதலிலும் இவைகளைச் சொல்லிப் பொரு ளையும் சிந்தித்தல் வேண்டும். இதன் கீழ்க் கூறப்புகும் மந்திரங்கள், வாஜ ஸனேயீ (சுக்ல யஜுர் வேதம்) சம்ஹிதையில் உள்ளன. இவைகளுக்கு மஹீதராசாரியார் தெளிவாகப் பாஷியம் எழுதியிருக்கிறார். ஒரே குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து வாசித்து மகிழத்தக்க புராணங்களோ, ஸ்மிருதிகளோ, வேதங்களோ இவை முதலிய எந்த இலக்கிய நூலும் இந்துக்களுக்கு இல்லை.&lt;br /&gt;புத்திர காமேஷ்டி யாகம்&lt;br /&gt;&lt;br /&gt;முற்காலங்களில் யஜமானனுக்கும், யாகஞ் செய் வோனுக்குப் பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில்3 பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதும் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும். அதன் விபரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத்தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-&lt;br /&gt;&lt;br /&gt;1. கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே    (வஸோமம)&lt;br /&gt;&lt;br /&gt;2. ப்ரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே    (வஸோமம)&lt;br /&gt;&lt;br /&gt;3. நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே    (வஸோமம)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக இருக்கவேண்டும். (மனைவிகளுள் தலைவியை 4மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராணசோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3501.html?sms_ss=blogger&amp;at_xt=4d5a9b984cbab94d%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-829477378738506378?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/829477378738506378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/829477378738506378'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/periyar-viduthalai-daily-tamil-news.html' title='ஞானசூரியன் தொடர்-40'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6338321757822041376</id><published>2011-02-14T20:33:00.000+05:30</published><updated>2011-02-14T20:33:03.360+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-39</title><content type='html'>புத்த பகவானையும் அவர் கொள்கைகளையும் மனிதர்கள் வெறுக்கும்படி எழுதிவைத்ததும், புத்த சமயத்தினரைப்போல வெளி வேடம் போட்டுத் தீய நெறியில் ஒழுகியும், இத்தாந்திரீக ஜனங்கள் உலகத்தை நரகக் குழியில் அமிழ்த்தியதோடு, அறிவிலிகளாகிய பல ஜனங்கள் அரசர்களுக்குச் சிற்சில 1உபகாரங்கள் செய்து, அவர்களின் உதவியினால் புத்மதத் துறவிகளையும், சமண முனிவர் களையும் சித்திரவதை செய்தார்கள்; கழுவிலேற்றினார்கள். அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!! அவர்களின் கோயில்களையும் மடங்களையும்2 கொலைக்கள மாக்கினார்கள். விக்கிரகங்களை உடைத்தார்கள். ஆனால், இக்கொடுந் தொழிலாளர்களால் புண்ணிய பூமியென்ற ழைக்கப்படுகிற இந்த நரகக்குழியில் புத்த சமயமும், பிக்ஷுக்களும் இல்லாமற் போயினும், இன்னும் பூவுலகில் மக்கள் தொகுதியில் புத்த சமயத்தினரே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதியாரும் முழு உரிமையும் உடையவர்கள். சிலோன், பர்மா முதலிய இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் அடங்கிருப்பவர்களும் இந்நரகக் குழியில் கிடந்துழலும் இந்துக்களைப் போல் எல்லா வகையிலும் யாவருக்கும் அடிமைகளாக இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புத்த பகவானுடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகி வந்த அசோகன் முதலிய பேரரசர்களின் காலங்களில் கொலை, காமம் முதலிய பாகங்கள் தலைகாட்டாமல் எல்லா உயிர்களும் சுகமாய் வாழ இடமிருந்ததால், 3விண்ணாட்டிற் கொப்பாயிருந்த நாட்டில் முற்காலங்களில் பார்ப்பன நூலார்களின் மூதாதைகள் அனுஷ்டித்து வந்த களவுப் புணர்ச்சி, கொலை முதலிய பாவங்களை வளரவொட்டாமல் புத்த சமய, சமண சமயங்கள் ஒடுக்கி வருவதைக் கண்டு அப்புனித மதத்தை ஒழிக்கக் கண்டு பிடித்த பல தந்திரங்களுள் முதன்மையானது இத்தந்திர சாஸ்திரமே. இதன் பெயரும் வழக்க, ஒழுக்கங்களுமே இதற்குச் சான்று கூறும். எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிய  கடவுள், இத்தகைய வஞ்சக எண்ணத்துடன் பல நூல்களும், ஒழுக்கங்களும் உண்டு பண்ணின இவர்களைத் தன்வினை தன்னைச் சுடும் என்ற முறையாகப் பிறருக்கு அடிமையாகி வருந்தும்படியாக விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பர்த்ருஹரி என்னும் பெரியார் கூறுகிறபடி தஸ்மை நம: கர்மணே அத்தகைய பெருமைபொருந்திய வினைச் செயலின் பொருட்டு நமஸ்காரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது அத்தியாயம்&lt;br /&gt;&lt;br /&gt;ராஜன் வாழும் நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள ஒரு சிற்றூரில் குடியிருந்து வந்தவளும், நகரங்களைப் பார்த்திராதவளுமான ஒரு கிழவி நெடுநாள்களாக அரசனைப் பார்க்க அவாவுற்றிருந்தனள். ஒருநாள் குடிகளின் நன்மை தீமைகளை விசா ரிக்க எண்ணி, அவ் வூருக்கு அரசன் வருகிறான் என்று கேள்வியுற்று இந் தக் கிழவியானவள் எல்லோருக்கும் முன்னதாகவே அரசன் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யானைகள், குதிரைகள் மேளவாத்தியங்கள் எல்லாம் பார்த்த இவள், அரசனது உருவம் எப்படியிருக்குமோ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அரசன் இவளது கண்முன்னின்றும் மறைந்து சில தூரம் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்ததும் கிழவி, தான் கோரிய ஆள் இன்னாரென்று தெரிந்துகொண்டு, இவனா அரசன்? இவன் மனிதனாக வன்றோ இருக்கின்றான்! நான் என்னமோ எண்ணிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனைப் பார்க்கும் பொருட்டு வீணே பொழுதைப் போக்கினேனே! என்று வருத்தத் துடன் வீட்டிற்குச் சென்றாளாம். இந்தக் கிழவி அரசனைப் பார்க்குமளவும் அவன்பால் வைத்திருந்த அளவுகடந்த  மரியாதைக்கு அறியாமையே காரணமென்பது வெளிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே, வேதாகமத்தைக் கற்றுணராத நம்மவர்களும் அதனிடத்துப் பரிசுத்தத் தன்மையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் நம்மவர்களிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்த மேதாவிகள் கூட வேதத்தைப் புகழ்ந்து கூறுவது வழிவழியாகக் கேட்டு வந்த மூடநம்பிக்கையினாலேயாகும். இந்த வேதம் கேட்கிறவனுடைய காதில் ஈயம் காய்ச்சி விடுவதும்,வேதப் பொருளை மனத்தில் வைத்திருப்பவன் நெஞ்சைப் பிளப்பதும் புண்ணியச் செயலாக நடத்தி வந்தார்களெனினும், கல்வி அறிவில்லாத உண்மைக் கருத்து விளங்காமையாலும், இவ்வேதமானது பரம்பரை யாக வந்த ஓர் ஆசானிடம் பொருள் கேட்டுத் தெரிந்து கொண்டாலன்றி, ஏனையோருக்கு விளங்காத (உலக வழக்கிலில்லாத) ஒரு மொழியில் இருப்பதாலும், வேத மென்பது தெய்வவொளி திகழ்வது: சொல்லிற்கடங்காப் பெருமையுடையது என்று இவ்வாறு நம்பிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம் கண்மூடி நம்புவதில் என்ன பயன்? வேதப் புத்தங்கள் அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கின்றன. நாக்கை அரிந்துவிடுவார்களே, நெஞ்சைப் பிளந்து விடுவார்களே, ஈயத்தைக் காய்ச்சிக் காதுகளிலே விட்டுவிடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3412.html?sms_ss=blogger&amp;at_xt=4d5944087cf8e3f9%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6338321757822041376?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6338321757822041376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6338321757822041376'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/39.html' title='ஞானசூரியன் தொடர்-39'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6323860099747006157</id><published>2011-02-14T20:30:00.000+05:30</published><updated>2011-02-14T20:30:31.085+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-38</title><content type='html'>இவர்களின் சமயத்திலுள்ள சில பரிபாஷைச் சொற் களின் பொருள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்தம் என்றால், சக்தி பூசைக்குரிய மாமிசம்; இதற்கே சக்தி என்றும், புஷ்பமென்றும் சொல்லுவார்கள். தருதீயைச் சதுர்த்தி மாம்ஸம், மீன் சரவணயோனி முத்திரை, பஞ்சமி மைதுனம், ஜலதும்பிகை இவைகள் மீனைக் குறிக்கும் சொற்கள். தங்களின் தீய ஒழுக்கங்களைப் பிறர் அறிந்து நகைப்பார்களே என்றுதான் இங்ஙனம் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்தச் சமயத்திற்குக் கவுலன், சாம்பவன், ஆர்த்திர வீரன், கணேசன் இவ்வகையான பரிபாஷைப் பெயர்களும் உண்டு. பிறருக்குக் 1கண்டகன், விமுகன், சுஷ்கபசு இவை முதலிய இழிவான சில பரிபாஷைப் பெயர்களும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். 2பைரவி சக்கிரபூஜை பண்ணும் தருணத்தில் கட்குடத்தை வைத்துப் பூசித்து, ஓ கள்ளே! நீ பிரம்மனது சாபத்தினின்னும் விடுபட்டிருக்கின்றனையெனப் பிரார்த்தித்துப் பிறகு அங்குக் கூடியிருக்கிற ஆண், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுள் ஓர் ஆண் மகனையும் ஒரு பெண்மணியையும் நிர்வாணமாக உட்கார வைத்துப் பெண்களெல்லாம் ஆண்மகனுடைய மர்மஸ்தானத்தையும் இலக்காக்கிப் பூசை செய்கிறார்கள். பூசை முடித்தும் மிச்சமான சாராயத்தை இவர்களுக்குத் தலைவனான ஆசாரியன் கையிலெடுத்துப் பைரவோஹம் (நானே பைரவன்) என்று குடித்துவிடுகிறான். பிறகு அதே எச்சில் பாத்திரத்தில் சாராயத்தைப் பகிர்ந்து எல்லோரும் குடிக்கிறார்கள். பழையபடி இருவரையும் நிர்வாணமாக இருக்கச் செய்து யோனி பூசை நடத்து கிறார்கள். இத்தருணத்தில் பெண்ணின் கையில் ஒரு வாளும் புருஷன் கையில் ஒரு சூலமும் கொடுப்பார்கள். இவ்விருவர்களையும் கள்ளையும், இறைச்சியையும் தின்னச் செய்து, பிறகு எல்லோரும் கள்ளையும் இறைச்சியையும் உட்கொள்ளுகிறார்கள். பிறகு பெண்களின் சில ரவிக்கை அல்லது அடையாளத் துணிகளை அவிழ்த்தெடுத்து ஒன்றாகக் கலந்து ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எடுத்துக் கொள்ளுகிறார்கள். எந்தப் பெண்ணின் உடை எந்த ஆணின் கைக்கு வந்ததோ அன்று அந்தப் பெண் அவனுக்குச் சொந்தம். ஆயினும், தாய்க்கு மட்டும் விலக்கு ஏற்பட்டிருக்கிறது. சகோதரி முதலிய யாராயிருப்பினும் குற்றமில்லை. இச் செயலைப் பெரும் புண்ணியமாகவும் இவர்கள் நினைக்கி றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தந்திர(ஆகம) சாஸ்திரத்தின் உற்பத்தியைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியதன்றோ? புத்த சமயத்தை நாசம் பண்ணக் கங்கணங் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. உயிர்கள் பொதுவாக அருந்தல், பொருந்தல் என்கிற இரு விஷயங்களில் பிரியமுள்ளவைகள். இவ்விரண்டும் இச் சமயத்தில் எல்லோருக்கும் எக்காலத்தும் எளிதாகக் கிடைக்கும். புத்த சமயத்தில் இவ்வகை விஷயங்களில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ள இடங் கொடுக்கவில்லை. மனத்தைத் தூயதாக்கும் பொருட்டு உணவில் பாகுபாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இல்லறத்தார் பிறர் மனைவியை மனத்தில் கூட விரும்பலாகாதென்றும், அவளைப் பார்க்கும் போது, வயதில் மூத்தவளைத் தாய் போலவும், இளைய வளைத் தங்கை அல்லது மகளைப் போலவும் நினைக்க வேண்டுமென்றும், இதற்காகவே சதாபவித்ரோகம் (நான் எப்போதும் தூயவனாகவே இருப்பேன்) என்று எண்ணிக் கொண்டு அதன்படி ஒழுகி வரவேண்டும் எனறும் சொல்லப் பட்டிருக்கிறது. துறவிகள் எப்போதும் பெண் களைப் பார்த்தல் தொடுதல் இவைகளினின்றும் விலகி, ஆத்ம பாவனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. புத்த சமயத்தில் பிறப்பினால் ஜாதிவேற்றுமை இல்லாவிடினும், ஒவ்வொருவனுடைய மனோ நிலைமைக்கேற்றவாறு உயர்வு, தாழ்வு ஏற்பட்டிருக் கிறது. இத்தாந்திரீக மதத்தில் பணக்காரன் எந்த ஜாதி யானா யிருப்பினும், அவன் தீக்ஷை பெற்றுக்கொண்டு பூசைக் காலத்தில் ஒன்றாக இருக்கலாம். பூசைக்காலத்தில் எல்லோரும் துவிஜாதிகள்தான் (இரு பிறப்பாளர்). மற்ற காலங்களில் தத்தம் ஜாதி 3முறைப்படியே ஒழுக வேண்டும். இதற்குப் பிரமாணம்:-&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே&lt;br /&gt;வர்ணா த்விஜாதய;&lt;br /&gt;நிவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே&lt;br /&gt;வர்ணா ப்ருதக்ப்ருதக்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பைரவீசக்கிர பூசையின் போது எல்லோரும் துவிஜாதி (பிராமணர்)களே பூசை முடிந்ததும் அந்தந்த வருணத்தான் தனித் தனியாகவே இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரண்டு சமயங்களில் அறிவில்லா மாந்தர்களின் கருத்திற்கு இணங்கியது எது? புத்த சமயமா? நாகரிக சமயமா? உள்ளத்தையும், உடலையும் வாட்டியதன் பயனாக அடையும் முக்தியைக் காட்டிலும் ஒருவகை வருத்தமின்றி இம்மையிலும் சுகம், மறுமையிலும் கைலாசம் தங்களுக்கே சொந்தம்! ஆதலால், பகுத்தறிவில்லா மனிதர்களுக்குப் பார்ப்பனத் தந்திரமாகிய தந்திர சமயமே சிறந்தது. ஆனால், இதற்குப் பொருள் செலவழியும். இதை முன்னதாகவே தெரிந்துகொண்ட பார்ப்பனர்கள், பணக்காரன் தீக்ஷை பெற்றுக்கொள்ள அதிகாரியென்றும் பிரமாணம் எழுதி வைத்தார்கள். சக்கரவர்த்தியின் பிள்ளையாகப் பிறந்து, அரச போகத்தை அருவருத்துத் தள்ளி, முற்றுந் துறந்து முனிக்கோலம் பூண்ட பகவான் புத்தன், தனக்கொப்பான வர்கள் முக்தியடையத் தகுதி எனக் கூறினார். நிற்க. பார்ப்பனர்களில் புத்தமதத்தைக் கெடுக்க எண்ணி, அம்மதத்தைச் சார்ந்த துறவிகளைப் போல் வேடம் போட்டுக் கொண்டு சமயத்தைக் கெடுத்ததோடு, இத்தகைய கயவர்களை ஜீவகாருண்யத்தினால் தங்கள் குலத்துள் சேர்த்துக் கல்வி கற்பித்த புத்தமதக் குருமார்களையும் கழுவிலேற்றிக் கொன்றார்கள். இத்தோடு, தாங்கள் உணர்ந்துகொண்ட தத்துவக் கருத்துகளை அனாதியென் றும், உபநிஷத்தென்றும் எழுதி வைத்தார்கள். இதை வைத்துக்கொண்டுதான் பார்ப்பன மக்கள், தங்கள் மதத்திற்குச் சமமான மதம் வேறெதுவுமில்லையென்று சொல்லி, இக் காலத்தும் நம்மவர்களை ஏமாற்றுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/home/archive/3360.html?sms_ss=blogger&amp;at_xt=4d5943727c6a65e0%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6323860099747006157?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6323860099747006157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6323860099747006157'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/38.html' title='ஞானசூரியன் தொடர்-38'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-2553191210350662014</id><published>2011-02-11T19:54:00.000+05:30</published><updated>2011-02-11T19:54:31.861+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-37</title><content type='html'>இவர்கள் விஷ்ணுவின்பால் அன்பு வைத்து வைகுண் டத்தை அடைந்தவர்களாம். இப்பிரபந்தத்தை வைஷ்ணவப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவருக்கொழிய வேறு யாருக்கும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். பிரிட்டிஷ் அரசாட்சியின் உதவியால் யாரேனும் கற்றுக்கொண்ட போதிலும், கோயில்களில் பாடினால் இவர்கள் ஒருங்கு சேர்ந்து அவனது. உடலை அவனுக்கு உதவாமல் பண்ணி விடுவார்கள் என்பது திண்ணம். இந்த அய்யங்கார்களின் நித்தியத் தொழில்களில் மற்றொன்று திருநீறு அணிந்து சிவனை வழிபடுகிற சைவர்களையும், சிவாலயங்களையும் நிந்தித்தலே யாகும். சிவன் கோயில் சுடுகாடு என்றும், சிவனை வழிபடுகிறவர்கள் 1பறையர்கள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்2.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் வேதமும் அதைப்போலவே பிரபலமான தந்திர (ஆகம) சாஸ்திரமும் அவசியம் வாசிக்க வேண்டும். வாமமார்க்கம் என்ற ஒரு பகுதி தந்திர சாஸ்திரங்களிலுள் ளது. தசமஹா வித்தைகள் இதற்குள் அடங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அவைகள் இங்கு விரித்துக்கூற வேண்டிய அவசியமில்லாமையால், சுருக்கமாகக் கூறி முடிக்கின்றோம். இம்முறை முதலில் இமய மலைச்சாரலில் இருந்த பார்ப்பனர்களால் அனுஷ்டிக்கப்பட்டு நமது நாட்டின் பற்பல பாகங்களிலும் பரவிற்று , தில்லை மூவாயிரம் என்ற சொல்லில் அடங்கியுள்ள மூவாயிரம் பார்ப்பனர்களில் ஒருவர் 3அகோர சந்நியாசியாகிய சிவனேயாம். திருச்செந்தூரிலும், பத்ரீநாராயணம் முதலியவிடங்களி லும் முறையே இரண்டாயிரம் பிராமணர்கள் வீதம் போய் இம்முறையைப் பரவச் செய்தனர். இவ்விதமாகப் பன்னி ரண்டு இடங்களைத் தங்களுக்கென அமைத்துப் பிரச்சாரம் செய்ததால், இந்நாட்டில் இம்மதத்தைத் தழுவுகிற மனிதர்கள் பெருகலானார்கள். பிறகு இம்முறையிலும் பல பிரிவுகள் தோன்றலாயின. 4இவைகளை விளக்குகின்ற பிரமாணங் களில் சில கூறுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்யம் மாம்ஸம் சமீனம்&lt;br /&gt;சமுத்ரா மைதுனமேவச:&lt;br /&gt;ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர்மோக்ஷதா&lt;br /&gt;ஹியுகே யுகே (கானிகாதந்திரம்)&lt;br /&gt;பொருள்: கள்ளு, இறைச்சி, மீன், முத்திரை, (பிரவிடை ஸ்திரீயின் யோனி) மைதுனம் இவ்வைந்திற்கும் பஞ்ச மகாரங்கள் என்று (பரிபாஷை) பெயர். இவைகள் ஒவ்வொன்றும் மோக்ஷத்திற்குச் சாதனங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பீத்வா பீத்வா புன: பீத்வா&lt;br /&gt;யாவதபததி பூதலே&lt;br /&gt;உத்தாயச புன; பீத்வா&lt;br /&gt;புனர்ஜன்ம நவித் யதே   (மஹா நிர்வாண தந்திரம்)&lt;br /&gt;பொருள்: கள்ளைக் குடித்துக் குடித்து மெய்மறந்து தரையில் விழுமளவும் குடிக்க வேண்டும். தெளிந்தபின் எழுந்து குடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவனுக்கு மறுபடி பிறவியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாத்ரு யோனிம் பரித்யஜ்ய&lt;br /&gt;விஹரெத்ஸர்வ யோனிஷு&lt;br /&gt;வேத சாஸ்த்ர புராணானி&lt;br /&gt;ஸாமான்ய கனிகா இவ:&lt;br /&gt;ஏகைவ சாம்பவீ முத்ரா&lt;br /&gt;குப்தா குலவதூரிவ:&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பெற்ற தாய் ஒருத்தியொழிய, மற்ற ஸ்திரீகளையெல்லாம் புணரலாம். வேதங்கள், சாஸ்திரங் கள், புராணங்கள் இவைகளை விலைமகளைப் போலவும் இந்தச் சாம்பவீ முத்திரை (இப்போது சொன்ன அனுஷ்டான முறை) யொன்று மாத்திரம் குலமகளைப் போலவும் கருதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜஸ்வலா புஷ்கரம் தீர்த்தம்&lt;br /&gt;சாண்டலீ துஸ்வயம் காசி&lt;br /&gt;சர்மகாரீ ப்ரயாகாஸ்யாத்&lt;br /&gt;ரஜதீ மதுராமதா&lt;br /&gt;அயோத்யா புக்கஸீ&lt;br /&gt;ப்ரோக்தா (ருத்ரயாமன தந்திரம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: தீட்டுக்காரியைப் புணர்தல் (ருதுஸ்திரீ); புஷ்கர தீத்தம் ஸ்நானம்; சண்டாள (புலைச்சி) ஸ்தீரியின் சேர்க்கை காசி யாத்திரையும் கங்கா ஸ்நானமும்; சக்கிலிச்சி யின் சம்போகமே பிரயாகை ஸ்நானம்; வணணாத்தியின் சேர்க்கை, மதுரைக் குறத்தியைப் புணர்தல் அயோத்தியைத் தரிசித்த புண்ணியமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளுக்கு வேறாக அயோத்தி, மதுரை, மாயை, காசி முதலிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதாகச் சொல்வது பகுத்தறிவில்லாத 5பசுக்களின் கூற்றாகையால், நம்பத்தக்க தன்று என்பது இவர்களின் கொள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;1. அப்படியே சமணர் முன்னர் கூறியுள்ளார். ஆனால், அக்காலத்தில் அதற்குக்தக்க காரணம் உண்டு. அச்சமண மதத்திலிருந்து தோன்றியது வைஷ்ணவ மதம். இதில் சேர்ந்துள்ளவர் பல ஜாதியினர். நீ பறையன் என்று சொல்ல யோக்கியதை இல்லை. காரணம், உன் கடவுளாகிய விஷ்ணு தங்கையைப் பறையனுக்குக் கொடுத்தார் என்ற கெட்ட பேர் வந்து உன் கடவுளின் தலையிலேறிக் கூத்தாடுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;2. இத்தோடு நிற்காமல் விபூதி அணிந்த ஸ்மார்த்தன் வைணவன் வீட்டில் வந்த உடனே சாணித் தண்ணீரைத் தெளிப்பார்கள். காரணம், தன் வீட்டிற்குப் பறையன் வந்துவிட்ட அந்தத் தீட்டுப் போக.&lt;br /&gt;&lt;br /&gt;3. அகோர சந்நியாசிகள் பிணம், மற்றுமுள்ள எல்லா மாமிசமும் புசிப்பர். தலையோட்டில்தான் போஜனம். மற்றெல்லாத் தொழில்  முறையாகவே இருக்கும். தாந்திரீகப் புத்தகங்களைப் பார்வையிடுக. உண்மை விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கோர்ணவதந்திரம் முதல் பாகம் பார்க்க - தாந்திரீக ஆசாரம் 7 பிரிவாக வகுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;5. பசுக்கள்- தீக்ஷையில்லாத மனிதர்கள் (இவர்களுடைய சங்கத்தில் சேராதவர்கள்) இவ்விஷயம் தெரிந்தவர்கள் - தந்திர சாஸ்திரத்தை அனுஷ்டித்துவரும் குருக்கள், எத்தகைய தீய ஒழுக்கம் செய்தாலும் கெட்டதென்று சொல்வார்களா? அவர்களுடைய மதத்தில் இச்செயல்கள் நல்லதென்று சொல்லியிருக்கிறார்கள். பிறர்க்கு இச்செய்கை கெட்டதென்று தென்பட்டால், அம்மதத்தை விட்டு விலகுவதல்லாமல் இச்செய்கைகளைக் கெட்டதென்று சொல்லிக் கண்டிக்காதே. கண்டிக்கப்பட்டவன் மற்றொரு மதத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டும். அதில் ஆபாசக் குற்றங்கள் ஒன்றும் இல்லாததாயிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3231.html?sms_ss=blogger&amp;at_xt=4d55464be2d5759c%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-2553191210350662014?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2553191210350662014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2553191210350662014'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/37.html' title='ஞானசூரியன் தொடர்-37'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5295657820161842704</id><published>2011-02-09T21:44:00.001+05:30</published><updated>2011-02-09T21:44:31.405+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-36</title><content type='html'>கைலாசத்தை அடைதலே மோட்சம். அதற்குச் சாதனம் சிவலிங்க பூஜை, சிவலிங்கமென்பது ஆண், பெண் குறிகள் பொருத்தியிருப்பது போலச் சிலையினால் செய்த விக்கிரகம். கோயில்களில் பிரதிஷ்டித்திருக்கிற இத்தகைய லிங்கத்தைத் தீண்டிப் பூசைபண்ண ஆதி சைவர்களுக்கே உரிமையுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், ஏனையோர்கள் பூசைக்குரிய பண்டங்களைச் சேகரித்து ஆதிசைவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் சிபாரிசை யனுசரித்துப் பரமசிவன் மோட்சத்தையளிக்கச் சித்தமாயிருக்கிறார். ஆயினும், பணக்காரன்தான் சிவ தீட்சை பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவன். வடநாட்டில் கங்கைக்கரையில் பிறந்த பிராமணன்தான் ஆசாரிய ஸ்தானத்திற்கு உத்தமன். இவை முதலிய வசனங்கள் ஆகமங்களில் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தேவாரம் திருவாசகம் முதலியவைகளைக் கற்றுக் கொடுக்கிற பாடசாலைகளில் மாணாக்கர்களுக்குக் கல்வியும் உணவும் இனாமாக அளிக்கப்படுகின்றன. ஆனால், 1சைவர்கள் தங்கள் இனத்துப் பிள்ளைகளைத் தான் சேர்ப்பார்கள். இத்தகைய பாடசாலைகளில் பெரும் பகுதிகள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் உதவியால்தான் நடைபெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சைவர்களுக்குச் சொந்தமெனச் சில மடங்களும் அவைகளுக்கு ஏராளமான பொருள் வருவாயுள்ள சொத்துக்களும் உள. இவர்கள் ஏழை மக்களைத் துன்பு றுத்தும் இயற்கையுடையவர்கள் என்று முன்னரே கூறியுள்ளோம். மடங்களின் நிலைமையோ பிறரைக் குறித்த மட்டில் பார்ப்பனத் துறவி மடங்களைவிடக் கஷ்டமாயிருக் கிறது. சிருங்ககிரி முதலிய பார்ப்பனச் சந்நியாசி மடங்களில் காவியுடையணிந்தோ மற்றோருவன் செல்வானானால், மனுஸ்மிருதிப்படி தண்டிக்க அவர்களுக்கு அதிகார மிருந்தும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அங்ஙனம் செய்வதும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்தின் நிலைமையை நோக்கி ஒரு வேளையேனும் உணவளித்தோ அளியாமலோ, வந்த வனது உடலுக்குத் துன்பம் இல்லாத வண்ணம் விட்டுவிடுவார்கள். இவர்களோவென்றால், வந்தவன் தங்கள் குலத்தினன் என்று நன்றாய்த் தெரியாத மட்டும் ஒருவித உதவியும் செய்யமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் மறையாக, ஒவ்வொரு காலங்களில் பல நாள் பட்டினியால் வாடி பருக்கைக்குப் பஞ்சாய்ப் பறந்துவந்த பஞ்சையனிடத்தில் மடத்திலுள்ள மல்லர்கள் கைகலந்து சண்டை புரிவதுண்டு. வந்தவன் பார்ப்பனத் துறவி யாயினும், மடத்திலுள்ள இல் லறச் சீடர்களும்கூட, அய்யா! பரதேசி யாரே! என்றுதான் அழைப்பார்கள். இன்னும் சிலர், ஓய்! பரதேசி என்றுதான் அழைப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவர்களின் மடத்தில் துறவு பெற்றுக்கொண்ட தங்கள் இனத்தவர் களுக்குத் தம்பிரான் என்ற பட்டம் மடாதிபதியைப் பண்டார சந்நிதி என்பார்கள். அவரை எல்லோரும் வணங்கவேண்டும். அவர்களுக்குக் கீழ், கையேட்டுத் தம்பிரான் என்ற அதிகாரி ஒருவர் உண்டு. துறவு பெற்றுக்கொள்ள விரும்புகிற சைவர்கள் முதன் முதலில் தம்பிரான் உத்தியோகத்தில் நியமிப்பர். லஞ்சம் பெற்றுக் கொண்டு உத்தியோகத்திற்குச் சிபாரிசு செய்யும் அசிஸ்டெண்ட் அதிகாரிக்கும் இத்தகை யோர்களுக்கும் சிறிதேனும் வேற்றுமை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு, சிரமப்பட்டுத் தம்பிரான் ஆவதில் என்ன நன்மை என்றால், உணவு முதலியவைகள் உடல் உழைப்பின்றி இருந்தவிடத்தில் கிடைக்கும். எங்குச் சென்றாலும் மடத்துச் செலவில் சுகமாக வாழலாம். இந்த மடங்களில் நடக்கும் ஒழுங்கீனங்களைத் தமிழ் நாட்டினர் அனைவரும் அறிந்திருப்பார் களாகையால், விரித்துக்கூற வேண்டியதில்லை. இராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணா மலை முதலிய தலங்கள் சைவர்களின் 2புண்ணிய பூமிகளாம். வியாபிசாரம், களவு, கொலை முதலிய அக்கிரமங்களினால் இவ்விடங்கள் 3காசிக்ஷேத்திரத்தையும் தோற்கடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சமயத்தினரில் சைவர்களைப் போலவே மற்றொரு சாராரும் உளர். இவர்களை, வைகுண்ட அய்யங்கார் என்று சொல்லுவார்கள். வைகுண்டத்திற்குப் பிரயாணிகளைச் சேர்ப்பதே இவர்களின் முதல் தொழில். இவர்களுக்கு வேதத்தைவிடத் திருவாய்மொழி என்ற தமிழ்ப் பிரபந்தமே பிரபல பிரமாணம். பறையர், செட்டியார், குறவர் முதலிய இவர்களால் இழிவாக நடத்தப்படுகிற இனத்தைச் சார்ந்த பன்னிருவரே இப்பிரபந்தத்தை இயற்றியவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1. இங்குச் சைவர்கள் என்றது அவாந்தரச் சைவர்களில் ஒரு சாரார், பரம்பரைச் சைவ குலத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில வகுப்பினரைக் குறிக்கிறது. இவர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களில் வசித்துவருகிற வேளாள வகுப்பைச் சேர்ந்த பிள்ளை,  செட்டியார் முதலிய பட்டப் பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கொண்டைக்கட்டி முதலியார்கள், தேசிகர்கள் முதலிய சிலரும் இத்தகையோர்களே. ஏனையோர் சமயம் முதலிய தீக்ஷைகளனைத்தும் பெற்றாலும், சைவனென்கிற பட்டப் பெயர் கிடையாது. ஜாதிக் சைவர்களில் தீக்ஷையில்லாத பலரும் உளர். ஆனாலும், சைவர்களே இக்கொடுமையை எவ்வாறு கூறுவது? கொடுமை! கொடுமை!!&lt;br /&gt;&lt;br /&gt;2. புண்ணியத்தின் விளை நிலம்&lt;br /&gt;&lt;br /&gt;3. காசி க்ஷேத்திரத்தின் வரலாறு இதன் முடிவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3089.html?sms_ss=blogger&amp;at_xt=4d52bd1ff46800cd%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5295657820161842704?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5295657820161842704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5295657820161842704'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/36.html' title='ஞானசூரியன் தொடர்-36'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-794219555394816240</id><published>2011-02-08T18:23:00.000+05:30</published><updated>2011-02-08T18:23:12.684+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-35</title><content type='html'>அதற்குரிய உதாரணங்கள் பின்வருமாறு:&lt;br /&gt;பசுஸ் சேந்நிஹத்; ஸ்வர்க்கம்&lt;br /&gt;ஜ்யோதிஷ்டோ மேப்ரயாஸ்யதி;&lt;br /&gt;ஸ்வபிதா யஜமானேன தத்ர&lt;br /&gt;கஸ்மாந்ந ஹன்யதே?&lt;br /&gt;யூபம் சதித்வா பசூன்&lt;br /&gt;ஹகவாக்ருத்வா ருதிரகர்த்தமம்&lt;br /&gt;யத்யேவம் கம்யதே ஸ்வர்க்கே&lt;br /&gt;நாகே கேன கம்யதே?&lt;br /&gt;அந்தே தமஸி மஜ்ஜந்தி&lt;br /&gt;பசுபிர்யே யஜந்திதே;&lt;br /&gt;ஹிம்ஸா நாமபவேத் தர்மோ&lt;br /&gt;நபூதோ நபவிஷ்யதி&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஜோதிஸ்டோம யாகத்தில் கொல்லப்படுகிற பசு சுவர்க்கத்தை அடைவது உண்மையானால், யாகம் செய் கிறவன் தன் தந்தையைக் கொன்று சுவர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைக்கப்படுகிற பசுவைக் கட்டும் தூண்) உண்டு பண்ணிப் பசுக்களைக் கொன்று, இரத்தச் சேற்றை உண்டு பண்ணுவன சுவர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்? பசுவைக் கொன்று யாகத்தை நடத்துகிறவர்கள், இருள் சூழ்ந்த நரகத்தில் விழுவார்கள். கொலையானது எக்காலத்தும் தருமமாக மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வித யுக்தி வாதங்களால் இவர்களின் யாகத்தை மறுத்து வந்தது ஒன்றே பவுத்தர்கள் செய்த பிழையாகும். இதனால், இந்நாட்டினின்றும் அவர்களை ஓட்டியும் கொலை செய்தும் நாசம் பண்ணியதுடன், நாஸ்திகோ வேத நிந்தக வேதத்தை நிந்திக்கிற பவுத்தன் (1நாஸ்திகனேயாம் என்று புராணங்களிலும் இகழ்ச்சியாக எழுதி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சனாதன தருமத்தின் உட்பிரிவுகளில் முக்கியமான தந்திர (ஆகம) சாஸ்திரங்களைப் பின்பற்றி ஒழுகுவோரையும், அவர்கள் அடைய விரும்பும் முக்தியின் முறையையும் சுருக்கமாகக் கூறிவிட்டு இவ்வத் தியாயத்தை முடித்துவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுடலைச் சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், எலும்புகளைக் கோத்து மாலையாக அணிதல், தலையோட்டில் உண்ணுதல் முதலிய சிவனுடைய ஒழுக்கங்களைப் பின்பற்றி வந்த சைவர்களை ஜைனர்கள் இழிவாகக் கருதினர். திருஞான சம்பந்தருக்கு முன்னிருந்த சைவர்கள் 2நரபலி முதலிய கொடுந்தொழில்களையும் இயற்றி வந்தனர். இதை அறிவதற்குத் தந்திர (ஆகம) சாஸ்திரங்களும், ஜைன பவுத்தர்களின் நூற்களும் உதாரணங் களாக இருக்கின்றன. (&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய கொடிய ஒழுக்கங்கள் முக்தியைத் தருவன போலும்) இக்காலத்திலும் கூட சைவசமயத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுகிற சில சூத்திரரும், பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று சொல்லித் திரிகின்ற சிலரும் தங்களுடைய வயிற்றை நிரப்பும் பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவது வழக்கமாயிருக்கிறது. பார்ப்பனரல்லா தாரின் முன்னேற்றத்திற்குப் பார்ப்பனர் எப்படித் தடை யாயிருக்கிறார்களோ, அப்படியே இந்தச் சைவர்களும் இந்து சமயச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கிற ஏழை மக்களின் முன் னேற்றத்தைத் தடுத்து வருவதைத் தமிழ் நாட்டின்கண் அறி வாளிகளாயும், சுயநலமற்ற வர்களாயுமிருக்கிற வர்களுள் ஒவ் வொருவரும் அறிந்தே இருக்கி றார்கள். இவர்கள் அனாதிச் சைவர். ஆதி சைவர், அவாந் தரச் சைவர் என 3 மூன்று&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுகளையுடையவர்கள். இவர் களின் வரலாறு:- தாங்கள் தக்ஷிணாமூர்த்தியின் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அதனால் அனாதிச் சைவர்களென்று சிலர் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆதியில் சூத்திரர்களா யிருந்து, பிறகு சிவ பூஜைக்காகவே பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று பட்டப்பெயரும் சூட்டிக் கொண்டவரே ஆதி சைவர்கள் என்றும், கைலாசத்தி லிருந்து பூவுலகில் சிவபூசை செய்யும் பொருட்டுச் சிவனால் அனுப்பப்பட்டவர்களே எங்களின் மூதாதைகள். அதனால், நாங்கள் ஆதி சைவர்கள் என்றும் தாங்களாகவே சொல்லிக் கொள்ளுகிறவக்ள் ஆதி சைவர்கள், கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளனானான் என்கிற பழமொழிக்கிணங்க, ஆதி சைவருவடையவும், அனாதிச் சைவருடையவும் பொய் வலைக்குள் சிக்கி, அவர்களுக்குப் பணம் கொடுத்துச் சிவ தீக்ஷையும் சைவப்பட்டமும் பெற்றுக்கொண்டு, தங்கள் குலத்தினரின் முகத்தில் கரியைத் தடவி அவர்களை வெறுத்துத் தள்ளுகிற மற்றொரு சாரார் அவாந்தரச் சைவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு இக்காலத்திய சமய நூற்கள் தேவாரம், திருவாசகம் முதலிய சில நூற்களேயாம். இவைகளுக்கு வைதிக சைவசித்தாந்தம் சாஸ்திரங்களென்றும், சுத் தாத்வித சைவ சித்தாந்தம், வைதிக சைவசித்தாந்தம், வேதாகமோத்தம சைவ சித்தாந்தமென்றும் மற்றும் பெயர் இவைகளின் உற்பத்திக் காலம் புத்த சமயம் இந்த நாட்டை விட்டொழிந்த காலமும் ஏறக்குறைய ஒன்றேயாம். சில தாந்திரீக பக்தர்கள் பவுத்த, ஜைனர்களைக் கொலை செய்ய உதவி செய்யும்படிக்குச் சிவனைக் குறித்துக் கூறும் பிரார்த்தனைப் பதிகங்களும் மற்றும் இவற்றுள் அடங்கி யிருக்கின்றன. இவைகளின் பழக்கம் ஆயிரத்தொரு நூற்றாண்டு இருக்கலாமென்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் சென்றதும் இவைகளை ஒன்று சோத்து, பன்னிரண்டு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் எனப் பெயர் கொடுத் திருக்கிறார்கள். ஜைன புராணங்கள் கூறுகிறபடியே பெரியபுராணம் என்ற இவர்களுடைய நூலும் அறுபத்து மூன்று பக்தர்களின் அவதாரச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. இவ்வறுபத்து மூவர்களும் அடைந்தது மோட்ச மானால், சிவ தீட்சை முதலிய கருமங்கள் மற்றும் பரமசிவனிடத்தில், வைத்த அன்பு ஒன்றே இவர்களுக்கு மோக்ஷ சாதனமாக நின்றது எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. வேதத்தை நம்பாதவன் நாஸ்திகன்&lt;br /&gt;2. சிறுத்தொண்டன் மகனைக் கொன்று அருந்திய கதை உலகமறியும்.&lt;br /&gt;3. சைவர்களின் பல பிரிவினைகள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் இம்மூன்று பிரிவிற்குள் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/3021.html?sms_ss=blogger&amp;at_xt=4d513c76a09f9509%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-794219555394816240?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/794219555394816240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/794219555394816240'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/35.html' title='ஞானசூரியன் தொடர்-35'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7045044123729008769</id><published>2011-02-06T23:06:00.000+05:30</published><updated>2011-02-06T23:06:45.664+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-34</title><content type='html'>ஞானசூரியன் தொடர்-34&lt;br /&gt;ஒருவேளை தான் மற்றொருவனைத் துன்புறுத்து வானாகில், தன்னை மற்றொருவன் துன்புறுத்துங்காலையில் துக்கியாதிருக்க வேண்டும். சாம்மியவாதம் சாந்தமாகவரும் துன்பங்களை அனுபவித்துச் சும்மாயிருப்பதுதான் இனிமேல் சுகம். இக்காலம் வரைக்கும் சமணபுத்த சந்நியாசிகள் தங்கள் கையில் ஏதாகிலும் ஓர் ஆயுதத்தை எடுத்துச் சத்துருவை வெற்றிபெறப் போனதாகச் சரித்திரம் கிடைப்பது மிகத்துர்லபம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளை யிட்டிருந்ததாகச் சங்கவிஜயம் என்னும் நூலில் கூறப் பட்டுள்ளது. புத்தபிக்ஷுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று பிருஹந் நாரதீய புராணம் கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய சூலபாணி என்னும் பார்ப்பனன் புத்த சமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப் போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக் கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவ ராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணுபகவான் கல்கியென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்தில் இந்து சமயக்கோயில்களில் பெரும் பகுதியும் புத்தாலயங்களே. இந்தக் கோயில்களில் இருந்து புத்த விக்கிரங்களை நாசம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையினாலும், மற்றும் வேற்றுமைப்படுத்தியதனாலும் இன்னும் ஸ்தூபிகளில் பிறவிடங்களிலும் புத்த விக் கிரகங்களுள் சில அழியாமலிருப்பதே இதற்குச் சான்று விசிஷ்டாத்வைத வைஷ்ணவ குருவான இராமாநுஜர் மைசூர் சமஸ்தானத்தில் சிரவணபௌகுளா என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகில் இருந்த எழுநூற்றிற்குமேற்பட்ட ஜைனக்கோயில்களை அழித்து, அந்தக் கோயில்களின் கற்களால் ஆற்றில் பாலம் கட்டுவித்த கதையும் சரித் திரத்தினால் விளங்கும், இராமாநுஜரும் அவரின் சீடர்களும் இத்தோடு நில்லாமல் ஜைனர்களின் சமய நூற்களில் பலவற்றைத் தங்களது சமய நூற்களாகத் திருத்திச் சுவாதீனம் பண்ணியும் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்யவேண்டாம் என்று வருந்திக்கேட்கும் தருணத்தில், கொடியவர்களாகிய இந்துக்களால் அடிபட்டும் கொலையுண்டும் துன்புற்றிருந்தாலும் ஒரு காலத்தும் கொல்லாமை விரதத்தினின்றும் தவறாத புத்த பிக்ஷுக்களை இவர்கள் கொன்றிருப்பதோடு நில்லாமல், இந்தக் கொலைக்கு உதவி செய்யத் தங்கள் தெய்வத்தினிடத்தும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பலருள் ஒருவரான திருஞானசம் பந்தர் தமிழில் பாடியிருக்கிற பாடல்களில் சில கீழே எடுத்துக் காட்டு கின்றோம்.. இவை, மூவர் அடங்கன் முறை என்னும் நூலின்கண் இருப்பவை களாம். அடங்கன் முறையோ நம்மவர்களால் நித்திய பாராயணம் பண்ணப்படுவதுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேத வேள் வியை நிந்தனை செய்துழலாத&lt;br /&gt;மில்லி யமனொடு தேரரை&lt;br /&gt;வாதில் வென் றழிக் கருத்திரு வுள் ளமே&lt;br /&gt;ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென்&lt;br /&gt;னால வாயிலு றையுமெம் மாதியே&lt;br /&gt;வைதிகத்தின் வழியொழுகாதவக்&lt;br /&gt;கைதவம் முடைக்கார மண்டேரரை&lt;br /&gt;யெய்திவாது செயத்திருவுள்ளமே&lt;br /&gt;மைதிகழ்தரு மாமணி கண்டனே&lt;br /&gt;ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்&lt;br /&gt;ஆலவாயிலுறையு மெம்மாதியே&lt;br /&gt;அந்தணாளர் புரிய மருமறை&lt;br /&gt;சிந்தை செய்யா வருகர் திறங்களைச்&lt;br /&gt;சிந்த வாது செயத்திரு வுள்ளமே&lt;br /&gt;வெந்த நீற தணியும் விகிர்தனே&lt;br /&gt;ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்&lt;br /&gt;ஆலவாயிலுறையு மெம்மாதியே&lt;br /&gt;வேட்டு வேள்வி செயும் பொருளைவிளி&lt;br /&gt;மூட்டுச் சிந்தை முருட்டமண் குண்டரை&lt;br /&gt;யோட்டி வாது செயத்திரு வுள்ளமே&lt;br /&gt;காட்டிலானை யுரித்தவெங்கள்வனே&lt;br /&gt;ஞாலநின் புகழே மிக வேண்டுந்தென்&lt;br /&gt;ஆலவாயிலுறையு மெம்மாதியே&lt;br /&gt;&lt;br /&gt;இவை போன்ற செய்யுட்கள் பலவுள. இவையனைத்தும் சுடலைப் பொடி பூசுகிற தங்கள் தெய்வத்தினிடம் புத்த சமயிகளைக் கொலை செய்யப் போதிய வன்மையைத் தங்களுக்குத் தந்தருளும்படி பிரார்த்திப்பனவேயாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்கூறிய அரசர்களையும், சமயத் தலைவர்களான பார்ப்பனர்களையும்போல, இதே ஞானசம்பந்தரும், கன்னட நாட்டினனாகிய ரிஷபதேவன் முதலிய பலரும் பவுத்தர் களையும், ஜைனர்களையும், கழுவேற்றியும் உலக்கையால் அடித்தும் மற்றும் பல சித்திரவதைகளாலும் கொன்றிருக் கின்றனர். இத்தகைய கொலைகாரப் பாவிகளாகிய இவர்களைத் துலுக்கர் கொன்றதிலும், இவர்களின் பெண்களைச் சிறையெடுத்ததிலும் என்ன அதிசய மிருக்கிறது? இன்னும் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்த பிறகுதான் அந்தப் பாவம் இவர்களை விட்டொழியுமோ? ஆனால், கொல்லா விரதத்தைக் கடைபிடித்தொழுகிய பவுத்தர்கள் இவர்களுக்குச் செய்த தீமைகளைக் குறித்தும் சிறிது ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/2870.html?sms_ss=blogger&amp;at_xt=4d4edc06706610bc%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7045044123729008769?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7045044123729008769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7045044123729008769'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/34.html' title='ஞானசூரியன் தொடர்-34'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-4891339606660205351</id><published>2011-02-04T21:55:00.000+05:30</published><updated>2011-02-04T21:55:38.103+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-33</title><content type='html'>பொருள்: தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மையைப் பயக்குவனவாகும். எங்களால் வெறுக்கப்படுகிற (பவுத்தர் முதலிய) மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆக வேண்டும். (தனது வார்த்தையாகிய) வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காதவர்களுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யஜுர் வேதத்தில் பவுத்தர்களைக் கொல்லுவதற்குரிய மந்திரங்களும், சடங்குகளும் பல காணப்படுகின்றன. உதாரணமாக ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டர் அராதய இவை முதலிய மந்திரங்களைக் கவனியுங்கள். தாங்கள் கோயிலில் மணியடிப்பதுங்கூட இராட்சதர்களைப் பயமுறுத்தும் பொருட்டாம். பல யாகச் சடங்குகளை நிறைவேற்றும்போது, சொல்லப்படுகின்ற மந்திரங்களின் பொருள், யாகத்திற்கு இடையூறு செய்கிற 1இராட்சதர்கள் நாசமடையட்டும் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லாமை என்னும் மகாவிரதத்தைக் கடைபிடித் தொழுகுகின்ற பவுத்தர்கள் தாம் முற்காலத்தில் யாகங்களுக்கு இடையூறு செய்திருந்தனர். அது யாகம் செய்கிற இடத்திற்குச் சென்று கொலையின் கொடுமையையும், அதனால் நேரும் பாதகங்களையும் விளங்கக்கூறி உபதேசித்ததே ஒழிய, ஒருபோதும் இவர்களை எதிர்த்துப் போர் புரிந்ததாகவே தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புளுகுக்களஞ்சியமாகிய இராமாயணத்தில், யாகத்துக் கிடையூறு செய்த இராட்சதனாகிய மாரீசன், இரத்தத்தைச் சிந்தி யாக பூமியைக் கெடுத்தானென்றும், இரத்தத்தையே குடிப்பதும், பச்சை இறைச்சியைத் தின்பதும் இராட்சதர்களின் இயற்கையென்றும் சொல்லியிருப்பதிலுள்ள உண்மையை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்போது இக்கதைகளால் புத்தரைச் சாடுகிறார்கள் சிலர். இவைகள் நடந்தது எவ்வாறெனின், வேதத்தில் சைவ மதத்தை ராட்சதா மதம் என்று கூறியுள்ளார். அதற்குத் தலைவன் சிவன், சிவன் யாகத்தை மறுத்ததுண்டு. இந்த இராமாயணக்கதை பண்டையகாலத்தில் சைவரைக் கட்டாயமாகச்&lt;br /&gt;சாரும் என்பர். ஆராய்ச்சி முறையால் இதன் உண்மையை அறிந்து கொள்ளுக.&lt;br /&gt;&lt;br /&gt;ரிக் சம்ஹிதையில் 2வதீர்ஹி தஸ்யும் தனினம் கனேன் இந்திர, தாங்கள் ஒருவராகவே வச்சிராயுதத்தினால் தஸ்யுக் கூட்டத்தை (பார்ப்பனரல்லாதாரை)க் கொன்று எங்கள் துன்பத்தை யொழித்தீரே என்று இவை முதலிய வாக்கியங்களால் இந்திரனைப் புகழ்ந்து கூறியிருப்ப திலிருந்தே. அக்காலத்திய கொலைகார ஆரியர்கள நம்மவர்களுக்குச் செய்த கொடுந்தீங்குகள் நன்கு புலனாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பல தடவைகளிலும் அளவிறந்த புத்தமதத் துறவிகளை வெட்டிக் கொன்றிருப்பது கீழ்க்காணும் குறிப்புகளால் வெளிப்படையாகும். புரோஃபசர் லக்ஷ்மிநரசு வெகு நாள்களாக உழைத்து எழுதிய மதச்சரித்திரத்தில் இந்துக்களால் புத்த பிக்ஷுக்கள் கொல்லப்பட்ட விவரத்தை இங்ஙனம் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனுமான புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 3ஆராமங்களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஒரு நூற் றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசா னான விக்கிரமாதித் தன் என்பானும், மற் றொரு அரசனான கனிஷ்கன் என்பா னும் மேற்கூறியவாறே பிக்ஷுக்களைச் கொல் வது, அவர்களின் பர் ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்கா ளத்திற்குஅரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 4விக்கிரங்களையும் துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் 5பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 6ஸ்ரீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான 7குமாரிலபட்டன் என்னும் பார்ப்பனனொரு வனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்க்ஷுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. சுதன்வாவென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், தன்னை ஒருவன் துன்புறுத்தக்கூடாதென்ற எண்ணம் கொண்டவன், அவன் மற்றொருவனைத் துன்புறுத்தலாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;1. புத்தர்கள் என்க.&lt;br /&gt;&lt;br /&gt;2. (தனிமை) பணக்காரன் எனப் பொருள். இதனால் அக்காலத்தில் நம்மவர்களுக்குள் செல்வம் படைத்திருந்த பலரையும், அரசர்களையும் இந்தப் பார்ப்பனர்கள் வஞ்சித்துக் கொன்றிருப்பது வெளிப்படுகிறது. இதைப்போன்ற கதைகளும் வேதத்திற் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. புத்தபிக்ஷுக்களின் மடம். இது அழகிய வனங்களின் நடுவில் இருப்பதால், ஆராமம் என்ற பெயருடன் விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;4. புத்த விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணிய திருக்கோயில்.&lt;br /&gt;&lt;br /&gt;5. முக்தி&lt;br /&gt;&lt;br /&gt;6. ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயர் புத்தமத அரசனொருவன் இருந்தான். இரத்தினாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா முதலான பல நாடக நூற்களையும், சுப்ரபாத ஸ்தோத்திரம், அஷ்டமஹா ஸ்ரீசைதய சமஸ்க்ரி, தஸதோத்திரம், ஜாதகமாலா முதலிய புத்தசமய நூற்களையும் இவன் இயற்றியிருக்கிறான். என்றாலும், ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயருள்ள பலர் இருந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. இவன் புத்த சமயத்தில் பிக்ஷுவாய்ப் பலகாலம் இருந்து, பிறகு திரும்பிப் பார்ப்பனனாய் மாறி அவர்களைக் கொன்றவன். இவன் கதை சரித்திரப்பிரசித்தம். ஆதலால்தான், அந்தக்கடவுள், துலுக்கனை உண்டு பண்ணி இந்துக் கோயில்களையும், இந்து மதத்தவரையும் வேட்டையாடுவதே தொழிலாக வேண்டிய மதத்தையும் உண்டுபண்ணி இந்நாட்டுக்கு விட்டது. இனி என்ன செய்வோம்.?&lt;br /&gt;&lt;br /&gt;-http://viduthalai.in/new/page-3/2744.html?sms_ss=blogger&amp;at_xt=4d4c28649871fc1a%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-4891339606660205351?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4891339606660205351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/4891339606660205351'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/33_04.html' title='ஞானசூரியன் தொடர்-33'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-40949136121164493</id><published>2011-02-04T21:54:00.000+05:30</published><updated>2011-02-04T21:54:23.829+05:30</updated><title type='text'>ஞானசூரியன் - தொடர்-32</title><content type='html'>1மஹோததி என்ற பெயரையுடைய இச்சுவடி முழுவதும் இத்தகைய ஆபாச வாக்கியங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அமாவாசையன்று நடுநிசியில் வடயக்ஷிணி மந்திரம் செபிக்கிறவனால் அடையப்படுகிற சித்திகள் பின்வருமாறு:&lt;br /&gt;ஸ்ருணோதி நூபுராராவம்&lt;br /&gt;வந்த்ரீ கீவத்வலிம் தத்;&lt;br /&gt;ஸ்ருத்வைவ ப்ரஜமேன் மந்த்ரம்&lt;br /&gt;வீதத்ராஸ ஸ்சதாம் ஸ்மரேத்&lt;br /&gt;தத: ப்ரத்யக்ஷதோ&lt;br /&gt;தேவீ மீக்ஷதேஸுரசார்த்தினீம்;&lt;br /&gt;தத: காமபூரணாத்ஸா&lt;br /&gt;ததாதீஷ்டானி மந்த்ரிணே,&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மந்திரம் செபிக்கிறவனது காதில் முதலில் சிலம்பொலியும், பிறகு சங்கீதமும் கேட்கும் இவைகளைக் கேட்டுக் கொண்டே பயமில்லாமல் மந்திரத்தைச் செபிக்க வேண்டும். உடனே தேவியானவள் இவனைப் புணர்ச்சி செய்ய விருப்பமுள்ளவளாய் நெருங்கி வருவாள். அவளது கோரிக்கை நிறைவேறினதும் இவனுடைய விருப்பங்களையும் நிறைவேறச் செய்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக போகத்தையும், சத்துரு சம்ஹாரத்தையும் விரும்பிச் செய்கின்ற இத்தகைய மந்திரங்கள் பலவுள. மிக இரகசிய மென்று சொல்லியிருக்கிற மற்றொரு பூஜா விதியையும் கவனியுங்கள்.&lt;br /&gt;கோபனீய; ப்ரயோகோத&lt;br /&gt;ப்ரோச்யதே ஸர்வஸித்தித&lt;br /&gt;1 மஹோததி என்பது: தந்திர நூற்களில் ஒன்று. இதற்கு மந்திர மஹோததி என்று பெயர். முன்காலத்திய சைவம், இவைகளை உலகியோர் பொறுக்க முடியாததனால் இரண்டு பெரு மதங்கள் வேலை செய்ததனால் சிறிது குறைந்தது. (அவை சமணமும், புத்தமும்)&lt;br /&gt;பூதாஹே க்ருஷ்ணபக்ஷஸ்ய&lt;br /&gt;மத்யராத்ரே தமோகனே&lt;br /&gt;ஸ்நாத்வா ரக்தாம்பரதரோ&lt;br /&gt;ரக்தமால்யானுலேபன:&lt;br /&gt;ஆனீய பூஜயேந்நாரீம்&lt;br /&gt;சுன்னமஸ்தாஸ்வ ரூபிணீம்;&lt;br /&gt;ஸுந்தரீம் யௌவனாக்ராந்தம்&lt;br /&gt;நரபஞ்சக காமினீம்:&lt;br /&gt;ஸ்மிதாம் முக்தகபரீம்&lt;br /&gt;பூஷாதானப்ர தோஷிணீம்,&lt;br /&gt;விவஸ்த்ராம் பூஜியித்வைனாயுதம்&lt;br /&gt;ப்ரஜபேன்மலும்: கச்சேத்தாம் ப்ரஜபேன்மலும்&lt;br /&gt;அனேனவிதினா லக்ஷ்மீம் புத்ரான்&lt;br /&gt;பௌத்ரானயச: ஸீகம்:&lt;br /&gt;நாரீமாயுஸ்சிரம் தர்மமிஷ்டமன்யதவாப்னுயாத்&lt;br /&gt;கிம்பஹுக்தேன வித்யாயா&lt;br /&gt;அஸயாவிஜ்ஞான மாத்ரத:&lt;br /&gt;சாஸ்த்ரஜ்ஞானம் பாபநாச:&lt;br /&gt;ஸர்வஸௌக்கியம் பலேத்ருவம்&lt;br /&gt;உஷஸ்யுத்தாய சய்யாய&lt;br /&gt;முபவிஷ்டோ ஜபேச்சதம்:&lt;br /&gt;ஷண்மாஸாப்யந்தரே மந்த்ரீ&lt;br /&gt;கவித்வேன ஜயேத் கவிம்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மிகப் பிரயத்தனத்துடன் மறைத்து வைக்கத் தக்கதும், எல்லாச் சித்திகளையும் தரவல்லதுமான பிரயோகத்தைக் கேளுங்கள். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியன்று நடு இரவில் ஆகாயம் மேகத்தினால் மறைந்து மிக இருட்டா யிருக்கும்போது நீராடி, சிவப்புச் சந்தனம், சிவந்த மாலை, சிவந்த உடை இவைகளை அணிந்து, ஒரு தனி இடத்தில் இருந்துகொண்டு, இளமையும் அழகும் நிறைந்தவளும், அய்ந்து மனிதர்களைப் புணர்ச்சி செய்யத்தக்க ஆற்றலைப் படைத்தவளும், அவிழ்த்துவிட்ட கூந்தலையும் புன்சிரிப்போடு கூடிய முகத்தையுமுடைய அவளுக்கு ஆடைகளும் அணிகளும் கொடுத்து மகிழ்ச்சியுண்டாக்கிப் பிறகு, அவளுடைய உடைகளைக் களைந்து நிர்வாணமாகப் பூசிக்க வேண்டும். பிறகு அவளைப் புணர்ந்துகொண்டே பத்தாயிரம் உரு மந்திரம் செபிக்கவேண்டும். இவ்விதம் செய்து வருகிற மஹானுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்மனைவி முதலிய விரும்பிய பொருள் அனைத்தும் கைகூடும். சாஸ்திரங்களை உணரும் ஆற்றலும் உண்டாகும். பாவம் இவனை அணுகாது. நாள்தோறும் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால், ஆறு மாதங்களுக்குள் சுக்கிராச்சாரியாரை விடச் சிறந்த கவியாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயினாற் சொல்லவும், காதினால் கேட்கவும் தகாத அத்தகைய சொற்குவியல்களே இந்துக்களின் 1சமயநூற்கள். நிற்க கவுடில்யனுடைய அர்த்த சாஸ்திரங்களைப் பார்த்தால், முற்காலத்திய ஒழுக்கங்கள் நன்கு புலப்படும். அக்காலத்தில் பகைவரை வெல்லுவதற்கு ஆயுதங்களைவிட 2அபிசார முறையையே அதிகமாகக் கையாண்டு வந்தார்கள். இந்துக்களின் ஆட்சி முறைகளை முன்னமே கூறியுள்ளோம். இவர்களின் ஆட்சியில் நம்மவர்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கிற யார்தான் பிரிட்டிஷ் ஆட்சியை நிந்திப்பார்கள்? மேற்கூறிய இழிவான மந்திரங்களையும் பூஜைகளையும் அனுஷ்டிக்கிற இந்துக்களின் காதில் பவுத்தன் என்ற சொல் விழுந்ததும் நிலவேம்புக் கஷாயம் குடித்தவன் முகத்தைச் சுளிப்பது போல் சுளிக்கிறார் களே இது ஏன்? காமம், வெகுளி, மயக்கம் இவைகளை ஒழித்தலும், கொல்லாமை என்கிற விரதமும் மோட்சத்திற்கு உரிய சாதனங்கள் என்று உபதேசித்த புத்தபகவானுடைய உபதேச அமுதமும், பஞ்சமா பாதகங் களையே விரதமாகக் கொண்டு ஒழுகுகிற இந்தக் கயவர்களுக்குக் கைப்பாகத் தோன்றுவது இயற்கையே.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்கள் நாள்தோறும் செபித்து வருகிற மந்திரங்களில் ஒன்று கீழ்க் கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;3ஸுமித்ரிய ந ஆப ஒஷதய: ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை ஸந்து யோஸ்மான் த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம    (யஜுர் வேதம்)&lt;br /&gt;&lt;br /&gt;1. சமயங்களுக்கு முதனூலாகிய ஆகமம், தந்திர நூற்களாம். இவைகளையே மந்திர சாஸ்திரமென்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அபிசாரமென்பது மாரணப் பிரயோகமென்க.&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த மந்திரத்திற்குத் தயானந்தர் அர்த்தம் புரிந்ததைக் கவனியுங்கள். ஆரியாபி வினயம் என்ற நூலைக் கவனியுங்கள். இதில் 100 வேதப்பாட்டுகள் உள்ளதில அநேகப் பாட்டுகள் எங்களுக்கு விரோதமானவர்கள் நாசமடையட்டும் என்ற அர்த்தத்துக்கொப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/archive/2614.html?sms_ss=blogger&amp;at_xt=4d4c2811b6522d22%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-40949136121164493?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/40949136121164493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/40949136121164493'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/32.html' title='ஞானசூரியன் - தொடர்-32'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6871847537649982408</id><published>2011-02-01T23:04:00.000+05:30</published><updated>2011-02-01T23:04:11.059+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-31</title><content type='html'>இனி ஆகமங்களின் கருத்துகள்:&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் தவிர, சில உபாசனைகளின் ஆபாசங்களையும் ஈண்டுக்கூறுகிறோம். அவற்றுள் காளிகாதேவியின் தியான சுலோகமும் பூசை முறையும் கீழ் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;ஸத்ய: ச்சின்னசிர:க்ருபாணமபயம்&lt;br /&gt;ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்&lt;br /&gt;கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா&lt;br /&gt;ஸுருசிராமுன் முக்த கேசாவலீம்:&lt;br /&gt;ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்&lt;br /&gt;சவகரைர் தேவீம் பஜேகாளிகாம் (மந்த்ர மஹோததி)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழத்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும ஒழுகுகின்ற இரத்தப் பெருக்கும், சவங்களைத் தோடாக உடைய காதுகளும், சவத்தினது கைகளின் வரிசையே ஒட்டியாணமாக அணிந்திரா நின்ற&lt;br /&gt;&lt;br /&gt;1 மைத்திரி மித்திரத்தன்மை அதாவது நட்புரிமைக் குணம். இதன் உண்மையைக் கண்டனுபவித்து உலகத்தாருக்கு அருள் புரிந்த கருணாமூர்த்தி பகவான் புத்தனன்றோ!&lt;br /&gt;&lt;br /&gt;இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வரு ணிப்பது:-&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்மின்வீடே யாஜேத் தேவீம்&lt;br /&gt;சிவரூப சவஸ்திதாம்:&lt;br /&gt;மஹாகால ரதாஸக்தாம்&lt;br /&gt;சிவாபிர்திக்ஷு வேஷ்டிதாம்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: சவ ரூபாமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடைய வளும், பெண் நரிகளால் சூழப்பெற்றவளுமான தேவியைப் பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்கவேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸுத்ருசோ மதனாவாஸம்&lt;br /&gt;பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்:&lt;br /&gt;அயுதம் ஸோசி ராதேவ&lt;br /&gt;வாக்பதே: ஸமதாமியாத்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு, பத்தாயிரம் மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமனாவான். மந்திரம் ஜபிக்க வேண்டிய முறை மற்றொன்று:-&lt;br /&gt;&lt;br /&gt;திகம்பரோ முக்தகேச: ஸ்மசானஸ்தோ தியாமினி:&lt;br /&gt;பேத்யோ யுதமேலஸ்ய பவேயு: சர்வகாமனா:&lt;br /&gt;பொருள்: இரவு சுடுகாட்டின்கண் நிர்வாணமாக இருந்து கொண்டு தலைமயிரை அவிழ்த்துவிட்டுப் பதினாயிரம் உரு செபிக்கிறவனுக்குக் கோரிய பலன் கைகூடும்.&lt;br /&gt;சாவம் ஹ்ருதயமாருஹ்ய&lt;br /&gt;நிர்வாஸா: ப்ரேத பூகத;&lt;br /&gt;அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப் யக்தேன&lt;br /&gt;ஸ்வீயரேதஸா. தேவீம் ய: பூஜயேத் பக்த்யா&lt;br /&gt;ஜபன்னே கைக சோமனும்&lt;br /&gt;ஸோசிரேணைவ காலேன&lt;br /&gt;தரணீப்ரபுதாம் வ்ரஜேத்        (மஹோததி)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம்பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரம் சொல்லித் தேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவன்.&lt;br /&gt;1&lt;br /&gt;ரஜ: கீர்ணபகம் நார்யா&lt;br /&gt;த்யாயன்யோ யுத மாஜபேத்;&lt;br /&gt;ஸகவித்வேனரம்யேண ஜனான்&lt;br /&gt;மோஹயதி த்ருவம்&lt;br /&gt;பொருள்: தூரமான பெண்ணின் இரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு செபிக்கிறவன் மதுரமான செய்யுட்களால் உலகத்தை மயக்குவான்&lt;br /&gt;&lt;br /&gt;..........................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்;&lt;br /&gt;மஹாகாலேனதேவேன மாரயுத்தம் ப்ரகுர் வதீம்,&lt;br /&gt;தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸுரதம் ஸவயம்&lt;br /&gt;ஜபேத் ஹைஸ்ரமபிய: ஸசங்கரஸமோ பவேத்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பிணத்தின் மார்பில் இருந்து மஹா காலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்துக் கொண்டு ஒரு பெண்ணுடன் சம்போகித்துக் கொண்டே ஆயிரம் உருவேனும் சபிக்கிறவன் சிவனுக்கு ஒப்பாவான். பூனை, ஆடு இவைகளின் எலும்பு, மயிர், தோல் இவை களும் தசையும் அஷ்டமி இரவு நடுச்சாமத்தில் பலி கொடுத்து மந்திரம் செபிக்கிறவனுக்கு மூன்றுலகமும் கீழ்ப்படியும், பகலில் தேவிக்கு நிவேதித்த அவிசையும், இரவில் மைதுனம்&lt;br /&gt;&lt;br /&gt;1 விளம்பரத்தில் கண்ட (3) மூன்றாவது கேள்வியில் உற்பத்தி காலத்திற்கு முன்புள்ள நிலை எவ்வாறு இருந்தது? மேற்கூறியவாறு சைவம், வைதிக மதம் இவைகள் இருந்தது (சைவமும், சாந்தமும் அல்லது தாந்திரீக மதமும்) திருஞான சம்பந்தருக்கும், புத்த, சமணருக்கும் முன்ஒன்றுபோலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணிக்கொண்டும். லட்சம் தடவை ஜெபித்தால் அரசனாவான். எருமை முதலிய உயிர்களின் இரத்தத்தைத் தர்ப்பணம் செய்துகொண்டு மந்திரம் ஜெபித்தால், எல்லாச் சித்திகளையும் அடைவான்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/2531.html?sms_ss=blogger&amp;at_xt=4d4843cb519031e2%2C0&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6871847537649982408?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6871847537649982408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6871847537649982408'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/02/31.html' title='ஞானசூரியன் தொடர்-31'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7247743516746926254</id><published>2011-01-25T20:13:00.000+05:30</published><updated>2011-01-25T20:14:19.094+05:30</updated><title type='text'>ஞானசூரியன் -30</title><content type='html'>மீன், மான், ஆடு, குருவி, வெள்ளாடு, ப்ருஷத் (ஒருவகை மான்), கிருஷ்ண மிருகத்தி, வெள்ளை யாட்டின் கன்று, குரு (ஒரு வகை மான்), பன்றி, முயல் இவைகளின் மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்தியடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருட்கள் வருமாறு:&lt;br /&gt;கட்காமிஷம் மஹாசல்கம்&lt;br /&gt;&lt;br /&gt;மது முன்யன்னமேவச:&lt;br /&gt;லோஹாமிஷம் காலசாகம்&lt;br /&gt;மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச&lt;br /&gt;பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.&lt;br /&gt;காலசாகம் மஹாசல்கா:&lt;br /&gt;கட்கலோக மிஷன்மது;&lt;br /&gt;ஆனந்த்யாயைவ கல்பந்தே&lt;br /&gt;முன்யன்னானிச ஸர்வச&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,&lt;br /&gt;ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்&lt;br /&gt;&lt;br /&gt;இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே நாள்தோறும் எண்ணிறந்த பலவகைப்பட்ட உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிற காலத்தில், அஹிம்சை, கொல்லாமை விரதத்தின்கருத்து எங்ஙனம் இவர்களின் மனதிற்பதியும்? இதனால் அஹிம்ஸா பரமோ தர்ம என்னும் வாக்கியமென்றும் இந்து சமயத்தைக் கொலைச் சமயமென்றம் நன்றாய் அறிந்து, அதனின்றும் விலகியவர்களே இவ்விரதத்தை அனுஷ்டிக்க அதிகாரிகள் என்பதும்தான் இத்திருமந்திரத்தை உபதேசித்த புத்தபகவானின் கருத்தென்பதை நன்றாக அறியவேண்டும்.1&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிசார கருமத்தை (சூனியம் வைத்துப் பகைவனைக் கொல்லுதல்) கூடத் தருமமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ச்யேனேனாபிசான் யஜேத&lt;br /&gt;பகைவனைக் கொல்ல விரும்பு வோன் சியேன யாகத்தால் ஆபி சாரம் செய்யக் கடவன்.&lt;br /&gt;இப்பெயர் வந்த தன் காரணமும், இதன் பயனும்&lt;br /&gt;யதாவை ச்யேனோ&lt;br /&gt;நிபத்யாதத்தே ததாயம்&lt;br /&gt;த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்&lt;br /&gt;நிபத்யாதத்தே ததாயம்&lt;br /&gt;த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்&lt;br /&gt;நிபத்யாதத்தே&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பருந்தானது கோழி முதலிய ஏழைப் பிராணிகளைத் தூக்கிச் செல்வது போல் இந்த யாகமும் பகைவனை ஒழித்துவிடும் (மரணத்திற்குத் தூக்கிக் கொண்டு போகும்)&lt;br /&gt;&lt;br /&gt;1.இக்காலத்தில் பவுத்தர்கள் மாமிசம் சாப்பிடுவதேன் என்ற கேள்விக்கு இடமுண்டு. புத்தர்களை இந்திய நாட்டினின்று துரத்தியடித்த காலத்தில் முறையாகப் புத்த மதத்தைப் பரப்ப முடியாமல் வந்ததுடன், நல்லபழக்கம் சற்றேனும் அக்காலத்துச் சைனா, பார்மா, சிலோன் முதலிய நாட்டில் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கடைசியாகப் புத்தரை ஒத்துக்கொண்டு தங்களது முன் பழக்கங்களை நடத்தி வந்தார்கள். இனி இந்திய நாட்டார் முன்போலவே சென்று சாம்மியவாதம் உபதேசிக்கும்போது அத்தகைய தீய ஒழுக்கங்களை அவர்களிடத்திலிருந்து போக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிர்மறையாகப் புத்த பகவான் திருவாய் மலர்ந்தருளிய தருமபதம் என்னும் நூலின்கண் ஒரு வாக்கியம் இருப்பது வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;நஹிவேரேன வேரானி&lt;br /&gt;சம்மந்தீஹ குதாசன!&lt;br /&gt;அவேரேனஹி ஸம்மந்தி&lt;br /&gt;ஏஸதம்மோ ஸனந்தனோ    (தருமபதம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: பகையைப் பகையினால் வெல்ல முடியாது; 1நட்பினாலேயே வெல்ல முடியும். இதுதான் என்றும் நிலைத்திருக்கிற தருமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை முதலிய வாக்கியங்களால் புத்த பகவானது தருமோபதேசங் களுக்கும், பார்ப்பனரின் தரும நூலிற்கும், இரவிற்கும், பகலுக்கும் இருப்பதைப் போன்ற வேற்றுமை இருப்பதாகப் பெறப்பட்டது. இந்தச் சியேன யாகம் தருமமா? அதருமமா? என்று சந்தேகித்த நவீன மீமாம்ஸகனாகிய கண்டதேவன் வேத வாக்கியமானதால், தருமந்தான் என்று முடிவில் உறுதிப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/2022.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7247743516746926254?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7247743516746926254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7247743516746926254'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/01/30.html' title='ஞானசூரியன் -30'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-7158097793853180344</id><published>2011-01-21T18:45:00.002+05:30</published><updated>2011-01-21T18:46:26.744+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-29</title><content type='html'>இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர்களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத்தில் வியாபிசாரத் திற்கு அனுமதிச்சீட்டுப் பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம். இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதல் முதலாகப் பார்த்த புத்தபகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட் கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;குசா: சாகம் பயோ மத்ஸ்யா:&lt;br /&gt;கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;&lt;br /&gt;மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்&lt;br /&gt;ப்ரத்யாக்யேயம் நவாரிச&lt;br /&gt;பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராம ணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன். அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;மஹோக்ஷம் லா மஹாஜம்&lt;br /&gt;வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்&lt;br /&gt;ஸத்க்ரியா, ஸேவனம்&lt;br /&gt;ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(மற்ற அவயவங்களைப் போலவே வயிறும் பெரிதாய் இருக்குமென்ற காரணத்தினால், மிருகத்தைக் குறிப்பிடு கிறார் போலும்) இத்தகைய சுரோத்திரியனைச் சக்கர வர்த்தியாயினும எழுந்து வணங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவின் பாகுபாடு கூறுமிடத்து க்ரல்யாத தாதயூ ஹாதி (ஊனைத்தின்று உயிர் வாழ்கின்ற பிராணிகள்) உண்ணத்தகாதன என்று கூறிவிட்டு உண்ணத்தக்கன வற்றைக் கூறுவதையும் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்ஷயா பஞ்சநகா ஸேதா&lt;br /&gt;கோதா கச்சபசல்யகா&lt;br /&gt;கசஸ்ச மசஸ்யேஷ்வரிஹி&lt;br /&gt;சிம்ஹதுண்டாக ரோஹிதா&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முட்பன்றி , முயல் இவைகளும், சிங்கமத்சயம் முதலிய மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்திய டைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருள்கள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;கட்காமிஷம் மஹாசல்கம்&lt;br /&gt;மது முன்யன்ன மேவச:&lt;br /&gt;லோஹாமிஷம் காலசாகம்&lt;br /&gt;மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச&lt;br /&gt;பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;காலசாகம் மஹாசல்கா:&lt;br /&gt;கட்கலோக மிஷன்மது;&lt;br /&gt;ஆனந்த்யாயைவ கல்பந்தே&lt;br /&gt;முன்யன்னானிச ஸர்வச&lt;br /&gt;பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்&lt;br /&gt;இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே மீன் வகைகளும் உண்ணத்தக்கனவாம். இந்த உணவு தேவர்களோடு நிற்கவில்லை. பிதிர்களுக்கும் மாமிசம் வேண்டுமாம். ஒருவன் செத்தபின் கூட அவனால் மிருகங்களுக்குத் துன்பம் ஒழிந்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவிஷ்யானேன வை மாஸம்&lt;br /&gt;பாயசேனது வத்ஸாம்;&lt;br /&gt;மாத்ஸ்யஹாரிண ஔரப்&lt;br /&gt;சாகுனச் சாகபார்ஷதை&lt;br /&gt;அய்ணரௌரவவாராஹசானர்&lt;br /&gt;மாப்ஸர்யதாக்ரமம்:&lt;br /&gt;மாம்ஸவ்ருத்யாஹி துஷ்யந்தி&lt;br /&gt;தத்தைரிஹ பிதாமஹை&lt;br /&gt;பொருள்: சாதாரண அவிசினால் ஒரு மாதமும், பாயசத்தினால் ஒரு வருடமும் பிதிர்கள் திருப்தியடை கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/1248.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-7158097793853180344?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7158097793853180344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/7158097793853180344'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/01/29.html' title='ஞானசூரியன் தொடர்-29'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-2955222288090812384</id><published>2011-01-12T13:02:00.000+05:30</published><updated>2011-01-12T13:03:00.856+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-28</title><content type='html'>வால் எஜமானின் பத்தினிகளைச் சார்ந்தது. இவர்கள் இதை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கக்கடவர். வலத் தோளிலுள்ள மாமிசமும், மணியைப் போலிருக்கிற மாமிசமும், விலாப்புறத்தில் மூன்று பிரிவுகளாயிருக்கிற கீஸமும் &lt;br /&gt;&lt;br /&gt;*க்ராவஸ்துத்திற்கும், இடத் தோளிலுள்ள மாமிச மும், வைகர்த்தமென்கிற மாமிசத்தில் பாதியும்&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தக் குறிகள் இடப்பட்டவர்கள் ஒவ்வொரு புரோகிதர்க ளென்று அறிந்துகொள்க. யாகத்தில் மேற்கூறிய பெயர்க ளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃ கை பாஹு என்று தனித்தனி சொல்வதால், ஒன்று மேல்பாகமும் மற்றது அடிப்பாகமும் என்று சாயனாச்சாரியார் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;*உன்னேதாவிற்கும், வைகர்த்தத்தின் மற்றொரு பாதியும், க்லோமா என்கிற மாமிசமும் *கமிதாவிற்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தக்கமிதா பிராமண ரல்லாத ஒருவனால் யாருக்கேனும் ஒரு 1பிராமணனுக்கே கொடுத்துவிட வேண்டும். தலை, சுப்பிரமணியனைச் சார்ந் தது. தோலை 2சக்தியை உச்சரித்த பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். இடையை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஹோதா தனியாகவே எடுத்துக் கொள்ளலாம்3. ஆண்டுதோறும் பசு யாகம் செய்யவேண்டும் என்ற விதியின் கருத்து இத்தன்மையதென்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாம்ஸீயந்தி ஹ்வா அக்னயோஜுஹ்வதோ யஜமா னஸ்யதே யஜமான மேவத்யாயந்தி; யஜமானம் ஸங்கல்ப் யந்தி; பசந்திஹ்வா அன்யேஷ்வ க்னிஷுவ்ருதா மாம்ஸம்: அதை தேஷாம் நான்யாமாம் ஸாசாவித்யதே யஸ்ய சைதே பவந்தி தம்ததோ நானீ ஜானம் பசுனா ஸம்வத்ஸரோவ்ய தீயாத் ஆயுஷயோஹ்வா அஸ்யைஷ ஆத்ம நிஷ்க்ரயண&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மாமிச யாகம் பண்ணாத எஜமானின் அக்னி எப்போதும் மாமிசத்தையே விரும்பிக்கொண்டிருக்கின்றன. இவனையே தின்று விடலாமா என்றும் நினைக்கின்றது. இவன் தினந்தோறும் மாமிசத்தைச் சமைத்து உண்கிறா னாதலால், இவனுக்கும் சமையல், அக்னிக்கும் மாமிசம் கிடைக்கிறது. யாகம் செய்கிற காலம் தவிர, எங்களுக்கு மாமிசம் கிடையாது. அதுவும் அவ்வக்காலங்களில் இப்பாவி தருகின்றானில்லை என்றும், இவ்விதமாக அக்கினிகள் நினைப்பதனால், தன் ஆயுள் விருத்திக்குக்&lt;br /&gt;&lt;br /&gt;1. நோச்சிஸ்டம் நஹவிஷ்க்ருதம் (யாகசேஷமாகிய அவிசைக் சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது) என்கிற மனுவின் வாக்கு இக்கருத்திற்கு ஒத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. பசுக்கொலை செய்வதாக துருக்கர்களிடம் சண்டை தொடுக்கும் ஆரியர்கள் இத்தகைய வேதவாக்கியங்களை உணர்ந்திருந்தால், கலகத்திற்கு இடமுண்டாக மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஆமாம் அய்யரே! யாகத்தில் கொலையுண்ட பசு, ஆடு, மனிதன், முதலிய பிராணிகள் உயிர்கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய ரிஷிகள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறீர். இப்படிப் பங்கு கேட்டுச் சாப்பிட்டால், எதை எழுப்புவது தெரியவில்லையே.&lt;br /&gt;காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ் தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என் னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற் குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டை களையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதம் கொலையே பிரமா ணமாகவுடைய யாகமே சுவர்க்கமென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும். இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர் களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத் தில் வியாபிசாரத்திற்கு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதன் முதலாகப் பார்த்த புத்த பகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட்கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;குசா: சாகம் பயோ மத்ஸ்யா:&lt;br /&gt;கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;&lt;br /&gt;மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்&lt;br /&gt;ப்ரத்யாக்யேயம் நவாரிச&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராமணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன் அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;மஹோக்ஷம் லா மஹாஜம்&lt;br /&gt;வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்&lt;br /&gt;ஸத்க்ரியா, ஸேவனம்&lt;br /&gt;ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ்தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன். இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என்னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற்குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டைகளையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதம் கொலையே பிரமாணமாகவுடைய யாகமே சுவர்க்க மென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/1191.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-2955222288090812384?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2955222288090812384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2955222288090812384'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/01/28.html' title='ஞானசூரியன் தொடர்-28'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8727009108285390420</id><published>2011-01-05T21:52:00.001+05:30</published><updated>2011-01-05T21:52:56.047+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-27</title><content type='html'>அதற்கு உதாரணம்:&lt;br /&gt;ஜாமிவா ஏதத் யஞ்ஸ்ய க்ரியதே&lt;br /&gt;யகன்வஞ் செளபுரோடாசெள&lt;br /&gt;புரோடாசம் மாத்திரம் உட்கொள்ளுவதால், யஜ்ஞ, புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக் கும் பொருட்டு மத்தியில் 1வபா ஹோமம் செய்யவேண்டும்.&lt;br /&gt;யஜ்ஞார்த்தம் பசவ; ஸ்ருஷ்டா:&lt;br /&gt;ஸ்வயமேவ ஸ்வயம்புவா;&lt;br /&gt;யஜ் ஞஸ்ய பூத்யை ஸர்வஸ்ய&lt;br /&gt;தஸ்மாத் யஜ்ஞே வதோவத:&lt;br /&gt;பொருள்: உயிர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிய யாகத்தின் பொருட்டுப் பிரம்மன் மிருகங்களைச் சிருஷ்டித் தான். (மனிதர்கள் மிருங்களைக் கொன்று தேவர்களுக்குக் கொடுப்பதுதான்மிருகங்களைச் சிருஷ்டித்தன் கருத்துப் போலும்). அதனால், யாகத்தில் செய்யும் கொலை பாவமாகமாட்டாது.&lt;br /&gt;கொலைத் தொழில் பாவத்தை உண்டாக்குமாயினும், யாகத்தின் பொருட்டுச் செய்யும் அத்தொழில் புண்ணி யத்தையே பயக்கும் என்பது&lt;br /&gt;1. வபா என்பது மனிதன் முதலிய எல்லா ஜீவன்களுடைய சரீரத்திலும் இடப்பக்கத்தின் புறத்திலுள்ள ஒரு விதமான கொழுப்பு&lt;br /&gt;வைதிக மதம். கொல்லப்பட்ட பசுவின் அவயவங்களைத் தேவர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முறை கூறப் பட்டிருப்பதையும் கவனியுங்கள்.&lt;br /&gt;ஹ்ருதயம் ஜிஹ்வா வக்ஷோ&lt;br /&gt;யக்ரித் வ்ருக்வயள ஸ்வயம்&lt;br /&gt;தோருபே பார்சுவே ஸ்ரோணிர்&lt;br /&gt;குதத்ரிதீயமிதி தைவதானி:&lt;br /&gt;தக்ஷிணம் தோஸ்ஸவ்யா ஸ்ரோணிர்&lt;br /&gt;குதத்ரிதீயமிதி ஸௌவிஷ்ட&lt;br /&gt;க்ருதானி; க்லோமானம் ப்லீஹாததம்&lt;br /&gt;தனீஷ்டு மத்யூத்னீம் புரீனம்&lt;br /&gt;மேதோ ஜாகனீ மித்யுத்தரதி   (ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்)&lt;br /&gt;பொருள்: ஈரல், நாக்கு, மார்பு 1யக்ருத் இரண்டு பக்கங்களிலும் உருண்ட வடிவாயிருக்கிற தசை, இடக்கை, இட விலாப்பக்கம், வலத் தொடையின் மேற்பக்கம், புட்டத் தின் மூன்றிலொரு பங்கு இவ்வளவும் தேவர்களுக்காகவும், வலக் கை, இடத்தொடையின் மேற்புறம், புட்டத்தின் மூன்றிலொரு பங்கு இவைகள் ஸ்விஷ்டக் ருத்ஹோமத்தின் பொருட்டும், யக்ருத்தைப் போன்றதும், திலகமென்ற பெயருள்ளதுமான மாமிசம், நுரையீரல், சிறுகுடல், மடி கொழுப்பு, வால் இவைகளும் எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவிசு பங்கிடும் முறை&lt;br /&gt;&lt;br /&gt;அதாத; பசோர் விபக்திஸ்தஸ்ய விபாபகம் வக்ஷயாம்: ஹனூஸ ஜிஹ்வே ப்ரஸ்தோது: ஸ்யேனம் வக்ஷஉத்காது: கண்ட: காகுதர: ப்ரதிஹர்த்து: தக்ஷிணாஸ் ரோணிர் ஹோது: ஸவ்யா ப்ராஹ்மண: தக்ஷிணம் ஸக்தி: மைத்ரா வருணஸ்ய ஸவ்யம் ப்ராஹ்ம ணாச் சம்ஸின: தக்ஷிணம் பார்ஸ்வம் மாம்ஸ மத்வர்யோ: ஸவ்யமுப காத் ரூணாம் ஸவ் யாம்ஸ: ப்ரதிப்ரஸ் தாது: தக்ஷிணம் தோர்நேஷ்ட: ஸ்வயம் போது: தக்ஷிண ஊருரச்சாவாகஸ்ய ஸவ்ய ஆக்நீத்ரஸ்ய தக்ஷிணோ பாகுராத் ரேயஸ்ய ஸவ்யஸ் ஸதஸ்யஸ்ய ஸதம் சானூகஞ்ச க்ருஹபதே: தக்ஷிணௌ பாதென 1. இந்தச் சூத்திரத்திற்குப் பொருள் தயானந்த சரஸ்வதியை (ஆர்ய சாம்ராஜ்யத்தை)க் கேட்டால், என்ன உத்தரவு சொல்லுமோ அறியேன். ஆனால், இன்றுநாள் வரைக்கும் ஜனங்கள் அனுஷ்டித்து வந்த முறையை இங்கு வரைந்துள்ளேன்.&lt;br /&gt;க்ருஹபதே வ்ரதப் ரதஸ்ய ஓஷ்ட ஏதயோ ஸாதாரணோபவதி தம் க்ருஹபதி ரேவ ப்ரசிம்ஷயாத் ஜாகனீம் பத்னீப்யோ ஹரந்தி தாம் பாஹ்மணாயதத்யு: ஸ்கந்தாஸ் சமணி காஸ்திரஸ்ச கீகஸா க்ராவஸ்துத: திஸ்ரஸ்சைவ கீகஸா அர்த்தஞ்ச வைகர்த்தஸ் யோன்னேது: அர்த்தஞ் சவைகர்த்தஸ்ய க்லோமாசகமிது தத்ப்ராஹ்மணாய தத்யாத் யத்யப்ராஹ்மனஸ் ஸ்யாத்: சாரஸுப்ரஹ்மண்யாயைய்யஸ் வஸ்ஸய்த்யாம் ப்ராஹ தஸ்யா ஜினமினி ஷர்வேஷாம் ஹோதுர்வா&lt;br /&gt;&lt;br /&gt;(அய்தரேய ப்ராஹ்மணம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: கொல்லப்பட்ட பசுவைப் பங்கிடும் வகை சொல்லப்படுகின்றது. நாக்கு **ப்ரஸ்தோதாவிற்கும், பருந்தின் வடிவத்தையுடைய மார்பு *உத்காதாவிற்கும், கழுத்தும் முதுகிலிருக்கிற கொண்டையும் *ப்ரதிஹர்த்தா விற்கும், வலத் தொடை *ஹோதாவிற்கும் இடத் தொடை *பிரம்மாவிற்கும், வலத் தொடையின் அடிப்பக்கம் மைத்திரா வருணனுக்கும், இடப்பக்கம் *ப்ராம்மணாச் சம்சிக்கும், வல விலாப்புறமும், வலது தோளும் அத்வர்யு வுக்கும், இடது விலாப்புறம் *உபாகாதாக்களுக்கும், இடத்தோள் ங*ப்ரதிப்ரஸ்தாவிற்கும், வலக்கை *நேஷ்டா விற்கும், இடக்கை *போதா விற்கும், வலத் தொடை *அச்சாவாகனுக்கும், இடத்தொடை ஆக்னீத் ரனுக்கும், ஃவலக்கை *ஆத்ரேயனுக்கும், இடக்கை *ஸதஸ்யனுக்கும், வல விலாவெலும்பும் அலைதாடியும் *க்ருஹபதிக்கும், வலக் கால் போஜன தாதாவாகிய *க்ருஹபதிக்கும், இடக் கால்*க்ருஹபதி மனைவிக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உதடு கணவனுக்கும் மனைவிக்கும் உரித் தானது. அதை க்ருஹபதி கையாலெடுத்து இது உன்னு டையது என்று சொல்லி மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.in/new/page-3/728&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8727009108285390420?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8727009108285390420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8727009108285390420'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2011/01/27.html' title='ஞானசூரியன்-27'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5516889225513953253</id><published>2010-12-31T16:29:00.002+05:30</published><updated>2010-12-31T16:32:41.226+05:30</updated><title type='text'>மனிதனை சிந்திக்க வைத்த சிந்தனைச் சிற்பி பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்றனர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/TR24Sy36apI/AAAAAAAAAN4/EM3uZhkX0KU/s1600/dkflag-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 257px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/TR24Sy36apI/AAAAAAAAAN4/EM3uZhkX0KU/s320/dkflag-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556800148278504082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு தந்தை பெரியாரின் பணிகளை தமிழர் தலைவர் தலைமையில் முடிப்போம் என்று உறுதி எடுத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத்தலைவர் அண்ணாமலை, சித்தரசூர் இராமநாதன், அனந்தபுரம் தண்டபாணி மற்றும் சிறப்பு அழைப் பாளராக அனந்த புரம் திமுக நகர செயலாளர் கல்யாண்குமார் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செய லாளர் கதிரவன் வரவேற்று பேசினார். காணை ஒன்றிய தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5516889225513953253?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5516889225513953253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5516889225513953253'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_31.html' title='மனிதனை சிந்திக்க வைத்த சிந்தனைச் சிற்பி பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்றனர்!'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/TR24Sy36apI/AAAAAAAAAN4/EM3uZhkX0KU/s72-c/dkflag-1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8663022069843305820</id><published>2010-12-30T17:18:00.001+05:30</published><updated>2010-12-30T17:19:28.529+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-26</title><content type='html'>இந்துமதமும், ஜீவகாருண்யமும்&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்தில் இந்துக்களில் சிலர் அஹிம்ஸா பரமோ தர்ம கொல்லாமையே சிறந்த தருமம், இதுதான் வேதத் தின் கருத்து என்று கூறுகிறார்கள். இவர்களின் கூற்றை யும் சிறிது ஆராய்வோம்.&lt;br /&gt;மனம் முதலிய முக்கரணங்களினாலும் உயிர்களுக்குத் துன்பத்தை விளைவிக்காமல் உயிர்வாழ வேண்டும் என்ற உபதேச மொழியானது புத்தபகவானது திருவாக்கினின்றும் முதன்முதலாக வெளிப்பட்டது. பிற்காலத்தில் இந்து மதத்தலைவர்கள் இந்த வாக்கியத்தைக் கற்றுக் கொண்டு, இதுவும் தங்களுக்கென்று வாய்ப்பேச்சில் மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஆனால், வங்காளிகள் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவர்களில் நான்கு வருணத்தினரும் மாமிசத்தையும் மச்சத்தையும் உணவாகக் கொள்ளு கிறார்கள். இந்து சமயப்பிரகாரம் சந்நியாசத்திற்கு உரிமை யில்லாதவரும் ஆனால், சந்நியாசி என்ற பெயரால் அறியப் படுபவருமான சுவாமி விவேகானந்தர் சொல்லியி ருப்பதைக் கேளுங்கள்.&lt;br /&gt;என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரைக்கொல்வது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது. 1இக்கால நிலைமைக்கு மனிதனுக்கு மாமிச உணவு அவசியமானது. உதவியற்ற சில ஆடுகளைக் கொல்வதும், தனது மனைவி மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க முடியாமலிருப்பதுமாகிய இவ்விரண்டில் எது அதிக பாவம் என்பதை ஆராயவேண்டும். உடலுழைப் பில்லாமல் உயிர் வாழ்கிற சில உயர் குடிப்பிறந்தார். மாமிச உணவை விரும்பாவிடின் அவர்களுக்கு வேண்டாம். உடல் உழைப்பினால் உயிர் வாழும்படியான நிலைமையில் உள்ளவர்கள், இந்த அஹிம்சா விரதத்தைப் பின்பற்றுவதால் சமுதாயத்திற்குப் பெரிய 1. இக்கூற்று விவேகானந்தருடைய மதம் மட்டுமல்ல இந்துக்களுடைய எல்லா முக்கிய நூல்களும் மாமிசம் மரக்கறிப் பதார்த்தம் வேண்டுமளவு கிடைக்கும் நாட்டில் மாமிசம் புசிப்பது மிக்க கெடுதி. அதிலும் ஜீவகாருண்யமே உருவான சந்நியாசிகள் (துறவிகள்) செய்வது பெருங்குற்றம். அராபியா முதலிய நாட்டில் அவர்கள் கொலை புரிந்துண்டாலும், அது குற்றமாகச் சொல்வதற் கில்லை. அந்நாடு பொதுவான மற்ற உணவுகள் கிடைக்காத நாடு. பர்மா, இந்தியா சிலோன் முதலிய நாட்டு ஜனங்களும் இதற்கொத்த நாட்டு ஜனங்களும் ஜீவஹிம்சை செய்வது, உயிர்வாழ்வது பிசகென்றே கூறலாம்.&lt;br /&gt;கேடுவிளையும். இந்துமதத்தை நன்றாக ஆராய்ந்ததனா லேயே சிலர் இவ்விதம் சொல்ல நேர்ந்தது. இந்துக்களும் அவர்களின் தெய்வங்களும் மாமிச உணவையே விரும்புவ தாகக் கீழ்க்காணும் மனுவின் வாக்கியங்களால் உணரக் கிடக்கிறது.&lt;br /&gt;ப்ராணஸ்யான்னமிதம் ஸர்வம் ப்ரஜாபதிரகல் பயத்:&lt;br /&gt;ஸ்தாவரம் ஜங்க மம் சைவ&lt;br /&gt;ஸர்வம் ப்ரா ணஸ்ய போஜனம்.&lt;br /&gt;சரணாம்ன்னமசரா&lt;br /&gt;தம்ஸ்ட்ரிணாமப் யதம்ஷ்ட்ரிண:&lt;br /&gt;அஹஸ்தாஸ்ச ஸ்ஹஸ்தா நாம்&lt;br /&gt;சூரானாம் சைவபீரவ:&lt;br /&gt;நாத்தா துஷ்யத்ய தன்னாத்யான்&lt;br /&gt;ப்ராணினோஹன் யஹன்யபி:&lt;br /&gt;தாத்ரைவ ஸ்ருஷ்டாஹ்யாத்யாஸ்ச&lt;br /&gt;ப்ராணினோத்தாரஏவ்ச&lt;br /&gt;பொருள்: சரம், அசரம் (அசையும் பொருள், அசையாப்பொருள்) ஆகிய இவ்வுலகு உயிர்களின் உணவின் பொருட்டுப் பிரம்ம தேவனால் படைக்கப் பட்டிருக்கிறது. அசையா உயிர்கள் சர உயிர்களுக்கு உணவாவது போலவே, கோரைப் பற்கள் இல்லாதவை அவைகளையுடைய உயிர்களுக்கும், ஏழைகள் வலிமையுடையவர்களுக்கும் உணவாகையால், இவ்விதம் உண்பதனால் பாவமுண்டாகமாட்டாது. ஏனெனின், உண்ணுகின்றனவும் உண்ணத் தக்கனவுமான உயிர்களை இதே கருத்துடன் பிரம்மா படைத்தார்.&lt;br /&gt;இந்தப் பிரமாணப்படிக்கு ஏழைகளைப் பலசாலிகள் கொன்றார்களே ஒழிய, தின்னாமல் இருந்ததே அதிர்ஷ்டவசம். தின்றிருப்பார்களாயின், கொலையானது மிதமிஞ்சிப் பெருகியிருக்கும். புத்தபகவானுடைய புத்திமான் பலசாலியாவதன்றி பலசாலி புத்திமான வதல்ல. இதை நன்றாக மற்றுமுள்ளோர் அறியவேண்டும். புத்திமந்திரம் சித்த மந்திரம், என்கிற பஞ்சப்ர மேட்டி மந்திரத்தையும், அவ்வாறே ஜபம் பண்ணத்தகுந்தது. இதை விரிவாக மற்றோரிடத்தில் கூறுகிறோம்.&lt;br /&gt;கொள்கைக்கு விரோதமாகவே மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனை யும் விதித்திருக்கிறார்.&lt;br /&gt;நியுக்தஸ்து யாதான்யாயம்&lt;br /&gt;யோமாம்ஸம் நாத்திமானவ:&lt;br /&gt;ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:&lt;br /&gt;னேக் விம்சதிம்  (மனு)&lt;br /&gt;பொருள்: சிரார்த்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உண்ணாவிடின், இருபத்தொருதடவை மிருகமாகப் பிறப்பான். இத்தகைய வாக்கியங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளுகிறவர்களே, அஹிம்சா தருமம் என்பதற்கு வேதக்கருத்துகள் பல என்றுகூறி, அறிவிலிகளை மயக்குகிறார்கள். யாகங்களில் தேவதை களுக்குச் கள்ளும் ஊனுமே படைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101229/news09.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8663022069843305820?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8663022069843305820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8663022069843305820'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_30.html' title='ஞானசூரியன்-26'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-3141341055989531198</id><published>2010-12-28T21:47:00.000+05:30</published><updated>2010-12-28T21:47:16.511+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-25</title><content type='html'>ஞானசூரியன்&lt;br /&gt;1நாள்தோறும் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறவன் எத்தகைய இழி தொழில்களைச் செய்தாலும், அப்பாவங்கள் அவனையணுகாது. முக்தியானது அவன் கைக்குள்ளிருக்கிறது. திருமால் கோயில் திருப்பணி செய்வோன் அளவிறந்த காலம் விண் நாட்டில் சுகமனுபவிப்பான்.&lt;br /&gt;1. காயத்திரி செய்கிறவன் எத்தகைய கெடுதியும் செய்யமாட்டான் என்று பொருள்; செய்தால் அதன் பயனை அனுபவிப்பான். ஆனால், அந்த மந்திரம் சூத்திரன் ஜபம் பண்ணலாகாதாம்; காயத்திரியை உண்டு பண்ணினவன் அனாரியன். (சாமியவாதி விசுவாமித்திரன்) இது எல்லோருக்கும் ஜபம் பண்ண உரிமையுள்ளது. இது அனாரியனது சொந்தம்.&lt;br /&gt;திருமால் திருவடிகளில் அர்ச்சிக்கிற ஒவ்வொரு பூவும் அர்ச்சிப்பவனைப் பத்தாயிரம் ஆண்டுகள் விண்ணாட்டில் இருக்கச் செய்யும். ஆனால், மக்களின் பெருக்கத்தால் அங்கு இடமில்லாமற் போகாதது ஒன்றே பெரும் வியப்பிற்கு இடந்தருகின்றது. எல்லாப் பாவங்களையும் நாசம் பண்ணுகிற இத்தகைய பிரமாணங்களை நம்புவோர்கள் வியபிசாரம் பண்ணலாகாதா? கள் குடிக்கலாகாதா? எல்லாம் செய்யலாம். ஆனால், இவைகளை நம்பாத அறிவாளிகள் முற்கூறியவர்களின் சுவர்க்க வாசத்தை நரகவாசமென்றே கருதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விவாகம் என்கிற முறையே இவர்கள் சமயத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. முற்காலங்களில் விலங்குகளைப் போலவே நடந்து வந்தார்கள் என்பது, வைனதேயன் ஆதிதேயா முதலிய பெயர்களினால் வெளிப்படை. பிற்காலங்களில் பிதாவின் பெயரும் சேர்த்துக் குலத்தின் பெயரைக் கூறிவந்தார்கள். இராவன் பார்க்கவன் முதலிய பெயர்கள் பிதாவின் வழியைக் குறிக்கும் சைனதேயன் ஆதிதேயன் முதலிய பெயர்கள் எதிர்மறையாக 2மாதாவின் பெயரைக் குறித்தலால், அக்காலம் பிதாவைக் குறித்து அறிவில்லாதிருந்த காலம் என்று ஊகிக்க இடமிருக் கிறது. முற்காலத்தில் வியபிசாரத்தைக் குற்றமாகக் கருதவில்லையென்பது கீழ்க்காணும் தந்தைகள் இருந்தால், அவ்விருவர்களுக்கும் பிண்டம் போடும்போது செய்யவேண்டிய விதி வருமாறு:&lt;br /&gt;யதி த்விபிதாஸ்யா தேகைகஸ்மின்&lt;br /&gt;பிண்டேத்வெனத் வாவுபல க்ஷயேத் (ஆப்ஸ்தம்பர்)&lt;br /&gt;1. இப்படிப்பட்ட விஷயங்களைப் புத்தக ரூபமாக எழுதியதாலல்லவோ சிவன், விஷ்ணு முதலிய ஆலயங்கள் பஞ்சமாபாதகத்திற்கு மூலஸ்தானமானது. விபச்சாரங்களும் பொய்ப் புரட்டும் ஜயமடைவதற்குக் கோவிலல்லவோ முக்கியவிடம்- இவ்விடங்களை முஸல்மான் இடித்ததைப் பற்றித் துக்கிக்கலாமா? கோயிலையும் கோயிலிலுள்ள கடவுளையும் துலுக்கன் இடிப்பதற்குக் கோயிலும் கோயில் கடவுளும் என்ன கர்மம் செய்தன? கர்ம பலன்தானே அனுபவிக்கும் காரணம்? கோயில் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அன்பர்களுக்கும் அய்ந்து வகையான பெரும் பாதகங்கள் செய்யும் ஓர் ஸ்தலமாகும்.&lt;br /&gt;2. இது பிரஹ தாரணியக உபநிஷத்தில் மாதுர்வர்க்கம், பிதுர்வர்க்கம் என இரண்டு பிரிவாகவே கூறியுள்ளது.&lt;br /&gt;பொருள்: ஒருவனுக்கு இரண்டு தந்தைகளிருந் தால், ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண்டும். பிண்டம் போடும்போது சொல்லவேண்டிய யேசத்வாமனு என்கிற மந்திரத்தை எதத்வாம் - தாதெனயேசயுவாமனு என்றிவ்வாறு சொல்லவேண்டும். (சிரார்த்த காலத்திய உபஸ்தான மந்திரம்) எழுந்து நின்று கீழ்க் குறித்தபடி சொல்லவேண்டியது.&lt;br /&gt;யன்மே மாதா பிப்ரமமாத, யச்சாரனனுவ்ரதம்;&lt;br /&gt;தன்மே ரேத,&lt;br /&gt;பிதாவ்ருங்க்த மாபூரன் யோபபதயதாம்;&lt;br /&gt;பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா.&lt;br /&gt;பொருள்: என் தாய் ஒழுக்கந் தவறிவிட்டாள்; அவள் தீய வழியில் ஒழுகினாள்! அந்த ரேதஸை (வீரியத்தை) தந்தையே உமதாக நினைத்துக் கொள்ளவேண்டும். வியபிசாரத்தினால் பிறந்தவனாகிய நான் கொடுக்கிற இந்தப் பிண்டத்தைத் தன் மகனால் கொடுக்கப் படுகிறதென்று நினைத்துப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பது பொருள். இந்தப் பிரமாணத்தைப் பின்பற்றி இப்போதும் சிரார்த்தம் நடத்திவருகிறார்கள்.&lt;br /&gt;முதற்கூறியபடி நெய் தேய்த்துக்கொண்டு புணர்ச்சி செய்து புத்திரன் பிறந்தால், அவன் தாய்க்கே உரியவன் என்று யாக்ஞவல்கியர் கூறுகிறார். அனேனவிதினா ஜாத; க்ஷேத்ரிண: ஸபவேத்ஸுத்&lt;br /&gt;இங்கு க்ஷேத்ரி என்றசொல்லிற்கு நிலத்தின் சொந்தக்காரன் என்று பொருள். மக்களைப் பெறுதல் பயிர்த் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வட நூலார்1&lt;br /&gt;இம்முறையை முகம்மது நபியும் தம் குரானில் கூறியுள்ளார்.&lt;br /&gt;இயற்கைக்கு முரணாகவே மனிதப் பெண்களையும் விலங்குகளோடு புணரச் செய்தல் முதலிய அருவருக்கத்தக்க காரியங்களும் கடவுள் வழிபாடாக அக்காலத்தில் நம்பி, அங்ஙனம் செய்து வந்திருந்தனரென்பது நான்காவது அத்தியாயத்தில் விளக்கமாக்கப்படும்.&lt;br /&gt;1. அஸ்வமேதம் முதலிய யாகங்களென்க.&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101228/news12.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-3141341055989531198?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3141341055989531198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3141341055989531198'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/25.html' title='ஞானசூரியன்-25'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-1722593130575103618</id><published>2010-12-27T12:00:00.000+05:30</published><updated>2010-12-27T12:00:20.722+05:30</updated><title type='text'>ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு</title><content type='html'>ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு&lt;br /&gt;ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை - ஏன்? இராசா திராவிடர் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் சுற்றிச் சுற்றி வருவதா?&lt;br /&gt;பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, டிச. 25- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெடிகுண்டு வழக்கு இவைகளில் சிக்கியவர்கள் யார்? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவா? இராசாவை மட்டும் குற்றம் சுமத்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தக் காரணம் இராசா திராவிடர் என்பதுதானே? என்று திராவி டர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பி னார்.&lt;br /&gt;தந்தை பெரியார் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 24.12.2010 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:&lt;br /&gt;தந்தை பெரியாருடைய நினைவு நாள் இன்று. இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பார்ப் பன ஊடகங்கள் ஆரியர் - திராவிடர் போராட் டத்தை எப்படி இன்றைக்கும் நடத்திக் கொண்டி ருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் என்று சொல்லுவதற்கு நான் சங்கடப் படுகின்றேன். ஏனென்றால், தமிழர்கள் என்ற பெய ரில் பார்ப்பனரும் சேர்ந்து நானும் தமிழன்தான் என்று வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;திராவிட உணர்வு&lt;br /&gt;எனவே, திராவிடர் என்ற உணர்வை தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். திரா விடர் கழகம் என்றே அதற்குப் பெயரிட்டார். தொலைந்து போன நம்முடைய அடையாளத்தை மீட்டெடுத்தார் தந்தை பெரியார்.&lt;br /&gt;இந்த உணர்வை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மகத்தான கடமை நமக் கெல்லாம் உண்டு. 1925 ஆம் ஆண்டுதான் சுயமரி யாதை இயக்கம் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தோன்றியது. சுய மரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரிடையான அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறித்தனம் இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது.&lt;br /&gt;ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் அது தனக்கே என்று சொல்லக் கூடிய அளவில் வந்து, இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, மதவெறியை மூல தனமாக வைத்து பி.ஜே.பி. கட்சி மத்தியிலே ஆண்டது.&lt;br /&gt;ஜெயலலிதாவுக்குப் பிரதமர் என்று நினைப்பா?&lt;br /&gt;இனிமேல் நாம்தான். எல்லாம் நாம்தான். வரலாற்றைப் புரட்டிப் போடலாம். அரசியலை நாம் தான் நிர்ணயிப்போம் என்ற ஆணவத்தோடு இருந்த ஆரிய சக்திகளின் இயக்கமாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இருந்தது. அந்த மதவெறி சக்தியை தோற் கடித்து மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திலே கலைஞர் தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது.&lt;br /&gt;இங்கே எதிர்கட்சித் தலைவியாக இருக்கின்ற ஜெயலலிதா இராசாவை விசாரித்தால் போதாது; கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார். இவர் என்ன பிரதமர் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? (கைதட்டல்) அல்லது அதி காரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? இந்த அம்மையாருக்கு அறிவு நாணயம் உண்டா?&lt;br /&gt;ஜெயலலிதா மீது சி.பி.அய். வழக்கு 10 ஆண்டு களாக நடந்துகொண்டு இருக்கிறது (கைதட்டல்).&lt;br /&gt;இராசா மீது யூகத்தின் அடிப்படையிலே குற்றச் சாற்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;இந்த அம்மையார் முதலமைச்சராக இருக்கும் பொழுது வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அப்படி பணம் வந்தால் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? அரசாங்க கஜானாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணத்தை யார் அனுப்பினார்கள் என்று தீர விசாரிக்க வேண்டும்.&lt;br /&gt;அதை விட்டு, விட்டு யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி தன்னுடைய கணக்கிலே வெளிநாட்டுப் பணத்தை வரவு வைத் துக் கொண்டார்.&lt;br /&gt;யோக்கியன் வருகிறான் சொம்பைத் தூக்கி உள்ளே வை!&lt;br /&gt;பெரியார் ஒரு பழமொழி சொல்லுவார்: யோக் கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை என்று சொல்வார் (சிரிப்பு - கைதட்டல்).&lt;br /&gt;இராசாவை கைது செய்ய வேண்டும் என்று இந்த அம்மையார் சொல்லுகிறார். இராசாவை கைது செய்ய முகாந்திரம் வேண்டும் வழக்குபடி. வழக்கில் முகாந்திரம் இருந்தால்தானே கைது செய்ய முடியும்? இதோ இங்கே வழக்கறிஞர்கள் உட்கார்ந் திருக்கிறார்கள். நீதிபதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;இது என்ன, இடிஅமீன் ஆட்சியா?&lt;br /&gt;எதுவும் சட்டப்படிதான் செய்ய முடியும். உடனே கைது செய்ய வேண்டும் என்றால் இது என்ன இடி அமீன் ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?&lt;br /&gt;சரி, இந்த அம்மையார் வழிகாட்டியிருக்கின் றாரா? இந்த அம்மையாருக்கு சி.பி.அய்.சம்மன். அனுப்பியிருக்கிறதே, அதற்காக இந்த அம்மை யாரைக் கைது செய்திருக்கிறார்களா? 30 வாய்தா வுக்கு மேலே இவருக்கு வழங்கியிருப்பதாலே முத லிலே ஜெயலலிதாவை அல்லவா சி.பி.அய். கைது செய்திருக்க வேண்டும்? (கைதட்டல்). எந்த பத்திரி கைக்காரராவது இதை எழுதியிருக்கிறாரா?&lt;br /&gt;காரணம் என்ன? முதுகில் பூணூல், அவ்வளவு தான். எனவேதான் சொல்லுகிறோம், இந்த நாட் டிலே மீண்டும் மனுதர்மத்தைத் துளிர்க்க விட மாட்டோம். குழி தோண்டிப் புதைப்போம். இந்த அம்மாவே சி.பி.அய். என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டவர்தானே!&lt;br /&gt;ஒரே ஒரு காரணம் இராசா திராவிடர் இனத் தைச் சார்ந்தவர். அது மட்டுமல்ல; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர். எனவே, அவருக்காகக் கேட்க நாதியில்லை என்ற நினைப்பு!&lt;br /&gt;சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்&lt;br /&gt;இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை, குடை என்று குடைந்திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு (கைதட்டல்). காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம். பெரியார், அண்ணா, கலைஞர் பள்ளியிலே பயின்றவர் (கைதட்டல்)..&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். தலைவரை பல மணி நேரம் சி.பி.அய் குடைந்து கேள்வி எழுப்பியும், அவர் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்று சாதாரணமாக ஒரு செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.&lt;br /&gt;இதுபற்றி பெரிதுபடுத்தி யாராவது செய்தி சொல்லியிருக்கின்றார்களா?&lt;br /&gt;சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணுப் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று, சதி எனக் கண்டோம் என்று பார்ப்பனப் பாரதி பாடியிருக்கின்றாரே. பார்ப்பன பாரதிக்கே பொறுக்க முடியாமல்தானே சொல்லயிருக்கின்றார்.&lt;br /&gt;அய்தராபாத் மெக்கா மசூதியில் வெடிவிபத்து வழக்கில் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குப் பங்கு இருக்கிறது என்று ஆதாரத்துடன் கேட்கிறார்கள். இது பயங்கரவாதத்தைச் சேர்ந்தது. இராசா வழக்கு பயங்கரவாதத்தைச் சேர்ந்ததா?&lt;br /&gt;சி.பி.அய். வழக்கில் சொல்வதென்ன?&lt;br /&gt;இவ்வளவு இழப்பு நடந்திருந்தால் என்று தானே ஸ்பெக்ட்ரம் வழக்கிலே சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;மக்களிடம் இதைச் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அடுக்கி வைத்துக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னால் போதுமா? ஆனால், சி.பி.அய். வழக்கிலேயே வெறும் 22 ஆயிரம் கோடி என்றுதான் போட்டிருக்கின் றார்கள்.&lt;br /&gt;ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் கோடியை கழித்து விட்டால், ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி புஸ் என்று போய்விட்டது. அனுமான இழப்பு - கற்பனையிலேயே இந்த நிலை.&lt;br /&gt;எவ்வளவு நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? பார்ப்பன ஊடகங்கள் உங்கள் கைகளிலே இருக்கிறது.&lt;br /&gt;இராசாவை நெருங்கி விட்டார்கள். கோபால புரம் திக் திக். என்ன திக் திக். திக் திக் என்று வேறு இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இருக் கிறது (சிரிப்பு கைதட்டல்).&lt;br /&gt;இன்றைய விடுதலையில் இதைப்பற்றி எழுதி யிருக்கின்றோம்.&lt;br /&gt;நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்&lt;br /&gt;நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம் தான் கோபாலபுரம். அதைச் சந்தித்த இடம்தான் பெரியார் திடல்.&lt;br /&gt;மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திட லுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.&lt;br /&gt;இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதி யின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.&lt;br /&gt;கலைஞரின் பொற்கால ஆட்சி&lt;br /&gt;நாங்கள் கேட்டோம். எங்ககிட்ட ஏதய்யா கருப்புப் பணம்? அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அதைத் தாண்டி கலைஞர் அவர்கள் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்துகிறாரா? இல்லையா?&lt;br /&gt;ஆறாவது முறையாகவும் கலைஞர் வருவது உறுதி&lt;br /&gt;மீண்டும் ஆறாவது முறையாக அவர்தான் முதலமைச்சராக வரப்போகின்றார். உறுதியாகத் தெரிந்து போய் விட்டது. மக்கள் தயாராகிவிட் டார்கள். பார்ப்பனர்களே நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சி தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறீர்களோ அடிக்க அடிக்க எழும் பந்து போல மக்கள் மனுதர்மத்தை - ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.&lt;br /&gt;மீண்டும் வரப்போவது கலைஞர் ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையைப் பெரியார் நினைவு நாளில் எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத் தின் மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள் என்று கூறி முடிக்கிறேன். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101225/news05.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-1722593130575103618?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/1722593130575103618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/1722593130575103618'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_27.html' title='ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-2198745793995683184</id><published>2010-12-24T20:59:00.002+05:30</published><updated>2010-12-24T21:04:11.154+05:30</updated><title type='text'>அந்த அரிமா நோக்கில்...!</title><content type='html'>அந்த அரிமா நோக்கில்...!&lt;br /&gt; &lt;br /&gt;நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!&lt;br /&gt;&lt;br /&gt;சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் மறைய மாட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்&lt;br /&gt;&lt;br /&gt;பாதையில் பயணிக்கிறோம் என்பதை&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் தன்னிகரற்ற&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கி.வீரமணி&lt;br /&gt; &lt;br /&gt;தலைவர்,&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101224/news03.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-2198745793995683184?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2198745793995683184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/2198745793995683184'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_24.html' title='அந்த அரிமா நோக்கில்...!'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-3613164310142663187</id><published>2010-12-22T22:48:00.001+05:30</published><updated>2010-12-22T22:48:34.914+05:30</updated><title type='text'>ஞானசூரியன் தொடர்-14</title><content type='html'>இதற்கு முன் எல்லோருக்கும் முதல்வனான பிராம ணன் எல்லா உரிமைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு, சில உரிமைகளை க்ஷத்திரியர்களுக்கும், அதைவிடக் குறைவாக வைசியர்களுக்கும் 1. தென்னாட்டிலும் க்ஷத்திரியர், வைசியர் என்று சில வகுப்பார் இருந்தபோதிலும், சாஸ்திர திருஷ்டியிலும், பிரமாண திருஷ்டியிலும் இங்குப் பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு வருணத்தினர் மட்டும் இருக்கிறார்கள் என்பது மனு வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவினான். சூத்திரர்களுக்கு ஒருவகையிலும் உதவி செய்யாமலும், ஏதேனும் ஒரு காலத்தில் அவர்கள் சொந்த நன்மைக்காக முயற்சித்தால், அக்கணமே கொலை முதலிய தண்டனைகளை விதித்து நசுக்கியும் வந்தார்கள். இவ்வுண்மை இதுவரை கூறிவந்த பிராமண வாக்கியங்க ளினால் நன்கு விளங்கும். அய்ரோப்பியர்களும் சுயநன் மையைப் பார்க்கிறவர்களே. எனினும், இந்தியர் என்று முற்கூறிய வகுப்பினர் முன்னேற்றடைய முயற்சிப்பதைத் தடுப்பதில்லை. ஆனால், சுயநலத்திற்குக் கேடுவிளையா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். இதை மறுப்பவர்கள், நேபாள தேசத்தின் ஆட்சி முறையை நேரில் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது அங்குச் சென்று பார்த்தவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டால் உண்மை புலப்படும். நேபாளம் சுதந்திர நாடு; பிரிட்டிஷ் அதிகாரத் திற்குக் கீழ்ப்படியவில்லை. இக்காலத்திலும் மனுஸ்மிருதி யின் கொடுங்கோலை அங்கேதான் காணலாம். அங்குச் சூத்திரர்கள் கல்வி கற்கவும், பொருளீட்டவும் உரிமை கிடையாது. நல்லுணவு, நல்லணி, நல்லாடை, நல்வீடு இவைகளும் இவர்களுக்கு ஆகா. அதுவோ பனி மிகுந்த நாடு. ஆயினும், குடிசையில்தான் வசிக்கவேண்டும். பால் குடித்த சூத்திரனை மனுதர்ம நூல் வழியாக இன்றைக்குத் தண்டிக்கிறார்கள். சூத்திர ஜாதியில் எங்காவது அழகிய பெண் ஒருத்தி தோன்றுவாளாயின், அவள் பிராமணனுக் கும், க்ஷத்திரியனுக்கும் சொந்தம். 1இத்தகைய பெண்ணை அவளது தாய் தந்தையர்கள் க்ஷத்தியனிடத்தில் ஒப்பித்து விட வேண்டும். இவ்விதமாகச் சூத்திரர்களைச் சார்ந்த வரையில் மிகவும் பயங்கரமானது. இடைக்காலத்தில் 2ஆரியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்த நம் நாட்டிலும் இவ் வகையாகக் கொடுங்கோலரசுதான் நடைபெற்றதோவென நினைத்து வருந்தவும் இடம் ஏற்படுகிறது. தேச சரித்திர மும், சிற்சில வகுப்பார்களின் ஒழுக்கங்களும் இதற்குச் சான்றாகும். இத்தகைய அரசாட்சியை வெறுக்க எந்த இந்துவுக்கும் உரிமையில்லை. திலகர், மாளவியா முதலிய இந்துமதத் தலைவர்களின் சுய ஆட்சித் திட்டமும் இத்தகையதே.&lt;br /&gt;&lt;br /&gt;1. மலையாளம் இதற்குச் சார்ந்ததாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2. சங்க இலக்கியங்களும் நிகண்டும் புகலும் தென் நாட்டில் சூத்திரன் என்று சொல் பிராமண மதத்திற்குப் புறம்பானவர்களையென்க. தங்கள் மதத்திற்குப் புறம்பான வர்களைக் கிறிஸ்தவர் அஞ்ஞானியென்றும், முகம்மதியர் காபா (பாவி) என்பது போலுமென்க.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரன் எலும்பு நொறுங்க வேலை செய்தால், அதனால் வரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் நன்றாய்த் தின்பார் களாம். சூத்திரன் வேலை செய்யாவிட்டால், உலகம் அழிந்து விடுமாம். என்னே மனுவின்நீதி! இத்தகைய மனுவுக்கும் குருக்களாயிருந்து விளங்கிய பிராமணர்களின் கருணைதான் என் னே! இராமாயண சம்பூ என்கிற நூலை இயற்றிய போஜ ராஜன் கூறுவதைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சைர் கதிர் ஜகதி சித்யதி தாம தஸ்சேத்&lt;br /&gt;&lt;br /&gt;தஸ்ய ப்ரமா சமரணை க்ருதகேத ரைஸ்சேத்;&lt;br /&gt;&lt;br /&gt;தேஷாம் ப்ரகாசனதசாச மஹீசுவாஸ்சேத்&lt;br /&gt;&lt;br /&gt;தானந்த ராக்வ நிபதேந்நனு மத ப்ராணாம்!&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: உலகத்தில் தருமத்தைப் பின்பற்றுவ தனாலேயே நற்கதியடைய முடியும். தரும நெறிகளை விளங்கவைப்பன வேதங்களாம். வெளிப்படுத்திய வர்கள் பிராமணர்கள். ஆகையால், பிராமணர்களைத் தவிர, வேறு யாரை வணங்குவேன்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போஜராஜன் பெரிய வித்வான். அடுத்தோர்களை ஆதரிக்கும் பெருங்கொடையாளி. அத்தகைய பெரியாரைக் கூட இந்தப் பார்ப்பனர்கள் ஏமாற்றினார்களே! இதனால் அரசன் செய்யவேண்டிய நீதியாவன:- சூத்திரர்கள் முன்னேற்றமடையாமல் தடுத்தல், அவர்களை இரவும், பகலும் வேலை வாங்கி, அதனால் வரும் வருமானத்தில் அன்ன சத்திரங்களும், வேத பாடசாலைகளும், கோயில் களுங்கட்டிப் பிராமணர்களுக்கு எல்லாத் துறைகளிலும் உதவி புரிதல் என்று ஏற்படுகிறதன்றோ? இங்ஙனம் செய்தால் சொர்க்கமும், மீறினால் நரகமும் வருமாம். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழிக் கிணங்க, குழந்தைப் பருவ முதற்கொண்டே இங்ஙனம் உபதேசிக்கப்பெற்ற க்ஷத்திரியர்களின் ஆட்சியை வேறெவ்விதம்தான் மாற்றமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இராமாயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இராமாயணம் என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்மவர்கள் பக்தியினால் மெய்மறந்து கூத்தாடுகிறார்கள். இதுவும் அறியாமையேயாகும். இராமன், பார்ப்பனர் சொன்னபடியே பார்ப்பனரல்லாதாரைத் துன்புறுத்தி வந்தவனாதலால், அவனை விஷ்ணுவின் அவதாரமென்று புகழ்ந்து, ஒவ்வொரு புராணத்திலும் பாடி வைத்ததோடு, அவனுக்கென்று தனியாக இராமாயணம் என்னும் ஒரு பெருங்காவியத்தையும் பாடி வைத்திருக்கிறார்கள். இந்த இராமன் இராட்சதர்களைக் கொன்றான் என்று சொல்லும் இடங்கள் எல்லாம் தமிழ் மக்களையே கொன்றதாகச் சரித்திர ஆராய்ச்சியால் ஏற்படும் உண்மையை, நம்மவர்கள் உணராமல் பொருள் நஷ்டமும், அவமானமும் அடைந்து வருகிறார்கள். அந்தோ! கொடுமை! கொடுமை! பார்ப்பனருடைய தீய ஒழுக்கங்களைக் கண்டு மனம் பொறாமல், அவர்களை வெறுத்தவர்களையும், சிவனை வழிபடுகின்றவர்களையும் இராட்சதர், அசுரர், நிசிசரர் இவை முதலிய பல இழிவுப் பெயர்களால் வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிவைத்துக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- http://viduthalai.periyar.org.in/20101211/news04.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-3613164310142663187?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3613164310142663187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3613164310142663187'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/14.html' title='ஞானசூரியன் தொடர்-14'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-3745196245152946255</id><published>2010-12-22T22:41:00.000+05:30</published><updated>2010-12-22T22:41:10.857+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-தொடர்-24</title><content type='html'>என்பன முதலிய வேத வாக்கியங்களில் இதே கருத்து அடங்கியிருக்கிறது. இக்காலத்தில் பெண் மக்கள் இத்தகைய விதிகளை அறியாதவர்களாயிருப்பது ஸ்திரீ சூத்ரௌ நாதீயேதாம் என்ற விதியில் கல்வி பயிலப் பெண்களுக்கு அதிகாரமில்லை என்று சொல்லியிருப்பது, இந்து ஆண் மக்களின் அதிர்ஷ்டவசமென்றறிய வேண்டும். இக்காலத்தில் நடைபெற்று வருகிற விவாக கருமங்களையும் அவைகளுக்குரிய மந்திர - தந்திரங்களைக் குறித்தும் நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும். விரிக்கிற் பெருகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருணத்தினரின் பெண்களையும், பிராமணன் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளலாம் என்று ஸ்மிருதிகளிலும், அங்ஙனமே நடந்து வந்திருப்பதைப் புராணங்களிலும் அப்படியே மலையாளத்தில் இப்போதும் நடந்து வருவதையும் பார்க்கலாம். மணப் பெண்களால் அனுஷ்டிக்கத் தகுந்த கருமங்களுள் ஒன்று 2ஸ்பத்நீ பாதனம் என்பதாகும். பதினாறாயிரத்தெட்டுப் பெண் களுக்குக் கணவனான கடவுளை 3அவனை வழிபடுகிற ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிற கன்னிகை ஆபிசாரத்தி(சூனியம் முதலிய மந்திர வித்தை)யினாலே யினும் தனது சக்களத்திகளை எதிர்த்து நிற்பதில் குற்றம் ஒன்றுமில்லை. 4ஆரோஹோரும் 1. இம்முறை உடற்கூறும், உடல் தொழிலும் நன் குணர்ந்தவர்களால் வகுத்தது. இதனால் உடல் வலிவு, புத்திக் கூர்மை உள்ள புதல்வரைப் பெறலாம். இல்லையேல் பலவகையிலும் கெடுதலே (பிஞ்சில் பழுத்தது)&lt;br /&gt;&lt;br /&gt;2. இச்சொல்லிற்குச் சக்களத்தியைத் துன்புறுத்துதல் என்பது பொருளாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பிறப்பிலாவது இடையிலாவது ஆண் தன்மை இல்லாமை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடைமீது ஏறு முதலிய வேதமந்திரங்களைக் கற்றுக் கொள்ளுகிற மாணக்கன் குருவினிடத்தில் பணிவுடன் நடந்து கொள்வானானால், அது இக்காலத்தில் அர்த்த ஞானமில்லாத (பொருளையுணராத) அத்தியயனத்தினால் உண்டான நன்மையேயாகும். இத்தகைய மந்திரங்களும் அவைகளின் பொருளும் பெற்றோரிடத்தில் தெளிவாகக் கூறப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவாஹேஷ் வன்ருதம் ப்ரூயாத்&lt;br /&gt;&lt;br /&gt;விவாக காலங்களில் பொய் சொல்லலாம் என்றும் விதியுள்ளது. புத்திரப்பேறில்லாமல் கணவன் இறந்துபோன ஸ்திரீயானவள் புத்திரனை விரும்பியவளாய், திருதராட்டிர னுடையவும் பாண்டுவினுடையவும் தாய்களைப் போல நடந்து கொள்ளலாமென்றும் விதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம் புத்ரகாம்யயா:&lt;br /&gt;&lt;br /&gt;ஸபிண்டம்வா ஸகோத்ரம் வாக்ருதாப்யக்தம் ருதரவிராத் (யாக்ஞவல்கியர்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின்1 அனுமதியைப் பெற்று ருதுகாலத் தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோ தரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையே னும் புணர்ந்து கொள்ள லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விதம் அசர்ப்பஸம்ப வாத கருத்தரிக்கிற வரைக்கும் செய்து கொள்ளலாம். இத னால், கற்புக்கு அழி வில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது. நாகரிகத்தின் முன்னணியில் நிற்கிற வகுப்பார்களுள் முதன்மையானவர்கள் என்று தங்கள் மூதாதைகளைப் பேசுகிற பார்ப்பனரின் கூற்றையும், மேற்குறித்த பிரமாண வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்ஙனமிருக்க, வியபிசாரம் என்று இவர்கள் கூறுவது எத்தகைய தீய ஒழுக்கத்தையோ, நாமறியோம் வியபிசாரத்திற்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழர்கள் இதனை முற்றும் அருவருப்பார்கள். - இதற்காகவே திண்டுக்கல்லையடுத்த சிறுமலையில் அவிசாரிக் கணவாயென்று ஒன்றுள்ளது. அதில், அவிசாரியாய்ப் போனவளை நிற்கவைத்துத் தள்ளி விடுவது வழக்கம். இன்னும் அப்பெயர் வழங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்ருதாதிகாரம் மலிணாம் பிண்டமாத்ரோப ஜிவினீம்;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரிபூதாமத: சய்யாம் வாஸயேத் வ்யபிசாரிணீம் (யாக்ஞவல்கியர்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: வியபிசாரம் பண்ணினவளின் ஹிமையை எடுத்துவிட்டு, ஓர் உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஓர் ஆண்டு வரையில் செய்தால் குற்றமற்றவளாவாள். (இத்தகைய பிராயச்சித்தத்தினால், வியபிசார தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கற்பைக் குறித்துக் கவலைப்படவும் வேண்டியதில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;அன்றியும், சுலபமான பிராயச்சித்தத்தினால் எத்தகைய குற்றமும் நீங்கிவிடுமென்று விதிக்கிற சமய நூற்கள் மனிதர்களுக்குத் தீமையையே பயப்பனவாம். இந்தப் பிரமாணங்களை நம்பி எண்ணிறந்த தீமைகளை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள் என்பது நிச்சயம். கீதை மஹாத்மியம், பிரதோஷ மஹாத்மியம், ஏகாதசி மஹாத்மியம், காயத்திரி மஹாத்மியம் முதலிய புண்ணிய கருமங்களை விரித்துரைக்கிற புராணங்களில் எதைப் பார்த்தாலும் அவைகளில் ஒவ்வொன்றிலும் பார்ப்பனக் கொலை, குரு மனைவியைப் புணர்தல் முதலிய கொடும்பாவங்களைக்கூட போக்கடிக்க வல்லமையுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில பண்டிதர்கள் இதை அர்த்தவாதம் என்று சொல்லு கிறார்கள். (பொய் என்பதற்கு அர்த்தவாதம் என்ற பரிபாஷைச் சொல்லை உபயோகிக்கிறார்கள் போலும்) -(தொடரும்).&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101222/news21.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-3745196245152946255?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3745196245152946255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/3745196245152946255'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/24.html' title='ஞானசூரியன்-தொடர்-24'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-5910057921610492092</id><published>2010-12-21T21:15:00.000+05:30</published><updated>2010-12-21T21:15:18.490+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-தொடர்-23</title><content type='html'>அவைகளைப் பிரமாணத்துடன் ஈண்டுக் கூறுவோம்.&lt;br /&gt;1. பிராமண விவாகமும் அதன் இலக்கணமும்&lt;br /&gt;ப்ராஹ்மே விவாஹ அஹூய தீயதே சக்த்யலங்க்ருதா;&lt;br /&gt;தஜ்ஜ: புனாத்யுபதய; புருஷானேகவிம்ச திம்&lt;br /&gt;பொருள்: தகுந்த வரனைத்தேடி அவனுக்குத் தன் பெண்ணைத் தன்னாலியன்றவாறு அணிகலனால் அலங்கரித்து விதிப்படி விவாகம் செய்துகொடுத்தல் பிராம்மண விவாகம். இந்தப் பெண் வயிற்றிற் பிறக்கிற புத்திரன் இருபத்தொன்று தலைமுறைகளைப் பரிசுத்தம் பண்ணுவான்.&lt;br /&gt;2.தெய்வ விவாகம், 3. ஆர்ஷ விவாகம் இவை இரண்டின் இலக்கணங்கள்&lt;br /&gt;யஜ்ஞஸ்த ரித்விஜே தைல&lt;br /&gt;ஆதாயார்ஷஸ்து கோத்வயம்:&lt;br /&gt;சதுர்க்த சப்ரதமஜ:&lt;br /&gt;புனாத்யுத்தரஜஸ் சஷட் (யாக்ஞவல்கியர்)&lt;br /&gt;பொருள்: யாகம் செய்விக்கிற ருத்விக்குகளுக்குள் (புரோகிதர்களுக்குள்) ஒருவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பது தெய்வ விவாகம். வரனிடத்தில் இரண்டு பசுக்களைப் பெற்றுக்கொண்டு கன்னிகையைக் கொடுப்பது ஆர்ஷ விவாகம். இந்த விவாகங்களிலிருந்து பிறக்கிற புத்திரர்கள முறையே பதினான்கு அல்லது ஆறு தலைமுறையைப் பரிசுத்தம் பண்ணுவார்கள்.&lt;br /&gt;4. பிரஜாபத்திய விவாகமும், அதன் இலக்கணமும் ஸஹதர்மஸ்சர்ய தாமித் யுக்த்வா&lt;br /&gt;யாதீய தேர்த்திஸே;&lt;br /&gt;ஸ்காய: பாவயத்யாத்ய:&lt;br /&gt;ஷட்ஷட்வம்ஸ்யான் ஸஹாத்மனா (யாக்ஞவல்கியர்)&lt;br /&gt;பொருள்: பெண்ணை விரும்பிக் கேட்கிற வரனுக்குப் பெண்ணைக் கொடுப்பது பிரஜாபத்தியம். இதிலுண்டாகும் புதல்வன் ஏழு தலைமுறையைப் பரிசுத்தமாக்குவான்.&lt;br /&gt;5. ஆசுர விவாகமும், அதன் இலக்கணமும்&lt;br /&gt;ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா&lt;br /&gt;கன்யாயாஸ்சைவ சக்தித;&lt;br /&gt;கன்யாதானம் துஸ்வாச்சந்தி&lt;br /&gt;யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்)&lt;br /&gt;பொருள்: சுற்றத்தார்களுக்குப் பணம் கொடுத்து கன்னிகையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆசுரவிவாகம்.&lt;br /&gt;6. காந்தர்வ விவாகமும், அதன் இலக்கணமும்&lt;br /&gt;இச்சயான்யோன் யஸம்பந்த;&lt;br /&gt;கன்யாயஸ்ச; வாஸ்யச;&lt;br /&gt;காந்தர்வ: ஸ்விதிர் ஜ்ஞேயோ&lt;br /&gt;மைதுன்ய காமஸம்பவ&lt;br /&gt;பொருள்: ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பத்தினால் கலந்துகொள்ளு தலே காந்தர்வ விவாகம்.&lt;br /&gt;7. இராக்ஷஸ விவாகமும், அதன் இலக்கணமும்&lt;br /&gt;ஹத்வா, சித்வாச பித்வாச&lt;br /&gt;க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்;&lt;br /&gt;ப்ரஸஹ்ய கன்யாஹரணம்&lt;br /&gt;ராக்ஷஸோ விதிருச்யதே  (மனு)&lt;br /&gt;பொருள்: வீட்டிற்குள் புகுந்து அங்குள்ளவர்களைச் கொன்றும் பயமுறுத்தியும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவதே இராட்சச விவாகம்.&lt;br /&gt;8. பைசாச விவாகமும், அதன் இலக்கணமும்&lt;br /&gt;ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா&lt;br /&gt;ரஹோ யத் ரோபகச் சதி;&lt;br /&gt;............................................. பைசாச:&lt;br /&gt;ப்ரதிகோஷ்டம்  (மனு)&lt;br /&gt;பொருள்: தனிப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதோ, மூர்ச்சித்து விழுந்திருக்கும் போதோ, புணர்ச்சி செய்தல் பைசாச விவாகம்.&lt;br /&gt;இத்தகைய எண் வகை 1மணங்களுள் விரும்பியவாறு ஏதேனும் ஒன்றின் முறையைப் பின்பற்றி நடந்து கொள்ளலாம். இதனால், அக்காலத்தில் நடந்துவந்த விவாக முறையை ஊகித்து உணருவதே நலம். இம்முறைகளைக் கண்டிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை. போதாயனனுடைய விதியையும் கேளுங்கள்.&lt;br /&gt;த்ரீணி வர்ஷாண் யருதுமதீ&lt;br /&gt;சாங்க்ஷேத பிதிர் சாசனம்&lt;br /&gt;ததஸ் சதுர்த்தே மாஸேத்&lt;br /&gt;விந்தேத ஸத்ருசம் பதிம்.&lt;br /&gt;1. தமிழ் நூற்களில் களவியல் எனவும், கற்பியல் எனவும் இரண்டே&lt;br /&gt;அல்ப்ய மானே ஸத்ருசே&lt;br /&gt;குணஹீனம் ஸமாஸ்ரயேத் (போதாயனர்)&lt;br /&gt;பொருள்: ருதுமதியான கன்னிகையானவள் 1மூன்று ஆண்டுகள் வரையிலும் பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பிறகு தானாகவே தக்க வரனைத் தேடி அடையலாம். தன் மனத்திற்கேற்றவாறு வரன் கிடைக்காதவிடத்து எத்தகைய புருஷனை யேனும் மணந்து கொள்ளலாம்.&lt;br /&gt;உதவையாசன் தாதாரம் லபத ஏவ,&lt;br /&gt;அதேச பார்த்தா பார்யாம்&lt;br /&gt;-(தொடரும்).&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101221/news18.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-5910057921610492092?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5910057921610492092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/5910057921610492092'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/23.html' title='ஞானசூரியன்-தொடர்-23'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6994046766464632525</id><published>2010-12-20T20:04:00.000+05:30</published><updated>2010-12-20T20:04:12.540+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-தொடர்-22</title><content type='html'>ஞானசூரியன்&lt;br /&gt;2. ஈண்டுப் பிரேதங்களென்றது பிசாசுகளையென்க. விண்ணுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் இடையிலுள்ள உலகினை அந்தரீட்சமென்பர் - இவ்விடங்களில் வாசம் செய்வோர்.&lt;br /&gt;பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. இங்கு ஜாதி வேற்றுமை கிடையாது. கண்டத்து இராமன் என்னும் பெயருடைய மந்திரவாதி ஒருவன் இருந்ததாகவும், அவன் பார்ப்பனருக்கு இயற்கைப் பகைவனாயிருந்த வஞ்சனையினால் பார்ப்பனர்கள் அந்த இராமனைக் கொன்றுவிட்டார்களென்றும் பரோபகாரியாக இருந்த இராமனிடத்தில் பொதுமக்களுக்கிருந்த அன்பினால் அவனுக்குக் கோயில் ஒன்றமைத்து, அதில் குடிவைத்துப் பூசித்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். எவ்வளவு கொடிய பிரம்மராட்சசு (பிராமணப் பிசாசு) ஆனாலும் இந்த இராமனுடைய சந்நிதியில் போய்ப் பிரார்த்தித்தால், அது அக்கணமே ஒழிந்துபோகும்.&lt;br /&gt;ஆனால், இந்த இராமன் உயிரோடிருக்கும்போது ஒரு பிராமணக் குடும்பத்துக்கு அடிமையாயிருந்த மையால், இப்போதும் அக்குடும்பத்தாரில் யாரேனும் ஒரு சீட்டெழுதி அனுப்பினால், அந்தக் கட்டளையை மீறி இராமனுடைய சந்நிதியில் ஒன்றும் நடைபெறாது. இது எனது அனுபவம். இதனால் அடிமைத்தனமும் அதனிடத்திலுள்ள நம்பிக்கையும் எவ்வளவு வன்மையுடையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;நான் வேண்டிக் கொள்வது யாதெனில், பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்ட நான்கு வருணங் களுக்கும் மனு முதலியோரின் சட்டத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டிய தில்லை. பார்ப்பனருக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் இருக்கிற சம்பந்தம்கூட நமக்கும் பார்ப்பனர்களுக்கும் கிடையாது. 1இவ்விரு வகுப்பார்களின் மூதாதைகள் முற்காலத்தில் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களும் மத்திய ஆசியாவில் குடியிருந்தவர்களும் என்று சரித்திரம் கூறுவதால், இவ்விரு இனத்தாரும் இரத்த சம்பந்தம் உள்ளவர்களென்பது மறுக்கமுடியாது. ஆனால், வெள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் மத ஒற்றுமை உண்டு. கிறிஸ்து மதம், பண்டைக் காலத்துப் புத்தர் மதமாகும். புத்தர் பண்டைக் காலத்துத் தமிழர் களாகிய சாம்மியவாதிகளின் (தமிழ்த் தலைவருடைய) மதத்தைக் கையாண்டவர். இந்தச் சித்தமார்க்கம், ஞானமார்க்கம் என்ற இரு வகைப்படும். தலைவர்களும் விஸ்வாமித்திரன், புத்தர், அரஹந்த முனிவர்கள் முக்கிய மானவர்கள்.&lt;br /&gt;ஆனால், இச்சம்பந்தம் இவர்களுடைய சினேகத்தால் குரங்குப் பட்டத்தையும், பகையால் ராட்சதப் பட்டத்தையும் அடைந்த நம்மவர்களுக்கில்லை. சில காலமாக நமது குரங்குப் பட்டத்தை எடுத்துவிட்டுச் சூத்திரப் பட் டத்தைத் தந்தார் கள். அதை ஏற்றுக் கொண்டதனால், இக்கதியை அடைந்தோம். ஆதலால், இந்தப் பார்ப்பனருடைய யாகம் உயிர்களைப் பதைக்கக் கொல்லுகிற ஒரு சடங்கு. கருணை, இரக்கம் முதலிய யாகங்களுக்குத் தடையாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்து வந்த நமது மூதா தையர்களின் கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகுவோம். இவர்களின் தீச்செயல்களுக்கு உடந்தையாயிராத நமது மூதாதைகளை இராட்சதர் என்றும், பச்சை மாமிசமும் இரத்தமும்தான் அன்னோர்களின் உணவு என்றும் இவர்களது ஆபாசச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பது நமக்கு நம் மூதாதையரிடத்தில் வெறுப்பு உண்டுபண்ணும் படியான தந்திரமென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது பகைவர்களாகிய பார்ப்பனர்களின் வேதத்தால் நமக்கு ஒரு பயனும் இல்லாவிடினும், இவர்கள் நம்மைத் தடைபண்ணின ஒரே குற்றத்திற்காகவும், இத்தகைய வேதத்தின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும். அதை நமது பிள்ளைகள் அவசியம் கற்கவேண்டும். எத்தகைய தடை நேரிடினும் அதை எதிர்த்து நாம் கொண்ட கருமத்தை நிறைவேற்றுவோம். பயனற்ற விஷயங்களில் கூட இந்தப் பார்ப்பனரை எதிர்த்தும் நமது மூதாதைகளின் பழைய நல் லொழுக்கங்களைப் கைப்பற்றியும் ஒழுகினாலன்றி நாம் ஈடேறப்போவதில்லை.&lt;br /&gt;மூன்றாவது அத்தியாயம்&lt;br /&gt;சுருதி ஸ்மிருதிகளில் தருமம் என்ற பெயரால் சொல்லப்பட்டவைகளுள் வருண தருமம் கூறி முடித்தோம். ஏனைய தருமங்களைப் பற்றியும் சில கூறுகிறோம். அவற்றுள் விவாஹமாவது:&lt;br /&gt;லோகேவ்ய வாயாமிஷமத்ய ஸேவா&lt;br /&gt;நித்யாஸ்து ஜந்தோர் நஹிதத்ரசோதனா (பாகவதம்)&lt;br /&gt;பொருள்: மைதுனம் (பெண் போகம்) மாமிசப் பக்ஷணம், கள் குடித்தல் இவை மனிதர்களுக்கு இயற்கைக் குணங்களாகையால், இவைகளைக் குறித்து விதி அவசியமில்லை.&lt;br /&gt;தினந்தோறும் உண்ண வேண்டும் என்று விதித்தாலும், விதிக்காவிடினும் இயற்கையாகவே புசிப்பார்களன்றோ? ஆயினும், சில ஒழுங்குகள் செய்து ஒரு வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதைக் கருதி, மணவினையானது எட்டுவிதமென்று ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;-(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101220/news04.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6994046766464632525?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6994046766464632525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6994046766464632525'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/22.html' title='ஞானசூரியன்-தொடர்-22'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-9047628516922053815</id><published>2010-12-19T19:27:00.000+05:30</published><updated>2010-12-19T19:27:11.722+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-தொடர்-21</title><content type='html'>ஆசீர்வாதத்திலும் வேற்றுமை பாராட்ட வேண்டுமென்று பிரத்திய பிவாதே சூத்ரே என்ற சூத்திரத்தினால் வடமொழி இலக்கண ஆசிரிய ராகிய பாணினி என்பவர் விதித்திருக்கிறார். பரவித்தையைப் போதிக்கிற பகவத்கீதையிலும் இவ்வேற்றுமை காணப்படுகிறது.&lt;br /&gt;யேபிஸ்யு பாபயோனய (கீதை. அத். 9 சுலோ. 32) என்று தொடங்கிய வாக்கியங்களாலும் மற்றும் சூத்தி ரர்களைப் பாவிகள் என்று சொல்லுகிற இடங்களையும் பாருங்கள். வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷியம் செய்ய வந்த சங்கராச்சாரியார், சூத்திரன் சந்நியாசத்திற்கும், சிரவணத்&lt;br /&gt;1. சூத்திரனிடத்தில் பிராமணன் க்ஷேமம் விசாரிப்பது, நீ நோயில்லாமல் இருக்கிறாயா? என்று மட்டுமே. வேறு, குசலம், அனாமயமா, க்ஷேமமா? என்று கேட்கக்கூடாது. நோயில்லாமல் இருந்தாலல்லவோ தின ராத்திரியும் பார்ப்பனர்கட்கு வேலை செய்யலாம். இதுவே கருத்து.&lt;br /&gt;திற்கும், ஞானத்திற்கும் உரியவனன்று என்கிற தனது பொறாமைக் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அபசூத்ராதிக்ரணத்தில்,&lt;br /&gt;பர்ஹமசூத்திர - ச்ரவணாத்ய யனார்த்த&lt;br /&gt;ப்ரதிஷேதாத் ஸ்ம்ருதேஸ்ச&lt;br /&gt;(அ. 1 பாகம் 3, சூத்திரம் 38)&lt;br /&gt;இந்தச் சூத்திரங்களின் பாஷியத்தில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:-&lt;br /&gt;1அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரௌத்ர&lt;br /&gt;புஜதுப்யாம் பூரயேத பூரயேத (கோதமதர்ம சூத்திரம்)&lt;br /&gt;பொருள்: வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கிவிட வேண்டும்.&lt;br /&gt;பத்யுஹவா ஏதத் ஸ்மசானம் வைசூத்ரஸ்த&lt;br /&gt;ஸ்மாத் சூத்ரஸ் மீபே நாத்யேதவ்யம்&lt;br /&gt;பொருள்: சூத்திரன் நடமாடுகிற இடம் சுடுகாடானதால், அவன் பக்கத்தில் வேதமோதலாகாது2&lt;br /&gt;உச்சாரணே ஜிஹ்வாச்சேதோ தாரணே சரீரபேத:&lt;br /&gt;பொருள்: சூத்திரன் வேதத்தை வாயினால் சொன்னால், நாக்கை அறுக்கவேண்டும். உணர்ந்து வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.&lt;br /&gt;1. சூத்திரத்தில் அதஹ என்றும் பூரயேத பூரயேத என்றும் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது கோதமனுக்குச் சூத்திரர்களிடத்திலிருக்கிற பகையை வெளிப்படுத்துகிறது. இவ்விதம் பார்ப்பனன் இங்கிலீஷாவது பைபிளையாவது வாசித்தால், இவ்விதத் தண்டனையுண்டு என்று சொல்லுவதுடன், இந்திய நாட்டிலுள்ள எந்தப் பாஷையும் வாசிக்க வசதியும், இந்தக் கிறிஸ்தவ கவர்ன்மெண்டு கொடாவிடில், இப்பார்ப்பனர்க்கு எவ்வளவு வருத்தம் உண்டாகுமோ, அவ்வளவு வருத்தம் பாக்கியுள்ள அப்பிராஹ்மண சமூகத்திற்கு உண்டென்று நினைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.&lt;br /&gt;2. ஆதலால்தான், அய்யங்கார் வீட்டுக்கு அய்யர் போனாலும், அய்யர் வீட்டுக்கு அப்பிராமணன் போனாலும் இவர்கள் குடியிருக் கும் தெருவுக்கு நாடார்கள், பறை யர்கள் வந்தாலும், மயானத்துக் கொப் பிட்டுச் சாணித் தண் ணீர் கொட்டுகிறார் கள். இது ஒரு பரம் பரை வழக்கம்.&lt;br /&gt;நசூத்ராய மதிம் தத்யாத்&lt;br /&gt;பொருள்: சூத்திரனுக்குப் பகுத்தறிவு உண்டாகும்படி யாதுஞ் செய்யலாகாது (யாது ஞான நூலும் கற்பிக்க லாகாது) இவை முதலியன.&lt;br /&gt;பிரமாண வசனங்கள் இப்படியிருக்க, இக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரில் 1சிலர் சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டவர்களும், ஏனையோரும் பகுத்தறிவில்லாது சங்கராச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லித் திரிகின்றார்களேயெனில், இது இவர்களின் அறியாமையையும், இதனால் இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வாழ்ந்து வருவது பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையும் விளக்குகிறது. தங்களின் கட்டளைப்படி நடக்காத பார்ப்பனரல்லாதாரைத் தண்டிக்க, மனுவின் சட்டப்படி பார்ப்பனருக்கு உரிமை இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பீரங்கி முனையிலும், கத்தி முனையிலும் அது செல்லாது.&lt;br /&gt;பார்ப்பனன் ஒருவன் எதிர்ப்பட்டதும் பார்ப்பனரல்லா தவர் எழுந்து வணங்குவதை இப்போதும் பார்க்கிறோம். இது பார்ப்பனரிடத்தில் தங்களுக்கிருக்கிற பேரன்பைப் பொறுத்தல்லவென்றும், வெகு நாள்களாகப் பார்ப்பனரால் துன்புறுத்தப்பட்டு, வழி வழியாக வந்த பயமே இதற்குக் காரணம் என்றும் அறியவேண்டும். இதைப்போலவே பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே உயர்ந்த ஜாதியா னொருவனைக் கண்ட தாழ்ந்த ஜாதியானும் எழுந்து வணங்குவது பயத்தினாலேயாகும். இறந்துபோய் 2பிரேதங்களான பிறகுங்கூட இவ்வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. சூத்திர பிரேதத்தால் உண்டான துன்பம் வைசியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும் வைசியப் பிரேதத்தின் உபத்திரவம், க்ஷத்திரியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. 1. தென்னாட்டில் காவி கட்டியிருந்தாலும், வெள்ளை கட்டியிருந்தாலும், சூத்திரனைப் பதேசி, பண்டாரம் என்பர். இல்லறத்திலுள்ள பார்ப்பானைச் சாமி சாமியென்று அழைப்பது சகஜமாகிவிட்டது. வேதத்தில் கருமம், பக்தி, ஞானம் என்னும் முக்காண்டங்கள் உள்ளன. கரும காண்டத்தில் ஒரு சிறிதும் அதிகாரமில்லாதவர்கள் ஞான காண்டத்தைப் படிக்கவோ, சந்நியாசம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாதென்பதை மறந்து கதறுகின்றார்கள். இவர்களுக்கு நல்லுணர்வை இறைவன் அருள் புரிவானாக. -(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101219/news25.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-9047628516922053815?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/9047628516922053815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/9047628516922053815'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/21.html' title='ஞானசூரியன்-தொடர்-21'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8743718526090728528</id><published>2010-12-19T19:24:00.000+05:30</published><updated>2010-12-19T19:24:32.516+05:30</updated><title type='text'>ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா?</title><content type='html'>பெரிய பலூனில் காற்று இறங்குது?&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நேற்று (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) அவர்கள் பேசியுள்ளார்.&lt;br /&gt;2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார்.&lt;br /&gt;அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!&lt;br /&gt;1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;(ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு)&lt;br /&gt;பார்ப்பன ஏடுகளின் பொய்ப் பிரச்சாரத்திரையை அருண்ஷோரி அய்யர்களே கிழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா?&lt;br /&gt;இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே!&lt;br /&gt;இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா?&lt;br /&gt;இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?&lt;br /&gt;வெறும் 22,000 கோடிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;(ஆதாரம் 16.12.2010 இந்து நாளேடு)&lt;br /&gt;இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று?&lt;br /&gt;இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே!&lt;br /&gt;இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்!&lt;br /&gt;எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!!&lt;br /&gt;(இதைத் துண்டறிக்கையாகவும் அடித்து மக்களுக்கு வழங்குங்கள்&lt;br /&gt;-ஆசிரியர்)&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101219/news07.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8743718526090728528?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8743718526090728528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8743718526090728528'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/1-76.html' title='ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா?'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-615349952835088448</id><published>2010-12-18T19:24:00.000+05:30</published><updated>2010-12-18T19:24:05.314+05:30</updated><title type='text'>ஞானசூரியன்-தொடர்-20</title><content type='html'>எப்படியென்றால், அடிப்பதற்குக் கையேனும், கோலேனும் ஓங்கினால் கையை வெட்டுதல்; காலால் உதைக்க முயன்றால் காலை வாங்குதல்; ஒரே ஆசனத்தில் இருக்க விரும்பினால், பிருஷ்ட பாகத்தை அரிந்துவிடவோ, சூடுபோட்டு நாட்டை விட்டுத் துரத்தி விடவோ செய்தல்; எச்சில் உமிழ்ந்தால், உதடுகளைத் துண்டித்துவிடுதல்; பிராமணன் அருகிலிருக்க மலத்தையோ, மூத்திரத்தையோ விட்டால் அந்த அங்கங்களைத் துண்டித்து விடுதல்; தலைமயிர், தாடி, கழுத்து விருஷணம் (விரைக்கொட்டை) இந்த அங்கங்களைப் பற்றி இழுத்தால், கையை வெட்டுதல் -இவ்வகையான தண்டனைகள் விதிப்பதோடு, சூத்தி ரனைப் பிராமணன் துன்புறுத்தினால், சூத்திரன் சரீரத்தில் தோலைப் பிளந்தால், நூறுபொன் அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் (ஒருவகை நாணயம்) அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் அபராதமும் விதித்தல், எலும்புக்குக் கேடுவரின் நாட்டை விட்டுத் துரத்தல் முதலியன செய்யத்தக்கன.&lt;br /&gt;இந்தியாவின் பழைய நற்காலம் நமக்கு ஏற்பட வேண்டும். அதன் பொருட்டு ஹோம்ரூல் வேண்டும் என்கிற திலகர் முதலிய தலைவர்களை ஆதரிக்கிற நம்மவர்கள மேற்குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஹோம்ரூல்வாதிகளின் அரசாட்சி மனுவின் அரசாட்சியே. மனுவின் ஆட்சியில் சூத்திரனுடைய நிலையை இன்னும் கேளுங்கள்.&lt;br /&gt;1. நீதியானதால் அதனையே தருமச் சட்டம் என்று கூறுகின்றனர். ஆ! கொடுமை! சூத்திரனை எவ்விதத் துன்பங்களும் செய்யலாம். அதைப் பார்த்தும், கேட்டும் பொறுக்க முடியாத சூத்திரர்கள் யாதாகிலும் சொல்லவோ, தடுக்கவோ செய்தால், அதற்குள்ள தண்டனைகள் ஜனங் களுக்குத் தெரியும் பொருட்டு இங்குக் கூறினேன். இவ்வாறே ரோம் அரசாட்சி நடந்தபோது, யெஹூதிகளும் ரோமன் ஜனங்களும் கலந்து, அந்நாட்டுக் குடிகளை வதைத்து வந்தனர். அத்தருணத்தில் யேசு என்பவர் இந்தியாவில் கல்வி கற்றுத் திரும்பிச் சென்று ஆங்குப் புத்தமதம் போதித்த காரணத்தால், அவரையும் இக்கொடுங் கோல் சட்டமும், இச்சட்டத்தாருடைய மதமும் வேரோடழிய வேண்டியது.&lt;br /&gt;சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;&lt;br /&gt;தாஸ்யாயைவ ஹிஸ்ருஷ்டோஸௌப்ராஹ்&lt;br /&gt;மணஸ்ய ஸ்வயம்புவா  (மனு)&lt;br /&gt;பொருள்: கூலி கொடுத்தாகிலும், இல்லாவிடிலும் சூத்திரனை வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே இவன் ஸ்வயம்பூ (பிரம்மன்) வினால் சிருஷ்டிக்கப்பட்டான். பின்னும்,&lt;br /&gt;நஸ்வாமினா நிஸ்ருஷ்டோபி சூத்ரோதாஸ்யாத் பிமுச்யதே;&lt;br /&gt;நிஸர்க்கஜம் ஹிதத்தஸ்ய கஸ்மாத்தஸ்மாத போஹதி (மனு)&lt;br /&gt;பொருள்: எஜமான் விட்டுவிட்டாலும் சூத்திரனின் அடிமைத்தனம் அவனை விட்டொழியாது. இது 1இயற்கையானதால் எங்ஙனம் ஒழியும்?*&lt;br /&gt;சக்தேனாபிஹி சூத்ரேண&lt;br /&gt;நகார்யோதன ஸஞ்சய&lt;br /&gt;சூத்ரேண தனமா ஸாத்ய&lt;br /&gt;பராஹ்மணானேவ பாததே (மனு)&lt;br /&gt;பொருள்: பொருளீட்டத் திறமையிருந்தாலும், சூத்திரன் அங்ஙனம் செய்யலாகாது. சூத்திரனுக்குப் பொருள் சேர்த்தால், பிராமணன் துன்புறுவான்.&lt;br /&gt;1.இயற்கையென்று நூல் கூறினும், அடையாள மொன்றும் காணாததனால், எல்லோரும் ஒரேவித உரிமையைப் பெறத்தக்க மனிதர்களேயன்றிச் சூத்திர னென்று தனிப்பட்ட ஒருவகையினர் இல்லையென்பது திண்ணம். சமஸ்காரம் செய்து கொண்டால் யாவரும் துவிஜரே. இது சூத்திரனுக்குக் கூடாதாம்.&lt;br /&gt;*. ஹே, பார்ப்பனரே! இன்னும் சில காலம் போக ஆங்கில அரசாட்சியார், கிறிஸ்தவர்கள் ஆனால் மட்டும் உத்தியோகமும் இங்கிலீஷ் படிப்பும் கொடுக்கப்படும் என்று விதிவெளிப்படுத்தி 7 கோடி ஜனங்கள் அவ்விதிப்படி உத்தியோகத்திற்கும், படிப்புக்கும் ஆசைப்பட்டுக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தபின், கிறிஸ்துவ மதத்திற்கு இனிமேல் இந்துக்களைச் சேர்ப்பதில்லை யென்று மற்றொரு ஆக்டை பாஸ் பண்ணினால், இந்த மனு உன்னையும் அப்படியே செய்துவிடும். யூரோப்பியன் பிராமணனும், யூரோஷியன் க்ஷத்திரியனும், நேட்டிவ் கிறிஸ்தவன் வைசியனும், இந்தியன் சூத்திரனுமாய் விடுவர்.&lt;br /&gt;உச்சிஷ்ட மன்னன் தாதவ்யம், ஜீர்ணானி வஸனானிச;&lt;br /&gt;புலறகாஸ் சைவதான்யானாம் ஜீர்ணாஸ்சைவ பரிச்சதா&lt;br /&gt;பொருள்: சூத்திரனுக்கு எச்சிலும், கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு பதரும் வைக்கோலும் கொடுக்க வேண்டும். இத்தோடு நில்லாமல்&lt;br /&gt;சூத்ரஸ்யது ஜூகுப்ஸிதம்  (மனு)&lt;br /&gt;காதில் விழும்போதே அருவருப்பை உண்டு பண்ணத்தக்க பெயர்தான் சூத்திரனுக்கு இடவேண்டும். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிப்பதிலும் வேற்றுமை யுண்டு.&lt;br /&gt;ப்ராஹ்மணம் குசலம்ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மனாமயம்;வைச்ய க்ஷேமம் ஸமாகம்ய&lt;br /&gt;சூத்ரமா ரோக்யமேவச (மனு)&lt;br /&gt;பொருள்: குசலமா? அனாமயமா? க்ஷேமமா? ஆரோக்கியமா? 1(நோயில்லாமல் இருக்கிறாயா?) என்று முறையே பிராமணன் முதலிய வருணத்தினரை விசாரிக்கவேண்டும். - (தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101218/news07.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-615349952835088448?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/615349952835088448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/615349952835088448'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/20.html' title='ஞானசூரியன்-தொடர்-20'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-6495091452667958274</id><published>2010-12-17T19:16:00.000+05:30</published><updated>2010-12-17T19:16:34.989+05:30</updated><title type='text'>பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்</title><content type='html'>பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்&lt;br /&gt;சென்னை, டிச.17- சென்னை சென்டிரல் அருகே ரயிலில் கற்பூரம் காட்டிய அய்யப்ப பக் தருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏ.சி. பெட்டியில் புகை வந்த தைத் தொடர்ந்து, ரயிலை பயணிகள் நிறுத் தியதால் பரபரப்பு ஏற் பட்டது.&lt;br /&gt;சென்னை சென்டி ரலில் இருந்து திருவனந் தபுரத்திற்கு நேற்று முன் தினம் இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் மெயில் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் கிளம் பிய சற்று நிமிடத்தில், பி-1 ஏ.சி. பெட்டிக்குள் திடீரென புகை பரவி யது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.&lt;br /&gt;ரயில் நின்ற காரணம் புரியாமல், என்னவோ.. ஏதோ.. என்று பயந்து, ரயிலில் இருந்த காவலர் களும், பயணச் சீட்டுப் பரிசோதகரும் சம்பந் தப்பட்ட பெட்டிக்கு ஓடிவந்தனர். அங்கு ஒரே புகை மூட்டமாக இருந் தது. இதனால், பெட் டியில் பயணிகள் அமர்ந் திருந்த ஒவ்வொரு கம் பார்ட்மெண்டாக சென்று ஆய்வு மேற் கொண்டனர்.&lt;br /&gt;அப்போது, 63 ஆம் எண் இருக்கையில் இருந்த பயணி, பய பக்தியுடன் அய்யப்ப சாமி படத்திற்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட் டிக் கொண்டிருந்தார். அவர் அய்யப்பன் கோவி லுக்கு மாலையும் அணிந் திருந்தார். அவர் ஏற்றிய கற்பூரத்தில் இருந்து வந்த புகைதான் ஏ.சி. பெட்டியில் பீதியைக் கிளப்பியுள்ளது.&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த நபரி டம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவ ரது பெயர் பி.டி. பிள்ளை என்றும், சொந்த ஊர் சென்னை என்றும் கூறினார். எதற் காகக் கற்பூரம் ஏற்றினீர் கள் என்று காவல்துறை யினர் கேட்டபோது, ``ரயில் பயணம் இனிதாக அமைய வேண்டும்'' என் பதற்காக கற்பூரம் ஏற்றி அய்யப்பனை வழிபட் டேன் என்று தெரிவித் தார்.&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை எச் சரிக்கை செய்துவிட்டு சென்றுவிட்டனர். ரயி லும் 10 நிமிடம் தாமத மாக புறப்பட்டு சென் றது. ஆனால், அந்த பெட்டியில் இருந்த பயணச்சீட்டு பரிசோத கர், அந்த அய்யப்ப பக் தரை விடவில்லை. ரயி லில் கற்பூரம் ஏற்றியது குற்றம் என்று கூறி, ரூ.1000 அபராதம் விதித் தார்.&lt;br /&gt;அந்த அய்யப்பப் பக்த ரும் வேறு வழியில்லா மல், அபராதத் தொகை யைக் கட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101217/news07.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-6495091452667958274?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6495091452667958274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/6495091452667958274'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_17.html' title='பக் &apos;தீ&apos; யால் பக்தன் கட்டிய அபராதம்'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8948851556926448867</id><published>2010-12-16T20:10:00.001+05:30</published><updated>2010-12-16T20:11:15.847+05:30</updated><title type='text'>ஆருத்ரா!</title><content type='html'>சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்பற்றிச் சிறப்பிதழ்கள்; ஆன்மிகத்தைப் பரப்பி மக்களை மொட்டை அடிப்பதற்கென்றே தான் பல ஏடுகள் இருக்கின் றனவே!&lt;br /&gt;அது என்ன ஆருத்ரா? மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் சிதம்பரத்தில் நடை பெறும் விழாவாம் இது. ஆருத்ரா அல்லது திருவாதிரை நட்சத் திரம் சிவனுக்குரியதாம். இந் நாளில் இரவு ஆரம்பித்து மறு நாள் காலைவரை அபிஷேகம் நடக்குமாம். (மூச்சுத் திணறப் போகிறது - ஜாக்கிரதை!)&lt;br /&gt;மக்கள் மத்தியிலிருந்து பக்தி ஒரு சிறு நொடியும் அக லாமல், உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தெருப் புழுதியையாவது செய்து கொண்டே இருக்கவேண்டுமே!&lt;br /&gt;மனிதன் தனக்குக் கற் பித்துக் கொண்டதையெல்லாம் கடவுளுக்கும் கற்பித்துவிட் டான்; காரணம் அந்தக் கடவு ளைக் கற்பித்ததே மனிதன் தானே!&lt;br /&gt;பஞ்சப் பூதங்களுடன் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) சேர்த்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபடு கிறார்களாம். அதில் சிதம்பரம் நடராஜன் என்பவர் ஆகாய வடிவத்தில் இருக்கும் கடவுளாம்.&lt;br /&gt;108 வகை நடனங்களில் கரை கண்டவராம். காளிக்கும் இவருக்கும் நடனப் போட்டி ஏற்பட்டதாம். காளி சற்றும் சளைக்காமல் ஆடினாளாம்.&lt;br /&gt;ஆண்களுக்கே உரிய குயுக்திப் புத்தியால் இடது காலை தலைக்குமேல் தூக்கி ஆடிக் காட்டினாராம் நடராஜன்.&lt;br /&gt;பெண்ணாகிய காளி காலைத் தலைக்குமேல் தூக்கி ஆபாசமாக ஆடமாட்டாள் அல்லவா! இந்தக் கீழ்த்தரமான ஆபாச நடவடிக்கையால் நட ராசன் நடனத்தில் வெற்றி பெற்றுவிட்டாராம். இப்படி அவர் ஆடியதற்குப் பெயர் ஊர்த்துவ தாண்டவமாம்!&lt;br /&gt;இதுபோன்ற கேவலங் களுக்குத் தத்துவார்த்தம் கற்பித்து விடுவார்கள். அப் பொழுதுதான் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். இதிலும் அப்படித் தான்; நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு அருள்பாலிப்பது போலவே, வானுலகத்தவர்க்கும், அருள் செய்வதற்கென்றே ஊர்த் துவத் தாண்டவம் ஏற்பட்டதாம்.&lt;br /&gt;இந்த நடராஜன் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்த போது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப் படுத்தி பாணினி ரிஷி சமஸ் கிருதத்தை உண்டாக்கினான். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - கல்கி, 25.6.1972) தெய்வ மொழி என்பது இதுதானோ - என்னே சாமர்த்தியமான புளுகு!&lt;br /&gt;மொழி எப்படி தோன்று கிறது என்ற அறிவியல் சிந் தனைக்கு இது எதிரானது அல்லவா!&lt;br /&gt;எல்லாம் பார்ப்பனர்களின் கைசரக்கே - ஆருத்ரா தரி சனம் என்கிறபோது அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நினைவிற்கு வருகிறது - இதோ ஒரு காட்சி!&lt;br /&gt;வெள்ளையன்: சாமி தானுங்க எசமான் இருக்கு.&lt;br /&gt;மாயேந்திரன்: இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா, கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார்) நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார் மாயேந் திரன் (வெள்ளை காலை ஊன் றுகிறான்). காலைத் தூக்கச் சொல்லுகிறார் மாயேந்திரன். (மறுபடியும் காலைத் தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊன்றுகிறான்) ஏய்! ஏண்டா ஊன்றுன? தூக்குடா காலை என்கிறார் மாயேந்திரன்!&lt;br /&gt;வெள்ளை: கால் வலிக்கு துங்க எசமான்&lt;br /&gt;மாயேந்திரன்: ஏண்டா, ரெண்டு நிமிஷம் நிக்கறதுக்கே கால் வலிக்குதுன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாமே இருக்குதடா?&lt;br /&gt;வெள்ளை: எங்கே எசமான்?&lt;br /&gt;மாயேந்திரன்: சிதம்பரத் திலே!&lt;br /&gt;வெள்ளை: அது கல்லு எசமான்!&lt;br /&gt;பக்தன் வாயாலேயே அண்ணா இப்படி சொல்ல வைத்தாரே - அதுதான் அண்ணா!&lt;br /&gt;ஆருத்ரா தரிசனத்துக் காகக் காத்துக் கிடக்கும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!&lt;br /&gt;- மயிலாடன்&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101216/news16.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8948851556926448867?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8948851556926448867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8948851556926448867'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_6842.html' title='ஆருத்ரா!'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-8237378522349912819</id><published>2010-12-16T19:01:00.000+05:30</published><updated>2010-12-16T19:01:55.556+05:30</updated><title type='text'>சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!</title><content type='html'>சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!&lt;br /&gt;மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!&lt;br /&gt;சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:&lt;br /&gt;நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!&lt;br /&gt;அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).&lt;br /&gt;ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;- http://www.viduthalai.periyar.org.in/20101216/news10.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3845892214688914249-8237378522349912819?l=kadavulillai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8237378522349912819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3845892214688914249/posts/default/8237378522349912819'/><link rel='alternate' type='text/html' href='http://kadavulillai.blogspot.com/2010/12/blog-post_5516.html' title='சொர்க்கவாசலின் மூடத்தனத்தைப் பாரீர்!'/><author><name>kadavulillai kadiravan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://1.bp.blogspot.com/_aYC4Ns-jXCU/Sv-Y85c4x7I/AAAAAAAAAIc/DWnCBo2PcRA/S220/UNESCO.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3845892214688914249.post-1405332789558010374</id><published>2010-12-16T19:00:00.000+05:30</published><updated>2010-12-16T19:00:04.387+05:30</updated><title type='text'>ஞானசூரியன - தொடர்-19</title><content type='html'>மகாராஷ்டிர தேசத்தைச் சிவாஜிக்கு முன் துலுக்கர்கள் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்து வேத சாஸ்திரங் களைக் கற்றறிந்த அவ்வூர்ப் பண்டிதர்களுள் நாற்பதுபேர் பிராமணரல்லாதவர்கள். துலுக்க ஆட்சி சிவாஜியின் ஆட்சியாக மாறினதும், பார்ப்பனர்கள் மனுவின் சட்டத்தைக் சிவாஜிக்கு எடுத்துக்காட்டி, மேற்சொன்ன நாற்பதின்மரையும்&lt;br /&gt;1. குமாரிலப்பட்டரும், திருஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும
